அகப்பயணம்

Monday, September 26, 2005

ஹமீது ஜாஃப்பருக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்



மதிப்பிற்குரிய சகோதரரே,
தங்கள் திண்ணை கட்டுரை உணர்ச்சி பூர்வமாகவும் அறிவுப் பூர்வமாகவும் இருந்தது. முகமது கரீம் சாக்லா தமது சுயசரிதையில் தேசிய உணர்வுள்ள முஸ்லீம்கள், மதச்சார்பற்ற ஹிந்து தலைவர்களால் தனித்து விடப்பட்டார்கள் என்றும் மதச்சார்பற்ற ஹிந்து தலைவர்கள் மதவெறியை தூண்டிய இஸ்லாமியர்களையே இஸ்லாமிய தலைவர்களாக கருதி அவர்களை தாஜா செய்ய முற்பட்டதால் தேசிய உணர்வுடைய இஸ்லாமியர்கள் தமக்கு துரோகம் இழைக்கப்பட்டதாகவே உணர்ந்தார்கள் என்றும் கூறியுள்ளார். அன்புள்ள சகோதரர் ஜாஃபர் அவர்களே இப்பிரச்சனையில் மிகச்சிறந்த துணிவான ஒரு நிலைபாட்டை எடுத்துள்ள தங்கள் துணிவுக்கு வணக்கங்கள். இத்தனை நேர்மையான சுய-சமுதாய விமர்சனம் என்னிடம் உண்டா என என்னையே நான் கேட்டுக்கொள்கிறேன். தங்கள் திண்ணை கட்டுரையை இங்கு மீண்டும் உள்ளீடாக இடுவதில் நான் பெருமை அடைகிறேன்.நாம் பல விடயங்களில் முழுக்க முழுக்க வேறுபடுகிறோம் என்பதையும் நான் அறிவேன். எனவே இங்கு இக்கட்டுரையை இட்டிருப்பதால் எனது அனைத்து கருத்துகளையும் திரு.ஜாஃப்பர் ஏற்கிறார் என்பது பொருளல்ல.
அரவிந்தன் நீலகண்டன்


இவர்கள் அறிவீனர்கள்


ஹமீது ஜாஃபர்


சானியா மிர்ஜா - ஔதருகின்ற சினிமா தாரகையுமல்ல, சின்னத் திரை சீரியலில் வரும் நட்சத்திரமுமல்ல. 110 கோடி மக்களின் ஔத வீசும் ஒரேயொரு டென்னிஸ் வீராங்கனை. இந்திய திருநாட்டிற்குப் பெருமைத் தேடி தரும் ஒரேயொரு வீர மங்கை.


அந்த பெண் விளையாட்டிற்காக அணிந்துள்ள உடையைப் பார்த்துவிட்டு பொருக்க முடியாத மார்க்க அறிஞர்கள் என்று பறைச் சாற்றிக்கொள்ளும் சிலர், அந்த உடை இஸ்லாத்திற்கு விரோத மானது, அணியக்கூடாதது, தடை செய்யப்படவேண்டியது, அப்படி இப்படி என்று ஃபத்துவா கொடுத்துள்ளார்கள் என்ற செய்தியை சன் தொலைக்காட்சியில் கேட்டபோது ஆயிரக்கணக்கான உள்ளங்களுடன் நானும் அதர்ச்சி அடைந்தேன்.


இவர்கள் அடிப்படைவாதிகளா? இல்லை இல்லை, இஸ்லாத்தின் பெயரைக் கெடுக்கவந்த அறிவீனர்கள், அபு ஜஹில்கள். படிக்கவேண்டும் அறிவைத் தேடவேண்டும் என்ற உண்மையான ஆர்வத்துடன் மதரஸாவுக்குச் சென்றிருந்தால் நல்ல கருத்துக்கள் வௌதவரும். எதோ வறுமைக்குப் பயந்து அங்கேயாவது நல்ல சோறு கிடைக்குமே என்ற எண்ணத்தில் ஐந்தேழு ஆண்டுகள் பெஞ்சைத் தேய்த்துவிட்டு வௌதவந்தால், இவர்களிடமிருந்து என்ன வௌதவரும்? இப்படிப்பட்ட தீர்ப்புகள்தான்! இவர்களுக்கு அல்லாஹ்வையும் தெரியாது, ரசூலையும் தெரியாது, குர்ஆனும் புரியாது, ஹதீஸும் விளங்காது.


பெண்கள் படிக்கக்கூடாது விளையாடக்கூடாது, வேலைக்குப் போகக்கூடாது என்று எங்கேயாவது இறைவன் சொல்லியிருக்கிறானா? இல்லை அவனது தூதர் ரசூல் (சல்) அவர்கள்தான் சொல்லியிருக்கிறார்களா? எதையும் சிந்தித்துப் பார்க்காமல் நீங்களாக ஒரு முடிவு எடுத்து ஃபத்துவா கொடுப்பதல்ல! பெரியப் பெரிய தலைப்பாவும் நீண்ட தாடியும், கையில் தஸ்பிஹ் மணியும் வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதாது? ஆழ்ந்த சிந்தனையும் தௌதவான அறிவும் வேண்டும். இப்படிப்பட்டவர்கள் ஏமாற்றுகாரர்கள் என்று அப்போதே இமாம் கஜ்ஜாலி (ரஹ்) அவர்களும் தக்களை ஞானி பீர் முஹம்மது அப்பா அவர்களும் சொல்லிவிட்டார்கள்.


பெண் என்பவள் ஆணுடைய இச்சையைத் தணிக்கக்கூடிய வடிகால் அல்ல; பிள்ளை பெற்று கொடுக்கக்கூடிய இயந்திரம் அல்ல; அடுப்படியில் அடங்கிக்கிடக்கும் அடிமையும் அல்ல. அவள் மென்மையானவள். இறைவனுடைய படைப்புகளிலேயே மிக புனிதமானப் படைப்பு பெண். இதை இந்த அறிவீனர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். உன்னிடம் வீரமிருந்தால் அவளிடம் விவேகம் இருக்கிறது; உன்னிடம் கோபம் இருந்தால் அவளிடம் சாந்தம் இருக்கிறது; உன்னிடம் ஆனவம் இருந்தால் அவளிடம் அரவணைப்பு இருக்கிறது; எல்லாவற்றிற்கும் மேலாக தன்னையே தியாகம் செய்யும் அந்த தாய்மை இருக்கிறது.


ஒரு பெண் விளையாடுகிறாள் என்றால் அதற்கென்று தனி பயிற்சி, தனி உடை இருக்கிறது. முஸ்லிம் பெண் என்பதற்காக புருக்கா அணியமுடியாது; ஹிந்து பெண் என்பதற்காக புடவைக் கட்டமுடியாது; கிருஸ்துவ பெண் என்பதற்காக நீண்ட அங்கி அணியமுடியாது. (Emphasis mine not author's) அவள் விளையாடும்போது நீ ஏன் அவளது அங்கங்களைப் பார்க்கிறாய்? அவள் முகத்தில் தெரியும் உணர்ச்சியைப் பார்; கண்களில் தெரியும் கூர்மையைப் பார்; பந்து எடுக்கும் லாவகத்தைப் பார்; அதை அடிக்கும் வேகத்தைப் பார். அப்போது புரியும் அவளது திறமை, துணிவு, சக்தி, வீரம், சாதுர்யம், அடக்கம் இவை அனைத்தும்.


முடிந்தால் எங்களுடன் சேர்ந்து அவள் வெற்றி மேல் வெற்றி பெற்று உலகில் முதலிடத்தைப் பெறவேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். இல்லாவிட்டால் ஒதுங்கி இருங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது, இஸ்லாத்திற்கும் நல்லது.



அருஞ்சொற்கள்:

  • ஃபத்துவா - மார்க்க தீர்ப்பு
  • அபு ஜஹில் - அறிவீனனின் தந்தை, பெருமானார் காலத்து இஸ்லாத்தின் எதிரி
  • தலைப்பா - தலைப்பாகை
  • தஸ்பீஹ் - இறை திருநாமத்தை துதிக்க உபயோகப்படுத்தும் 100 மணிகள் கொண்ட மாலை
  • மதரஸா - அரபி பாடகசாலை
  • (சல்) - சல்லல்லாஹு அலைஹி வ சல்லம்
  • (ரஹ்) - ரஹ்மத்துல்லாஹி அலைஹி

Hameed Jaffer
e.mail: maricar@emirates.net.ae

Saturday, September 17, 2005

வெளிக்கிரக அறிவார்ந்த நாகரிகங்களை கண்டுபிடிக்க நீங்க உதவலாமே!



உள்ளப்போற முன்னாடி ஒரு புளிச்சுப்போன ஜோக்குங்க. வெளிக்கிரகத்தில அறிவுள்ள உயிரினங்கள் இருக்கான்னு கண்டுப்பிடிக்கப் போறீங்களா அதுக்கும் முன்னாடி இந்த கிரகத்துல அறிவுள்ள ஜீவராசிங்க இருக்கான்னு கண்டுபிடிங்களேன். ரொம்ப சமயம் நம்ம கணினியோட முழு சக்தியையும் நம்ம பயன்படுத்துறதில்லீங்க. அதே நேரம் பிரம்மாண்டமான கணினி ஆற்றல் தேவைப்படுற சில அறிவியல் சமாச்சாரங்களும் இருக்குதுங்க. உதாரணமா சொன்னாமாதிரி வேற நட்சத்திர மண்டலங்கள்ல அறிவுள்ள ஜீவராசிங்க இருக்கா அவங்க ஏதாவது செய்திய ஏதாவது அலைவரிசைல அனுப்புறாகளா அப்படீன்னு பார்க்கிறது. இதுக்கு நம்ம பிரபஞ்ச வெளில இருந்து வர்ற மின்காந்த அலைகளையெல்லாம் ஆராயணும். பிரபஞ்சத்தில இயற்கையா இருக்கிற பொருட்களும் இந்த மின்காந்த அலைகளை அனுப்புறதால இந்த அலைவரிசைகளுல ஏதாவது செயற்கைத்தன்மை இருக்கான்னு பாக்கணுங்க. "அதுக்கெல்லாம் நாங்க பணம் ஒதுக்குவமா...சும்மா அலைவரிசைகள்ல செய்தி இருக்கான்னு பார்த்துட்டு இருக்கிறதுக்கு மக்கள் வரிப்பணமா?" அப்படியெல்லாம் அரசியல்வாதிங்க கிட்டாருந்து கேள்வி வர்றதுனால தர்ம சங்கடங்களும் ஏற்படுங்க. இதனால உலகத்துல உள்ள எல்லா நம்ம மாதிரி சாதாரண ஜனங்க கிட்ட உள்ள கணினிகளோட இந்த பயன்படுத்தப்படாம இருக்கிற ஆற்றலை நாம வேல செஞ்சிட்டுருக்கும்போதே அதும்பாட்டுக்கு பின்னாடி இந்த ஆராய்ச்சி வேலைக்கு செலவிடுறமாதிரி ஒரு ஏற்பாட்ட சில நல்ல ஆத்மாக்கள் சேர்ந்து செஞ்சிருக்காங்க. வான்வெளிலேருந்து உலகமெங்கும் ரேடியோ டெலஸ்கோப்புகள் மூலம் சேகரிக்கிற மின்காந்த அலை தரவுகளை உங்க கணினிக்கு இறக்குமதி பண்ணி நீங்க வேற வேலை செஞ்சிட்டுருக்கும் போது அந்த அலைக்கூட்டத்தில ஏதாச்சும் தலைல ஆண்டனா வச்ச பச்சை மனுசங்க அனுப்பிச்ச செய்திகள் ஏதுனாச்சும் இருக்குறாப்பில தெரியுதான்னு பாத்து அனுப்புறதுக்கான மென்பொருள் இங்கே கிட்டும் பாருங்க. ஒருவேளை ஆண்ட் ரோமிடா காலக்ஸிலயோ அல்லது காலபுருஷன் அப்படீங்கிற ஓரையன் நட்சத்திரக்கூட்டத்திலேயோ இருக்கிற ஒரு கிரகத்துல இருந்து வர்ற 'நான் இங்கு நலமே நீ அங்கு நலமா' மாதிரி ஒரு மின்காந்த கோலத்தை கண்டுபிடிக்கிறது உங்களோட கணினியா இருந்துச்சுன்னா தமிழர் எல்லாரும் காலரை உசத்தி விட்டுக்கிடலாம் இல்லீங்களா. இங்கேயும் கொஞ்சம் பாருங்க.
வேற்றுகிரக வாசிங்கன்னு மட்டுமில்லீங்க:
  • உலக பருவநிலை முன்னறிவிப்புக்கான மாடலிங்(இங்கே பாருங்க),
  • புரதத்தொடரை வச்சு புரத அமைப்பைக் கண்டுபிடிக்கிறதுக்கு ( இங்கே
  • சுழல்கிற நியூட்ரான் நட்சத்திரங்களை (பல்ஸாருன்னும் சொல்வாங்க) தேடுறதுக்குஇங்கே
இப்படி பல ஆராய்ச்சிகளுக்கு -இயற்கையோட மர்மங்களை தெரிஞ்சுக்கிறதுக்கு உங்க கணினியோட ஆற்றலை நீங்க குறைவா பயன்படுத்தறப்ப கொஞ்சம் கடன் கொடுக்கலாங்க. முதல்லேயே சொல்லியிருந்த மாதிரி இங்கேருந்து நீங்க அதுக்கான மென்பொருளை இறக்கிகிடுறீங்களா? உங்க ஸ்கிரீன் ஸேவருல்ல இந்த வேலை நடக்கிறதயும் நீங்க பார்க்க முடியுங்க. ஒரு வாரம் ஊருல இருக்க மாட்டேங்க. அதுனால ஒருவாரம் கழிச்சு பாக்கலாம். அதுக்குள்ள ஏதாவது வேற்றுகிரகவாசியோட மெசேஜ் கிடைச்சா மறக்காம சொல்லுங்க.

Friday, September 16, 2005

சானியா மிர்ஸாவுக்கு மிரட்டல்


மதக்கோட்பாட்டின் படி ஆடை அணியாவிட்டால் சானியா மிர்ஸாவை விளையாடவிட மாட்டோம் என இஸ்லாமிய அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. இதையடுத்து சானியாவுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என கோல்கத்தா நகர காவல்துறை கூடுதல் ஆணையர் மோகன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்....கோல்கத்தாவை சேர்ந்த ஜமாத்-இ-உலேமா-இ-ஹிந்த் எனும் அமைப்பு சானியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இஸ்லாமிய மதக்கோட்பாட்டுக்கு எதிராக ஆடை அணிந்து விளையாடுவதை நிறுத்தாவிட்டால் சானியா மிர்ஸாவை விளையாடவிட மாட்டோ ம் என அந்த அமைப்பு மிரட்டியுள்ளதாகத் தெரிகிறது.... (தினமணி செய்தி : செப்டம்பர் 17-2005) முழு செய்தியும் இங்கே பார்க்க: தினமணி செய்தி
உண்மையிலேயே வருத்தமான விவகாரம்தான் இது. அந்த பெண்ணிற்கு தேவையற்ற மன-அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆனால் இவற்றை மீறி அவர் எழுந்து பிரகாசித்தால் இஸ்லாமிய சமுதாயத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பாரத பெண் சமுதாயத்திற்கே இது ஒரு ஆற்றலேற்றம் (empowerment) அளிக்கும். மேற்கு வங்க அரசு ஒவ்வொரு முறையும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளிடம் மண்டியிட்ட அரசு. உதாரணமாக தஸ்லிமாவின் நூலை தடை செய்தது; மதரசாக்களில் ஐஎஸ்ஐ செயல்பாடுகள் குறித்து கூறி பின்னர் மறுதலித்தது என பல உதாரணங்களைக் கூறலாம். மார்க்ஸியத்திற்கும் இஸ்லாமிய மேலாதிக்க வாதத்திற்கும் இருக்கும் சில இணைத்தன்மைகள் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். அல்லது பங்காலி பாபு திமியாக மாறிவிட்டதும் காரணமாக இருக்கலாம். எதுவாயினும் வங்க அரசும் மிர்ஸாவை 'இஸ்லாமிய உடை' அணியக் கூறி வற்புறுத்தாமல் இருந்தால் சரி.பாரதத்தின் பெண் குழந்தைகள் நலம் குறித்த சர்வதேச நல்லெண்ண தூதுவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மூவரில் சானியாவும் ஒருவர் என்னும் முறையில் இந்த கீழ்த்தர மிரட்டல் பாரத இறையாண்மைக்கும் ஒரு சவால்.


இந்த உள்ளீட்டினைத் தொடர்ந்து பின்னோட்டத்தில் ஒரு நண்பர் ஒரு முக்கிய சுட்டியினை அளித்திருந்தார், அதனையும் அதனைத் தொடர்ந்து எனது பதிலையும் இந்த உள்ளீட்டுடன் இணைத்துள்ளேன். நண்பரின் பின்னோட்டம் சிவப்பு வர்ணத்தில் உள்ளது:
Arvindan,
This discussion on sania's dress looks funny.You might be interested in the website too.
http://www.jihadwatch.org/dhimmiwatch/archives/008066.php
I sent you an email before 10 days.Just an appreciation of your jainulabdeen and vedalam article.Maybe you were in bengal then. Good luck in your quest for truth.

எனது பதில்:
அன்புள்ள அநாநிமஸ்,

நீங்கள் தானா அது. மகிழ்ச்சியும் தங்கள் பாராட்டுகளுக்கு நன்றியும். பதிலளிக்காமைக்கு மன்னியுங்கள். சானியாவின் உடை குறித்த 'சர்ச்சை' 'funny' ஆக உள்ளதாக கூறியுள்ளீர்கள். It is not funny and it is disturbing. டெல்லியில் மாநில ஆட்சியில் பெண்களுக்கு உடை கட்டுப்பாடு கொண்டுவந்தபோது அதையும் நான் எதிர்த்தேன். ஒரு முக்கியமான பாஜக தலைவரிடம் நான் கூறிய வார்த்தைகளை கூறுகிறேன், "பெண்களின் உடை நீளங்களை குறித்து பத்வா அளிப்பதை இலட்சிய தேசத்தின் அறிகுறிகளாக கொள்பவர்களால் நல்ல நிர்வாகிகளாகவோ அல்ல தேச புனர் நிர்மாணம் என நீங்கள் ஏற்றெடுத்துள்ளதாக கூறுகிற கடுமையான முள் நிறைந்த பாதையில் நடக்கும் விவேகம் கொண்டவர்களாகவோ இருக்க முடியாது." மறைந்த சீதாராம் கோயல் கூட இதே வித கருத்தினைக் கொண்டிருந்ததாக பின்னர் அறிந்தேன். மிகக் கணிசமான அளவு ஸ்வயம் சேவகர்களிடமிருந்தே எனது கருத்துக்கு ஆதரவு கிடைத்தது. முக்கியமான விஷயம் என்னவென்றால் மிர்சாவிற்கு உடைக் கட்டுப்பாடு விதித்த தலை கழண்ட அஃறிணைகள் அனைத்து சமுதாயங்களிலும் உள்ளனர். ஆனால் இஸ்லாமில் அது 'being disgustingly funny' என்கிற அளவையும் தாண்டி ஏறத்தாழ ஒட்டுமொத்த அளவில் அதனை அவர்கள் வாழ்க்கை நெறி என்பது போல வலியுறுத்துவதும், அதனை மீறுபவர்களை எந்த அளவிற்கும் சென்று தண்டிக்க தயாரவதும் தான். தாங்கள் அளித்திருந்த சுட்டி முக்கியமானது. அதில் டால்பின் என்கிற பெயரில் ஒருவர் அளித்துள்ள உள்ளீடு இந்த 'சர்ச்சை'யின் முழு வேதனையை காட்டுகிறது.
-------------------------------------------------------
" Go back and reread her statements. Try reading between the lines. Try feeling her tone, her voice. It's faltering. She's scared. A thin thread of fear goes through her entire speech and is most vividuly manifested in the following sentence: "Every word I speak, every skirt I wear is discussed and analysed. I have to take all this in my stride. That's why these days I prefer to stay at home." Note the last sentence. She is already intimidated enough to spend her days in isolation from the rest of the world. Wherever she goes, she sees her former Muslim friends and supporters turning against her in a matter of days and even hours. Sania is learning a painful lesson. I think she gradually begins to understand where the true loyalties of her fellow Muslims lay. They're not with her. In Islam, the concept of personal loyalty isn't nearly as powerful as in the secularized cultures. What matters the most is loyalty to the word of God who has banned all possible displays of a female pride. When it comes to standing for Sania or standing for Islam, her friends make an abhorrent but fairly predictable choice: to stand for Islam. No one wants to be called an apostate. But, alas, that's not the worst part.It is at this age when having support in one's endeavours matters the most. The values and aspirations of a young mind haven't been shaped completely yet, and that's why encouragement from the closest people plays a crucial role in one's future career. Sania needs exactly that." And she doesn't get it an ounce of it.
Her own father, who once encouraged her to begin playing tennis, now seems to agree with the members of Ulema. See more here: He wants Women's Tennis Association to twist its regulations to allow Sania to wear proper Muslim clothing. Now, having said that, just imagine what happens behind the walls of Sania's house. She faces DAILY pressure from her closest relatives to start behaving 'properly'

----------------------------------------------------------
உங்களையோ என்னையோ சானியாவின் தகப்பனாரின் இடத்தில் வைத்து பாருங்கள். என்ன சொல்லுவோம், " மகளே உனக்கு ஏன் இந்த வம்பு. இந்த கிறுக்கனுங்க என்ன செய்வான்களோ தெரியாது. பேசாம நீயும் அந்த ஈரான் பொண்ணுங்க மாதிரி டிரெஸ் பண்ணிட்டு விளையாடு" என்று தானே சொல்லுவோம்? வெளியில் என்ன சொல்லுவோம்? பயந்து விட்டோம் என்றா? இஸ்லாமிய கலாச்சாரத்தின் உயர்வினை புரிந்து கொண்டோம் என்றுதானே?இஸ்லாம் வெற்றி பெறும், நமது தனி மனித சுதந்திரம் தோல்வியுறும் புள்ளி இதுதான். இஸ்லாமின் எதிரிகள் எனக் கருதப்படுவோர் மனங்களில் அச்சத்தை உருவாக்குவது ஜிகாதின் முக்கிய அம்சங்களில் ஒன்று. மீண்டும் தங்கள் சுட்டிகளுக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
மேலும் அறிய சுட்டிகள்:
இங்கே
ஜிகாத் வாட்ச்-திமி வாட்ச்
பிபிஸி-1
பிபிஸி-2

Thursday, September 15, 2005

நேசகுமாருக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை மிரட்டல் குறித்து


அண்மையில் தமிழோவியத்தில் நேசகுமார் தமக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலை குறித்து எழுதியிருந்தார். இதனை உதாசீனப்படுத்துவதற்கு இல்லை என்பேன். நேசகுமார் இணையத்தில் எழுதியவற்றை பிரசுரித்திருந்தால் இந்நேரம் அவரது கதை முடிந்திருக்கும். அதே சமயம் இணைய தளத்தில் எழுதப்படுபவை பிரசுர தளத்திற்கு வருவதென்பது சிறிது காலமெடுக்கும் ஆனால் நிச்சயமாக நடக்கக்கூடிய நிகழ்வேயாகும். எனவே இணைய தளத்தில் எழுதுபவர் மீதும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட முடியும் எனும் ஒரு சூழலை ஏற்படுத்தினால் தமிழ் இணைய உலகில் சிறிதே விட்டுப்போயிருக்கும் திமித்தனத்தை மீண்டும் கட்டுக்கோப்புடன் உருவாக்கலாம் என்பது நேசகுமாரை குறிவைக்கும் ஆசாமிகளின் எண்ணமாக இருக்கலாம். ஜிகாதிகளால் கொல்லப்பட்டவர்களுக்கு தமிழ் ஊடகங்களில் காணப்படும் போக்கு ஜிகாதி வெறியர்களுக்கு மிகுந்த ஊக்கம் அளிப்பதாக உள்ளது. உதாரணமாக ஏழை இஸ்லாமிய மாணவர்களுக்கும் உதவிய மதுரை பேராசிரியர் பரமசிவம் ஜிகாதிகளால் கொல்லப்பட்டதற்கு எவ்வித கண்டனமும் எழவில்லை. அவ்வாறே அண்மையில் இந்து மக்கள் கட்சியின் காளிதாஸ். இதில் தினமலர் காளிதாசை கொன்ற ஜிகாதியின் வாக்குமூலத்தை (தன்னிலை விளக்கத்தை) ஒரு அரசியல் தலைவனின் வாக்குமூலம் போல பிரசுரித்திருந்தது. அவர் இஸ்லாமிய பெண்களை தரம் தாழ்ந்து விமர்சித்ததுதான் அவரைக் கொன்றதற்கு காரணமாம். இத்தகைய நியாயப்படுத்துதல்கள் ஜிகாதி வெறியர்களுக்கு கை வந்த கலை. உதாரணமாக ஜிகாதிகளின் பூர்விக அரசியல் குடியிருப்பான முஸ்லீம்லீக்கின் முன்னாள் தலைவர் மறைந்த அப்துல் சமது துக்ளக்கில் இந்து முன்னணி தலைவர் தாணுலிங்க நாடார் மிகக்கேவலமாக இஸ்லாமியபெண்களை பேசியதாக கூறினார். பின்னர் ஆதாரம் கேட்டபோது ஒலிநாடா இருப்பதாக கூறினார், ஒலி நாடாவை காட்ட கூறிய போதுதான் அவர் கூறியது பச்சைப் பொய் எனத் தெரிந்தது. இத்தகைய ரீதியில் உருவாக்கப்படும் பொய்களைக் கொண்டு ஏற்கனவே 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்கிற பெயரில் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய இளைஞர் கூட்டத்திலிருந்து ஜிகாதி வெறியினங்களை உருவாக்குவது பெரிய காரியமில்லை. அமெரிக்க காண்டிராக்ட்டுகள் மூலம் கிடைத்த டாலர்கள் சவுதியிடம் இத்தகைய cost-effective foot soldiers of jihad ஐ உருவாக்க கிடைக்கவும் செய்கிறது. விஷயம் என்னவென்றால் இந்த கும்பல் இன்று இணைய தளத்தில் இஸ்லாமை கருத்தியல் தோலுரித்துக் காட்டியவர்களை கொல்ல முன்வந்தால் அவர்களுக்கு இலாபம்தான். ஆனாலும் ஒரு வாய்ப்பு உள்ளது. இணையவெளியில் வெளியாகும் ஒவ்வோர் கொலை மிரட்டலுக்கும், நனவுலகில் நடக்கும் ஒவ்வோர் கொலை முயற்சிக்கும், கொலைக்கும், காஃபீர்களாகிய நாம் இன்னமும் தீவிரமாக இந்த பரவும் இருளை கருத்தியல் தளத்தில் கடுமையாக எதிர் கொண்டு தோலுரித்துக் காட்ட வேண்டும். எதுவானாலும் நேசகுமாருக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டலுக்கு எனது கண்டனத்தை முழுமையாக வெளிப்படுத்திக்கொள்கிறேன். நேசகுமார்...முன்னெப்போதையும் விட வேகமாக தங்கள் பணியை தொடருங்கள். வாழ்த்துக்கள்.

Wednesday, September 14, 2005

'நல்லடியாருக்கு' பதில்


இங்கு காணப்படும் விவாதத்தின் தொடக்கத்தை திருவாளர். நல்லடியாரின் வலைப்பதிவில்
இங்கு காணலாம்.அதன் தொடர்ச்சியின் நகல் இங்கே. நல்லடியாரின் வாதங்கள் சிவப்பு நிறத்தில் உள்ளன.
//காஷ்மீர் பண்டிட்கள் மறுவாழ்வு பெறுவதற்கு இந்திய முஸ்லிம்கள் எந்தவகையில் தடையாக இருக்கிறார்கள்? இவர்களை அகதியாக்கியது மத்திய-மாநில அரசுகளின் அரசியல்தானே தவிர முஸ்லிம்களல்ல.அரவிந்தன் 50 வருடங்களாக காஷ்மீரில் நடக்கும் அட்டூழியங்களுக்கு எந்தவகையில் குஜராத் முஸ்லிம்கள் காரணம் என்று விளக்குவீர்களா? பரிவார ரவுடிகளிடமிருந்து பாதுகாப்பு கொடுத்த மனிதாபிமான குஜராத்திகளே இல்லையென்று சொல்லவில்லை. கலவரத்திற்கு சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட பூகம்ப பாதிப்பில் சக் இந்துவுக்கு இரத்தக் கொடுத்த முஸ்லிம்களின் ரத்தத்தைத்தானே உங்கள் பரிவாரங்கள் அதே குஜராத்தில் குடித்தார்கள்.//
இது குறித்து விளக்கமாகவே எழுதியுள்ளேன். குஜராத் பூகம்பத்தில் இடிந்த மசூதிகளை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் கட்டிக்கொடுத்தார்கள். ஆனால் ஆர்.எஸ்.எஸ் காரர்கள் நிவாரண உதவி செய்வதில் வகுப்புவாதத்துடன் செயல்படுவதாக கூறின சில ஊடகங்கள் ஆனால் அவற்றால் அதனை நிரூபிக்க முடியவில்லை. மேலும் கல்வித்துறையிலும் இஸ்லாமியர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் குறிப்பிடத்தக்க உதவிகளை செய்துள்ளது. இது குறித்து விளக்கமாக விரைவில்.இவ்வாறு உதவி செய்தவர்களின் பெண்டுகளையும் குழந்தைகளையும் தானே கோத்ராவில் உங்கள் ஜிகாதி சித்தாந்த சகோதரர்கள் உயிருடன் எரித்தார்கள் என பதில் கேள்வி கேட்கலாம்.
//காஷ்மீர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட பண்டிட்டுகள் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் மாதம் 3,000 ரூபாய் உதவித் தொகையும், இலவசமாக ரேஷன் பொருட்களும் வழங்கப்படுகின்றன. டில்லியில் 4,100 காஷ்மீர் பண்டிட்டுகள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு மாதந்தோரும் 3,200 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது. முகாம்களில் இருக்கும் குடும்பமாக இருந்தால் மாதம் 2,400 ரூபாய் மற்றும் ரேஷன் பொருட்கள் இலவசமாக தரப்படுகின்றன.இந்தச் சலுகைகளை ஜம்முவில் வசிக்கும் பண்டிட்டுகள் 34,088 பேரும், டில்லியில் உள்ள பண்டிட்டுகள் 19,338 பேரும், பிற மாநிலங்களில் உள்ள 2,050 பண்டிட்டுகளும் அனுபவித்து வருகின்றனர். இதற்காக மத்திய அரசு 2004-2005 ஆம் ஆண்டில் 32 கோடி ரூபாயும், 2005-06ல் 30 -கோடி ரூபாயையும் ஒதுக்கியுள்ளது. இந்த தகவலை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலைத் தொடர்ந்து பேசிய பாஜக வின் மூத்த தலைவர் மல்ஹோத்ரா, ""காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு தரப்படும் உதவித் தொகை மிக மிக குறைவானது. இந்தத் தொகையை 5,000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். - நன்றி அவுட்லுக் AUG 29-2005//

காஷ்மீர் பண்டிட்களின் எண்ணிக்கை குறித்து நல்லடியார் கூறியிருப்பதும்
கூட மிகக்குறைக்கப்பட்ட எண்ணிக்கைதான். ரீடிப் இணைய தளம் ஜூலை 13 1999 இல் கொடுத்துள்ள புள்ளிவிவரங்களின் படி: ஜம்முவில் அகதி முகாம்களில் வாழ்வோர் 216820, புது டெல்லியில் 143565. இதர மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்தோர் குறித்து சரியான எண்ணிக்கை தெரியவில்லை என்கிறது. முதல் ஜிகாதி வெறியாட்டத்தின் போது 55000 காஷ்மீரி பண்டிட் குடும்பங்கள் விரட்டப்பட்டன. யூனியன் உட்துறை அமைச்சக தகவலின் படி 250000 பண்டிட்கள் இன்று ஜம்முவிலும் 100000 பேர் டெல்லியிலும் உள்ளனர். இன்றைய தினத்தில் பாரதம் முழுவதுமாக அகதிகளாக வாழும் காஷ்மீரி பண்டிட் குடும்பங்களின் எண்ணிக்கை
56380. ஒரு குடும்பத்துக்கு சராசரியாக ஐந்துபேர் என்றால் கூட எண்ணிக்கையை நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளலாம். அதுவும் பத்து வருடங்களுக்கு மேலாக. இந்நிலையில் நல்லடியார் ஏதோ மத்திய-மாநில அரசுகளிடையே நடந்த அரசியலின் விளைவு இது என்கிறார். எப்படிபட்ட நயவஞ்சக நேர்மையற்ற பேச்சு இது? காஷ்மீரி பண்டிட்கள் அடித்து விரட்டப்பட்டதன் காரணம் ஜிகாதி வெறி. அதற்கு இத்தனை பூசி மெழுகல். இதில்
கூட நல்லடியார் கூறியுள்ள பொய்யினை பாருங்கள். அவர் கூறுகிறார்//இந்தச் சலுகைகளை ஜம்முவில் வசிக்கும் பண்டிட்டுகள் 34,088 பேரும், டில்லியில் உள்ள பண்டிட்டுகள் 19,338 பேரும், பிற மாநிலங்களில் உள்ள 2,050 பண்டிட்டுகளும் அனுபவித்து வருகின்றனர். இதற்காக மத்திய அரசு 2004-2005 ஆம் ஆண்டில் 32 கோடி ரூபாயும், 2005-06ல் 30 -கோடி ரூபாயையும் ஒதுக்கியுள்ளது. இந்த தகவலை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர்
சிவராஜ் பாட்டீல் தெரிவித்துள்ளார்.// இதோ பிடிஐ செய்தியை அப்படியே தருகிறேன். "There are 55,476 registered Kashmiri migrant families, 34,088 in Jammu, 19,338 in Delhi and 2,050 in other states, Patil informed the House." (பிடிஐ: ஆகஸ்ட் 29 2005)
குடும்பங்களை தனிமனிதர்களாக்கிவிட்ட நல்லடியாரின் நேர்மையை என்னவென்பது. வார்த்தையை பாருங்கள்: "பண்டிட்கள் அனுபவித்து வருகிறார்களாம்" தங்கள் நிலபுலன்களை ஏறத்தாழ நிரந்தரமாக இழந்து இத்தனை ஆண்டுகளுக்கு பின்னரும் குடும்பத்திற்கு 2400-3500 ரூபாயை வாங்கும் பண்டிட்களுடன், கலவரங்களில் அழிக்கப்பட்ட தம் சொத்துக்களின் மதிப்பிற்கு குறைவாக கிடைத்த பணத்தை பத்தாயிரம் என்கிற போதிலும் கூட வாங்காத குஜராத் கலவரங்களால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.
உதாரணமாக PUCL அறிக்கை கூறுகிறது: "Many reported suffering losses of several hundreds of thousands of rupees and being offered cheques of 10,000 rupees which they had refused on principle. Other women had accepted this as they were too desperate to refuse." காஷ்மீரில் பல இலட்ச மதிப்புடைய தங்கள் சொத்துக்களை
அதைவிட முக்கியமாக தமது முன்னோர் நிலத்தை விட்டு இன்று அகதிகளாக பத்தாண்டுகளுக்கும் மேலாக வாழும் காஷ்மீரி அகதிகளுக்கு கிடைக்கும் மாதம் ரூபாய் 2400-3500 ஐ மேல்கூறிய நிலையுடன் ஒப்பிட்டு பாரும் நல்லடியாரே. கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் இஸ்லாமியரானாலும் ஹிந்துவானாலும் அவர்களுக்கு நீதி
கிடைக்கவேண்டும் என்பதில் மறு பேச்சு கிடையாது. ஆனால் காஷ்மீரில் பயங்கரவாதத்தால் வீடிழந்து இன்றும் தெருவில் வாழ்பவர்கள் 3500 ரூபாயை 'அனுபவித்து' வருவதாக கூறும் உம் கோணல் பார்வையை என்ன சொல்வது. உமது நிலையில் நின்று பேசினால் வேண்டுமானால் "குஜராத் இஸ்லாமிய சகோதரர்களிடம் 'தங்கள் சொத்து நாசத்திற்கு பதிலாக 10000 ரூபாய் வாங்கி 'அனுபவித்து' போங்களேன் என்று அறிவுரை வழங்கலாமே
நல்லடியார்" என்று கூறலாம்...ஆனால் அதிர்ஷ்டவசமாக நான் உம்மை போல ஈமான் கொண்ட முஸ்லீம் அல்ல. காஃபீர்.எனவே அவ்வாறு கூறமாட்டேன். கலவரங்களால் பாதிக்கப்பட்ட குஜராத் சகோதரர்களுக்கு கட்டாயமாக நீதி கிடைக்கவேண்டும். பீடித்துண்டால் ரயில் பெட்டி எரிந்ததாக கூறும் ஆசாமிகளால் அது கிடைக்கப்போவதில்லை. அவ்வாறே காஷ்மீரில் இனத்துடைப்பு செய்யப்பட்டுள்ள பண்டிட்களுக்கும் பங்களாதேஷில் அனைத்து வித வன்கொடுமைகளுக்கும் ஆளாகும் ஹிந்து தலித் சமுதாயத்தினருக்கும், சக்மா பௌத்த வனவாசி
சமுதாயத்தினருக்கும், ஜமாத்தியாக்களுக்கும், ரியாங்குகளுக்கும் நீதி கிட்டியாக வேண்டும். குஜராத் கலவரங்களை 'இனப்படுகொலையாக்கிய' ஊடக வெளிச்சம் குஜராத்தை விட பன்மடங்கு அதிக வன்முறையும் மனிதகுலத்திற்கெதிரான குற்றங்களும் நிகழ்ந்த இடங்களில் இருண்டு போவதில் இருக்கும் வக்கிரத்தையும் கண்டிக்கிறேன்.

//அகதிகளாக வெளியேறிய பண்டிட்களுக்கு ஆதரவாக எங்களால் குரல் கொடுக்க முடியும். ஆனால் கடந்த ஐம்பது வருடங்களாக கொல்லப் பட்ட காஷ்மீர முஸ்லிம்களுக்கும் அப்பாவிளுக்கும் என்றைக்காவது நீங்கள் குரல் கொடுத்திருக்கிறீர்களா?//
அரவிந்தன் நீலகண்டன் எழுதிய திண்ணைக் கட்டுரைகளை தேடி பாருங்கள். நான் குரல் கொடுத்துள்ளேனா இல்லையா என்று தெரியும். அண்மையில் VDC இல் இருந்ததற்காக ஜிகாதிகளால் கொல்லப்பட்ட இஸ்லாமிய சகோதரர்களுக்காக நான் எழுதியுள்ள கட்டுரையை படித்த பின்னர் பேசும்.
//குஜராத் கலவரத்தில் வீடிழந்தவருக்கு கொடுக்கப்படதொகை எவ்வளவு தெரியுமா? அதிகமில்லை ஜெண்டில்மேன் வெரும் 100 ரூபாய். http://www.onlinevolunteers.org/gujarat/relief/
மற்றபடி வரிக்குவரி உங்களுடன் வாதிட விரும்பவில்லை. நீங்கள்தான் கர்வம் கொண்டவராச்சே!//

ஐயா நல்லடியாரே,
ஒரு உதாரணம். பீபீ பானோ கலவரங்களில் தமது கணவரை இழந்தவர். இவருக்கு அகதி முகாம்களில் நெருக்கமான தன்வீர் அகமது அவரை எரித்து கொல்ல முயன்றிருக்கிறான். தமது கணவரையும் குழந்தைகளையும் இழந்த பீபீ பானோவிற்கு கிடைத்த நிவாரண நிதி எத்தனை தெரியுமா? மூன்றரை இலட்ச ரூபாய். (பார்க்க: பிடிஐ செய்தி : டிசம்பர் 9 2004)

Tuesday, September 13, 2005

மூக்குத்திப்பெண்ணும் மதக்கட்டுப்பாடுகளும்


சானியாவிடமிருந்து நல்லடியார் கும்பல் இறைநம்பிக்கையை படிக்கலாம்...அல்லது அவரது பந்து விளையாட்டை..என்னைப் பொறுத்தவரை எனது மாலைவேளையை நிச்சயமாக கோரக்புர் கீதாபிரஸின் உபந்யாசத்தைக் காட்டிலும் சானியாவின் விளையாட்டை பார்ப்பதிலேயே செலவிடுவதில் ஆன்மிகம் அதிகம் உள்ளதென்பேன். சானியா மிர்ஸா குறித்த பத்வா குறித்து நல்லடியார் தமது வழக்கம் போல பத்வாவை நியாயப்படுத்தியுள்ளார். நல்ல காலம் சானியா ஒரு சங்க பரிவார்/யூத சதியின் பகுதி என்று கூறிவிடவில்லை. அந்த அளவிற்கு சானியா கொடுத்துவைத்தவர்தான். ஆனால் சானியா புத்திசாலி பெண்ணாகத்தான் தெரிகிறார். இந்த பத்வா கூத்தெல்லாம் கண்டுகொண்ட மாதிரியே தெரியவில்லை. இவருக்கு நல்ல பாப்புலாரிட்டி இருப்பதற்கு காரணம் அவரது விளையாட்டுத்திறனாக இருக்கலாம் அல்லது அழகாக இருக்கலாம். அது குறித்து நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ முடிவெடுக்கும் உரிமை அவருடையது. அவர் தம்மை ஈமான் கொண்ட முஸ்லீமாகத்தான் கருதுகிறார். அவரது கழுத்தில் தொங்குவது ஏதோ மதநம்பிக்கை தொடர்பான லாக்கெட் போலத்தான் தெரிகிறது. அவரது செயல்பாடுகளில் ஜீவ சந்தோஷம் இருக்கிறது. மத வட்டங்களை கடந்து நிற்கும் இளம் தலைமுறையின் சாதனை குரலாக அவரது குரல். எடுத்தெறிந்து நிற்கும் தன்னம்பிக்கையை பறைசாற்றும் அவரது டி ஷர்ட்கள் stereotypeகளை உடைத்தெறிகின்றன. இத்துடன் தொடர்ந்து மற்றொரு விஷயத்தையும் கூறவேண்டும். வாலன்டைன் தினம், குறித்தது அது. வாலண்டைன் தின கொண்டாட்டங்களை அடித்து நொறுக்கும் கூட்டமும் சானியாவிற்கு எதிராக பத்வா விதிக்கும் கூட்டத்தை போன்றே புத்தி கெட்டது என்பேன். என்னைக் கேட்டால் கொண்டாடுபவர்கள் கொண்டாட்டுமே வேண்டுமென்றால் வாலண்டைன் தினத்தின் பாகன் வேர்களை முக்கியப்படுத்தி கார்டுகளை போட்டு அந்தக்காசைக் கொண்டு சுநாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பங்களாதேஷ் இஸ்லாமிய வெறியர்களால் அகதிகளாக்கப்பட்டிருக்கும் பௌத்த வனவாசிகளுக்கும் ஹிந்து தலித்களுக்கும் ஏதாவது செய்யலாம் என்பேன். Violence is the last resort of the incompetent என்கிற வார்த்தைகளை நம்புகிறவன் நான். கூடவே டார்வின் தினத்தையும் கொண்டாடுங்கள் என்பேன் அதுவும் பிப்ரவரியில்தான் வருகிறது. வகாபியிச , எவாஞ்சலிக்க, சாதிய சிறைகளிலிருக்கும் மனங்களுக்கு அறிவியலின் ஒளியை கொண்டு செல்ல அந்த நாளை பயன்படுத்தலாம் நன்றாக. எல்லா தரப்புகளிலுமுள்ள நல்லடியாரும் அவருடைய மெமிடிக் க்ளோன்களும் குறைந்த பட்சம் சானியாவின் விளையாட்டரங்கப் பாவாடையின் நீளத்தைக் காட்டிலும் முக்கியமானவை இந்நீலக் கோளத்திலும் அப்பாலும் உள்ளதென அறிந்துகொள்ளலாம். நல்லடியார் கூட்டமும் இதர ஏகஇறை அடியாராக தம்மைக் கருதிக் கொள்ளும் கூட்டமும் சானியா போன்ற உண்மையான இஸ்லாமியராக இருக்க அவர்கள் நம்பும் ஏக இறைவன் அருள் புரியட்டும். சானியாவை பொறுத்தவரை ...மூக்குத்திப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள!

Sunday, September 11, 2005

மேற்கு வங்காளத்தில் சிலநாட்கள்


அண்மையில் ஒரு வாரம் மேற்கு வங்காளத்தில் இருக்க முடிந்தது. கொல்கத்தாவில் ஓரிரு நாட்கள் தவிர மற்ற நாட்களெல்லாம் வங்கத்தின் மூலைகளில் இருக்கும் வனவாசி கிராமங்களில் கழிந்தன. மண் வீடுகள், அடிப்படை மின்சார வசதியோ அல்லது மருத்துவ வசதியோ அற்ற கிராமங்கள். (இவை கொல்கத்தாவிலிருந்து பத்து மணிநேர தொலைவில்தாம் உள்ளன.) சில தன்னார்வ அமைப்புகளின் உதவியால் குழந்தைகள் பள்ளி செல்கின்றன. வனவாசிகளுக்கு சில அமைப்புகளின் உதவியால் நிலங்கள் பட்டா போட்டு கிடைக்கின்றன. ஆனாலும் என்ன ...
வறண்ட கோடைக்காலங்களில் அவர்கள் நிலத்தை தரிசாக போட்டுவிட்டு நகரங்களுக்கு (குறிப்பாக கொல்கத்தா) செல்கின்றனர். கொல்கத்தாவின் தொழிலாளர் சந்தை ஏற்கனவே பீகாரிகளாலும், உத்தரபிரதேச காரர்களாலும் நிரம்பி வழிகிறது. வனவாசி இளைஞர்கள் அவர்களோடு போட்டியிட வேண்டும். நகரங்களில் இம்மக்கள் பொதுவாக எல்லாவித சுரண்டலுக்கும் ஆட்படுத்தப்படுகிறார்கள். வளங்குன்றா வேளாண் தொழில்நுட்பங்கள் மூலம் வறண்ட காலத்திலும் சாகுபடி செய்ய முடிந்தால் ஓரளவு இந்த கொடுமைகளை கட்டுப்படுத்த முடியும். ஆனால் இந்த முக்கு மூலைக் கிராமங்களுக்கு மின்சாரமே ஒழுங்காகக் கிடைக்கவில்லை ...ஏதாவது மருத்துவ சேவை தேவைப்பட்டால் குறைந்தது 20 கிமீ சென்றால்தான் கிடைக்க்கும். இந்நிலையில் தன்னார்வ அமைப்புகள்தாம் இம்மக்களுடன்
வாழ்ந்து இத்தகைய தொழில் நுட்பங்களை வளர்த்தெடுத்து வேரூன்ற செய்யவேண்டும். சமுதாய மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் முதல் வறட்சியை தாக்குப்பிடிக்கும் வட்டார பயிர்வகைகள் வரை என பல்வேறு உள்ளீடுகள் தேவைப்படும். அவற்றையெல்லாம் செய்ய இக்கிராமங்களிலேயே தங்கி அதனையே ஜீவசாதனையாக செய்ய கர்மயோகிகள் கட்டாயம் தேவை. யார் செய்வார்கள்?

சென்று பார்த்த மற்றோர் இடம் நிம்பித் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம். முதலில் கூறிய வறண்ட சூழலுக்கு நேர் எதிர்.இங்கு மழை நீர் கட்டித்தங்குவது தான் பெரிய பிரச்சனை. சுந்தர்வன நிலப்பரப்பில் கிராமங்கள் என்பவை பொதுவாக தீவுகள்தாம். இங்கும் மக்கள் கடின ஜீவனம்தான் நடத்துகிறார்கள். இவர்களது நிலையை கண்டு தம் ஆன்மிக வாழ்வின் சாதனையையே இவர்களுக்காக சேவை செய்து வாழ்வதுதான் என அர்ப்பணித்தவர் ஸ்வாமி புத்தானந்த மகராஜ். அவரால் நிறுவப்பட்ட ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமம் நிம்பித் எனும் கிராமத்தில் உள்ளது. அவர்கள் அமைதியாக செய்யும் சேவைகளை -அவற்றின் அபரிமித விரிவை ...வெளிப்பகட்டற்ற விளம்பரமற்ற தன்மையை- காண்கையில் உண்மையிலேயே பெரும் மன எழுச்சி ஏற்படுகிறது. சுந்தர்வன மக்களுக்காக பலவித வளங்குன்றா
வேளாண் அமைவுகள் உருவாக்கப்பட்டு அவை களமிறக்கப்படுகின்றன. அடிப்படை திசு ஆராய்ச்சி முதல் மனிதக்கழிவு/சாண எரிவாயு கலன்கள், மீன் வளர்ப்பு இத்யாதிகள், உயிர் உர உற்பத்தி முதலியன என அனைத்து வித அனைத்து தள ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு அவற்றில் வெற்றிகளாக கண்டறியப்படுபவை களவிரிவாக்கம் மூலம் சுந்தரவன ஏழை விவசாயிகளை சென்றடைகின்றன. தலித்-வனவாசி குழந்தைகளுக்காக மட்டுமே ஒரு மிகச்சிறந்த கல்விக்கூடம் நடத்தப்படுகிறது. ஒரு வகுப்புக்கு 30 மாணவர்களே எடுத்துக்கொள்ளப்பட்டு
அவர்களுக்கு பிரத்யேக பயிற்சி வழங்கப்படுகிறது. மாநில அளவில் மாணவர்கள் எப்படியும் வருடத்துக்கு மூன்று நான்கு ரேங்கள் எடுத்துள்ளார்கள்.எப்போதுமே ஆசிரம வளாகத்தில் விவசாயிகளுக்கு (மகளிருக்கும் ஆடவருக்கும்)தொழில்நுட்ப விரிவாக்கப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. விவேகானந்த உயிரியல் தொழில்நுட்ப மையம் ஒரு தலைசிறந்த தொழில்நுட்ப மையமாக திகழ்கிறது. கொல்கத்தாவிலிருந்து நிம்பித் ஆசிரமம் 65-70 கிலோ மீட்டர்கள்தான் என்றாலும் தரமற்ற சாலைகளும் போக்குவரத்து நெரிசலுமாக மூன்றுமணி நேரம் ஆகிவிடும்.
கொல்கத்தா போகிறவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய வரிசையில் நிம்பித்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

கொல்கத்தாவில் சுவாமி விவேகானந்தரின் இல்லம் பாழடைந்து கிடந்தது. இப்போது ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனால் புதுப்பொலிவுடன் திகழ்கிறது. பாரதக் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்கள் திறந்துவைத்திருக்கிறார். உள்ளே எழுச்சியூட்டுவதாக இருக்கிறது. இன்னமும் பல சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. கொல்கத்தா வரலாற்று சிறப்பு வாய்ந்த அழுக்கான நகரம். கங்கை நீர் நகராட்சி குழாய்களிலிருந்து பாய்ந்து தெருவோரங்களில் சாக்கடையாகி பாய்கிறது. டெங்கு ஜூரம் பெரிய காலனாகி வந்தவாறு உள்ளது. பொது மருத்துவமனைகளில்
கூட்டம். செப்.ஆறாம் தேதி டெலிகிராப் முதல் பக்கத்தில் மேற்கு வங்க சுகாதார அமைச்சர், கொல்கத்தா இந்நாள்/முன்னாள் மேயர்கள் படங்கள் 'rogue gallery' எனும் தலைப்பில் வெளிவந்திருந்தன. மார்க்சிய சொர்க்கத்தில் டெங்கு இருக்கக்கூடாது என்கிற முரண்பாட்டியங்கியல் விதிகள் கொசுக்களுக்கு தெரியாதிருப்பதற்கு புத்தாதேவ் பட்டாசாரியாரின் அமைச்சரவை பொறுப்பேற்க முடியாதுதான். இண்டர்நெட், ஈமெயில் எதன் பக்கமும் பத்துநாள் போகாமல் கழிந்தன. 'தொலைந்தது சனியன்' என்று எண்ணிக் களித்தவர்களுக்கு ஏமாற்றமளித்தமைக்கு வருத்தங்களுடன்...