வேதாளம் சொல்லும் கதை : ஜைனூல் ஆப்தீன் கூட்டத்தில் ஈவெரா
தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து, மரத்திலிருந்த வேதாளத்தை மீண்டும் தூக்கி தன் தோளில் போட்டபடி செல்கையில் வேதாளம் சற்றே நகைத்து "மன்னனே நீ ஏன் இந்த பலனில்லாத முயற்சியில் ஈடுபடுகிறாய்? ஒருவேளை இந்த முயற்சியைக்காட்டிலும் இந்த முயற்சியில் உன்னைத் தூண்டியவனிடத்தில் உனக்கு விசுவாசம் இருப்பதால் இது பகுத்தறிவற்றதென தெரிந்தும் நீ அமைதிகாக்கிறாயா ஆனால் அப்போதும் கூட சில சமயங்களில் அமைதியை மீற வேண்டிய நிலை ஏற்படலாம். இதற்கு உதாரணமாக வருங்காலத்தில் நாகர்கோவில் எனும் நகரில் சில கருஞ்சட்டை தோழர்கள் நடந்துகொண்ட விதத்தின் கதையை உனக்கு நான் கூறுகிறேன். கவனமாகக் கேள்." எனக்கூறி கதையை சொல்லலாயிற்று.
சுனாமியடித்த கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நாகர்கோவில் என்று ஒரு நகரமுண்டு. அந்நகரில் அரவிந்தன் நீலகண்டன் என்று ஒரு காஃபீர் வாழ்ந்து வந்தான். பொது சகாப்தம் 2005 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி நாகர்கோவிலில் நடந்த 'இஸ்லாம் ஓர் இனியமார்க்கம்' நிகழ்ச்சியில் பார்வையாளனாகக் கலந்து கொள்ள இந்த கடைந்தெடுத்த காஃபீரான அரவிந்தன் நீலகண்டனுக்கு வாய்ப்பு கிடைத்தது. கேள்விகளுக்கு பதிலளித்தவர் ஜைனுல் ஆப்தீன் எனும் மார்க்க பெரியவர். 'மற்ற மார்க்கத்தவர்களுக்காக' நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஏறத்தாழ ஐந்து மணிநேரம் நின்றபடியே ஓய்வின்றி முகத்தில் எவ்வித மாறுதலுமின்றி ஓர் நகைச்சுவைத்தன்மையுடன் பதிலளித்தபடியே இருந்தார் ஆப்தீன். ஜிகாத், ராமஜென்மபூமி, மகர், குரானில் நவீன அறிவியல் கூறப்பட்டிருக்கும் அதிசயம் என வெளுத்து வாங்கினார். அப்படியும் காலப்பளுவின் காரணமாக ஐந்து மணிநேரத்தில் பதினைந்தோ பதினெட்டோ பேருக்குத்தான் அவரால் பதிலளிக்க முடிந்தது. சாலமன் பாப்பையாவும் ஈமானும் கலந்த அந்த விசித்திர மனிதரின் பதில்கள் வழக்கமான இஸ்லாமிய சால்ஜாப்புகள்தான் என எண்ணியபடி அந்நிகழ்ச்சியை தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான் காஃபீர் நீலகண்டன். தொடர்ந்து விவாதிக்கும்படியாக இல்லாமல் அடுத்தடுத்தாக கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்கும்படியாக அமைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி. தௌதவாகவே மேடைமேல் இருப்பவருக்கு சாதகமான சூழ்நிலை என்றே இஸ்லாமின் ஔதபடாத அவனது இருளடைந்த மனதிற்கு தோன்றியது. அவர் எழுப்பிய அடிப்படை தகவல் பிழைகளைக் கூட தட்டிக்கேட்க முடியாத நிகழ்ச்சி அமைப்பு என அவனுக்கு பட்டது. உதாரணமாக பாபர் காலத்தில் ஒருத்தனுக்கு ஒருத்தன் என்று சண்டை போடற நிலைங்க. பீரங்கி துப்பாக்கியா இருந்துச்சு. அப்படியிருக்கும் போது எப்படிங்க பாபர் பெரும்பான்மை மக்களுக்கான கோவில இடிச்சுருப்பாரு..." "...பாபர் ஒரு உயில் எழுதி அது டெல்லியில தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் இருக்குது. அதுக்கு பேரு பாபர் நாமா" "...1949க்கு முன்னால ராமஜென்மபூமி பத்தி எந்த வழக்கும் கிடையாது" "துளசிதாஸக் காப்பியடிச்சு கம்பன் தமிழ்ல ராமாயணம் எழுதினான்" என்கிற ரீதியில் (வேதாளத்திற்கு வயதாகிவிட்டதால் சரியாக அதே வார்த்தைகளில் கூறியுள்ளதா தெரியவில்லை ஆனால் சாராம்சம் இதுதான்- மண்ணாந்தை) இதெல்லாம் 'கேட்பவன் கிறுக்கன் என்றால் ஒசாமா கூட மகாத்மாதான்' என்ற பாணியிலான உளறல்கள் என்றும் குறைந்தபட்சம் பத்தாவது வகுப்பு மாணவனின் வரலாற்று அறிவோடு இருப்பவர்கள் கூட அவரது வாதங்களை முறியடித்துவிடலாம் என்பது அரவிந்தன் நீலகண்டனின் காஃபீர்தனமான நம்பிக்கைகள். ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எடிட் செய்து அளிக்கப்படுகையில் சாதாரண இஸ்லாமியரின் நம்பிக்கையையும் இஸ்லாமிய ஈகோவையும் நிமிர்ந்து நிற்கவைக்கும் என்பது அந்த வக்கிரம் பிடித்த காஃபீருக்கு எப்படி தெரியும்?
அப்போதுதான் அது நிகழ்ந்தது. ஈவெராவினை சிலாகிப்பதாகக் கூறிக்கொண்ட ஒருமனிதர் 'கடவுள் உண்டா? அதற்கு சான்று என்ன?' எனக் கேட்டார். ஜைனூல் ஆப்தீன் "சிலர் கடவுளின்பெயரால் பிழைப்பு நடத்தினால் ஈவெரா கடவுள் இல்லை என்று சொல்லி பிழைப்பு நடத்தியவர். அவர் என்ன உழைத்தா பிழைத்தார்? கடவுள் இல்லை என்று சொல்லி பிழைப்பு நடத்தினார். வீட்டுக்கு வர இவ்வளவு ரூபாய். வீட்டில் சாப்பிட இவ்வளவு ரூபாய். வீட்டில் தண்ணீர் குடிக்க இவ்வளவு ரூபாய். குழந்தைக்கு பெயர் வைக்க இவ்வளவு ரூபாய். கல்யாணத்திற்கு வர இவ்வளவு ரூபாய். கருமாதிக்கு வர இவ்வளவு ரூபாய். என்று வசூலித்து பிழைப்பு நடத்தினார். ஏன் வீரமணி வழக்கறிஞருக்கு படித்தவர்தான். அவர் வேலை செய்கிறாரா அல்லது கடவுள் இல்லை என்று சொல்லி பிழைப்பு நடத்துகிறாரா? கடவுள் என்று கல்சிலையை வணங்குகிறீர்களே என்று கேட்ட ஈவெராவுக்கு சிலை அவரது சிலைக்கு பூமாலை. கடவுள் இல்லை என்று சொல்லுகிறவர்களுக்குள்ளேயே அடிதடி...வீரமணிக்கும் கொளத்தூர் மணிக்கும் சண்டை" என்றெல்லாம் ஆக்ரோஷித்தார். இந்நிலையில் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த கருஞ்சட்டை வீரர்களில் ஒருவர் கையைத்தூக்கி உரத்த குரலில் ஆட்சேபம் எழுப்பினார். ஆனால் அதை அலட்சியம் செய்த ஆப்தீன் பின்னால் உங்களுக்கு வாய்ப்பளிக்கிறேன் என்று தொடர்ந்தார். தொடர்ந்து குரானில் 1400 வருடங்களுக்கு முன்னரே பூமி உருண்டை, பூமி சுழல்கிறது, சூரியனை சுற்றுகிறது என்பது முதல் மருத்துவம் வரை பல இன்றைய கண்டுபிடிப்புகள் கூட உள்ளன எனக் கூறினார். அந்த கருஞ்சட்டை வீரரின் வீரத்தை கண்டு வியந்து போன காஃபீர் நீலகண்டன் "இவரன்றோ தைரியசாலி" என எண்ணி அந்தகருஞ்சட்டை வீரரை அணுகி "ஐயா எனக்கு எண் 314. எனவே என் முறை வர வாய்ப்பில்லை. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கையில் அவர் கூறியுள்ள அபத்தங்களையும் சேர்த்து விளாசுங்கள். டார்வீனிய பரிணாம அறிவியல்..." என்று தொடங்க அந்த கருஞ்சட்டை வீரர் அப்படியே கையை உயர்த்தி " நமக்கு அவர் சொல்ற மத்த விசயங்களப் பத்தி கவலையில்லீங்க...ஆனா தந்தை பெரியார் பத்தி அவரு ஒண்ணும் மோசமா சொல்லப்படாது அவ்வளவுதான்...அறிவியலெல்லாம் நமக்கு தெரியாதுங்க." என்று கூறினார். அரவிந்தன் நீலகண்டன் முகத்தை தொங்கப்போட்டபடி உடைந்த மூக்கை துடைத்துக் கொண்டு அவனது இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டான்.
இக்கதையை கூறிய வேதாளம், " மன்னனே முதலில் கருஞ்சட்டை வீரரிடம் சென்று எதற்கு அரவிந்தன் நீலகண்டன் உளறினான் பிறகு ஏன் மௌனமாக வந்து அமர்ந்தான்? இதற்கான பதிலை நீ தெரிந்திருந்தும் கூறாவிட்டால் உனது தலையை சுக்கு நூறாக சிதறவைப்பேன்" என்று கூறியது. விக்கிரமாதித்தனும், "காஃபீரும் ஏக இறைவன் மீது நம்பிக்கையும், அவரது ஒரே தீர்க்கதரிசியின் மீது எள்ளளவும் மரியாதையற்றவனுமான அரவிந்தன் நீலகண்டன், கருஞ்சட்டை வீரர் கையை உயர்த்தியதும் அவர் பகுத்தறிவுக்காக குரல் கொடுப்பவர் என கருதினான். எனவே ஜைனூல் ஆப்தீன் குரானில் இருக்கும் அறிவியல் குறித்து அபத்தமாக உளறியதாக அவனுக்கு பட்டதும், அவன் அந்த கருஞ்சட்டை வீரர் இன்னமும் ஆத்திரம் அடைவார் எனவே அவருக்கு துணையாக தானும் குரல் கொடுக்கலாம் எனக் கருதி அவரிடம் சென்று பேசினான். பகுத்தறிவின் சின்னமாக தான் நினைக்கும் ஈவெராவை விமர்சித்ததற்கே இத்தனை ஆத்திரம் வருபவருக்கு, பகுத்தறிவின் சர்வதேச சின்னமாக திகழும் பரிணாம அறிவியலுக்கு எதிராக பேசினால் எத்தனை ஆத்திரம் வரும் அத்தகைய மனிதருடன் தானும் இணைவது இச்சூழலில் சரி என அவன் கருதினான். எனவேதான் ராமஜென்மபூமி குறித்து அவர் கூறியபோது கூட இருக்கையில் இருந்து அசையாத அவன், அந்த கருஞ்சட்டை வீரரிடம் இது குறித்து சென்றான். ஆனால் கருஞ்சட்டை வீரர் அப்படி ஒன்றும் பகுத்தறிவு பைத்தியமல்ல. அவர் ஈவெரா மீது ஈமான் கொண்டவர். எனவே பகுத்தறிவு, அறிவியல் பார்வை போன்றவை எக்கேடு கெட்டாலும் ஈவெரா சிலை ஒழுங்காக பராமரிக்கப்பட்டால் போதும் எனும் எண்ணம் கொண்டவர். ஈவெராவின் திராவிட இயக்கத்துக்கும் பகுத்தறிவுக்கும் இருக்கும் தொடர்பைக்காட்டிலும் ஈவெரா மார்க்கத்தினருக்கும் ரசிகர் மன்ற மனப்பான்மைக்குமே ஒற்றுமை அதிகம் என்பதை அறியாத முட்டாள் காஃபீரான அரவிந்தன் நீலகண்டன் அத்தருணத்தில் அதை உணர்ந்ததால் அவனது இருக்கையில் மரியாதையாக மௌனமாக வந்து அமர்ந்து கொண்டான்." என்று கூறினான். விக்கிரமாதித்தனின் சரியான இந்த பதிலால் அவனது மௌனம் கலையவே வேதாளம் அவன் சுமந்து வந்த உடலோடு உயரக் கிளம்பி மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.
-மண்ணாந்தை
[கதையமைப்புக்கு நன்றி: அம்புலிமாமா]
நன்றி: திண்ணை.காம் ஆகஸ்ட் 11 2005










CCRAS அமைப்பினைச் சார்ந்த டாக்டர்.லவேக்கர் மற்றும் டாக்டர் தெய்வநாயகம் ஆகியோர் தொடக்கவிழாவில் பங்கேற்றினர். பல இருப்புகளில் வர்ம மருத்துவத்தின் பல பரிமாணங்கள் ஆராயப்பட்டன. குமரி மாவட்டம் மற்றும் தென் தமிழகத்தின் மாவட்டங்களிலிருந்து (குறிப்பாக திருநெல்வேலி, தூத்துகுடி) வந்திருந்த ஆசான்கள், ஆயுர்வேத மற்றும் சித்தமருத்துவ வைத்தியர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் இரண்டு நாட்கள் நடந்த நிகழ்வுகளிலும் கேள்விபதில் பகுதிகளிலும் கலந்து கொண்டனர். 12 ஆம் தேதி மாலை ஆசான் முருகன் அவர்களும் அவரிடம் பயிலும் மாணவர்களும் குமரி மாவட்ட வீர விளையாட்டுக்களை செய்து காட்டினர். வர்ம அடங்கல்கள், இளக்கு முறைகள் ஆகியவை குறித்து சில செய்முறை விளக்கங்களும் அளிக்கப்பட்டன. பாரம்பரியமான ஆசான் பரம்பரைகளை சார்ந்த மூத்த ஆசான்கள் முதன்முறையாக வர்மம் குறித்த தேசிய கருத்தரங்கில் கலந்து கொள்வது இதுவே முதல் தடவையாகும். அக்குபஞ்சர் புள்ளிகளுக்கும் வர்ம புள்ளிகளுக்குமான இணைத்தன்மைகள், வர்மபுள்ளிகளுக்கு இணையாக விளங்கும் உள்ளுறுப்புகள் (anatomical correlates of Varma points in the face and neck region) என்பன போன்ற தொடர்புல ஆய்வுத்தாள்களும் வாசிக்கப்பட்டன. பாரம்பரிய ஆசான்களிடம் வந்து கற்பதில் உள்ள கட்டுப்பாடுகள் குறித்து விளக்கினார் குமரி மாவட்டத்தின் முதிர்ந்த ஆசான் பாஸ்கரன் அவர்கள். வைத்தியர்.ஆசான்.இராஜ்குமார் வர்மத்தினை ஒரு மேடை நிகழ்ச்சியாக விளக்கிக்காட்டுவதில் உள்ள கடினங்களை விளக்கினார். மூலச்சல் வர்ம பள்ளி நடத்தும் இராஜேந்திரன் வர்மப்புள்ளிகள் மூலம் குறிப்பிட்ட சில நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது குறித்தும் ஜன்னியை கட்டுப்படுத்துவது குறித்தும் கூறினார். வைத்தியர் திருப்பதி ஆசான் வர்ம சிகிச்சையில் மருந்து தயாரிப்பது குறித்து பேசினார். வர்ம சிகிச்சை முறைக்காக ஆசான்களையும் வைத்தியர்களையும் கூட்டுவித்து தேசிய அளவிலான ஒரு கருத்தரங்கு நடந்தது இதுவே முதல் முறையாகும். ஆனால் இது ஒரு தொடக்கமே இனி முன்னோக்கி நகர்ந்து வர்மவியலை ஒரு சீரிய சிகிச்சை முறையாக மாற்றுவதில் பல்துறையாளர்களும் முன்னின்று உதவ வேண்டும். இக்கருத்தரங்கின் வெற்றிக்கு பின்னால் நின்ற பேருள்ளங்கள்: வைத்தியர் திருப்பதி ஆசான், சித்தா டாக்டர். கணபதி , டாக்டர் லவேக்கர், மற்றும் விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தி திட்டத்தின் செயலர் வாசுதேவ்ஜி அவர்கள். இக்கருத்தரங்கின் இலச்சினை வாசகமான 'காயத்தில் நின்ற கருத்தறிவோம்' திருமூலர் திருமந்திர வாசகத்தினை தழுவியது.

உள்ளூர் மேயர் வரைக்குமாக விவகாரம் சென்றது. விநாயகர் சிலை வைக்கப்பட்டிருப்பது கிறிஸ்தவ எதிர்ப்பு மனநிலையை காட்டுவதாகவும் கூறினார். விவிலியத்தின் படைப்பு-கற்பனை வசனங்களை படங்களுடன் காட்சியகத்தில் வைக்க 3000 டாலர்களையும் தருவதாகக் கூறினார். இப்போது மற்றொரு பிரச்சனை ஆரம்பித்தது. அறிவியல் அறிவுடையவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். விவிலிய படைப்புவாத கற்பனையின் வசனங்களை வைத்தால் டல்ஸா தேசிய இயற்கை காட்சியகமாக விளங்குவதிலிருந்து பிற்போக்குத்தன்மையை அடைந்துவிடும் எனக் கூறி எச்சரித்தனர். உடனே ஹிக்ஸுக்கு சம்மதித்தவர்கள் உடனே 'விவிலிய படைப்புவாதக் கற்பனை' மட்டுமின்றி ஆறேழு வெவ்வேறு கலாச்சாரங்களிலிருந்து வரும் கற்பனைகளையும் வைக்காலாமெனக் கூறினர். படைப்பு வாத அடிப்படைவாதிகளுக்கு இப்போது அச்சம் கொடுக்க ஆரம்பித்தது. ஏனெனில் அவ்வாறு செய்யப்பட்டால் விவிலியத்தின் படைப்புவாதம் எவ்வாறு மற்றொரு கற்பனை மட்டுமே என்பது தெளிவாக தெரியும் என்பதும் மாறாக பரிணாம அறிவியலின் பார்வை எவ்வளவு சிறந்தது என்பதும் தெரிந்துவிடுமென அஞ்சினர். மேலும் எந்த கலாச்சாரத்தின் படைப்பு குறித்த தரிசனத்தை வைப்பது? எவ்வாறு தேர்ந்தெடுப்பது? விளைவு- படைப்புவாத விவிலிய வசனங்களை வைக்கும் முயற்சியே கைவிடப்பட்டது. இது குறித்த நியூயார்க் டைம்ஸின் வார்த்தைகளுடனேயே நிறைவு செய்கிறேன், 'Second thoughts are a creative characteristic of Homo sapiens, and the Tulsa Zoo directors did well by theirs. They were fortunate to have G anesh, known to true believers as the remover of obstacles and the god of harmony, on the grounds.' (நியூயார்க் டைம்ஸ் ஜூலை 10, 2005).