அகப்பயணம்

Saturday, August 18, 2007

இந்து விரோத மனித உரிமை மீறல்:2007

இந்து விரோத மைனாரிட்டி திமுக அரசு தமிழ்நாட்டில் இந்துக்களை அவர்களது விரத நாட்களில் அவமானப்படுத்துவதையும் தொல்லை கொடுப்பதையும் ஒரு வழக்கமாக கொண்டுள்ளது.தங்களது அரசியல் விவேகமின்மையால் இந்துக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே கீழ்த்தரமாக நடத்தப்படும் நிலைக்கு தங்களை ஆட்படுத்தியுள்ளனர். இது போக ஆடி அமாவாசை எனும் இந்துக்களின் நீத்தார் நினைவஞ்சலி செலுத்தும் புனித நாளில் சிறப்பு பஸ்கள் என்ற பெயரில் அரசு விரைவு பேருந்து போக்குவரத்துக்கழகம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகியதாக தெரிவிக்கிறது தினமலர் நாளேடு. சிறப்பு பேருந்து என்ற பெயரில் 20 சதவிகித கட்டணம் அதிகம் வசூலிக்கப்படுகிறது. சென்னை-மதுரை பேருந்து கட்டணம் ரூ300 ஆக்கப்பட்டுள்ளது.

இது போக ஆடி அமாவாசை அன்று உடுமலை திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சிறப்பு வழிபாட்டுக்கு சென்ற பக்தர்களுக்கு அவமானகரமான மனக்கொதிப்பை ஏற்படுத்தியுள்ளார் உடுமலை வனச்சரகர் சுந்தரமூர்த்தி.

இந்த அரசு அலுவலர் அரைகுறை ஆடையுடனும் குடிபோதையுடனும் அங்கிருந்த பக்தர்களை விரட்டி அங்கு இருந்த மின்விளக்குகளை உடைத்தும் பஞ்சலிங்க அருவிக்கு குளிக்கச் சென்ற பெண்கள் உட்பட பக்தர்களை கடுமையான வார்த்தைகளில் திட்டியும் தடியால் அடித்தும் கீழே விரட்டிவிட்டார். இதனால் வண்டி மாடு கட்டி கிராமப்புறங்களில் இருந்து சுவாமி கும்பிடவும் தம் முன்னோருக்காக பிரார்த்தனன செய்திடவும் வந்த பக்தர்கள் இருளில் அல்லல் பட்டதுடன் மிகுந்த மன வேதனையும் அடைந்தனர் (ஆதாரம்: தினமலர்: 13-8-2007)


வனச்சரகரின் இந்த ஆட்சேபகரமான மானுட உரிமை மீறல் வெறும் தனிமனிதரின் ஆபாச நடவடிக்கை என எடுத்திட முடியாது.

ஏனெனில் முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் கருணாநிதி காசி ராமேஸ்வரம் புனித யாத்திரை செய்பவர்களும் இந்து சமயச்சடங்குகளை செய்பவர்களும் இன்னும் இருக்கிறார்களே என பார்க்கும் போது தம் மனம் வருந்துவதாக கூறியுள்ளார். ஹிட்லர் போன்ற மானுடவிரோதிகளின் பேச்சினையொத்த இந்த பேச்சினை ஒருமாநில முதல்வர் கூறியிருக்கையில் அதே மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அரசு அதிகாரி இந்தவிதமாக இந்து பக்தர்களிடம் நடந்து கொண்டுள்ளது ஒரு வெறுப்பியல் நிகழ்ச்சியாகவே காணவேண்டியுள்ளது.

Labels: , ,

Tuesday, August 14, 2007

முருக பக்தர்களை மின்சாரம் பாய்ச்சி கொல்ல சதி


சென்னி மலை முருகன் கோவில் மிகவும் பழமையானதும் பிரசித்தி பெற்றதும் ஆகும். ஈரோட்டிலிருந்து 26 கிலோமீட்டர்கள் தொலைவிலும் பெருந்துறையிலிருந்து 3 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்திருக்கும் இக்கோவில் மலை மீது அமைந்துள்ளது. இதற்கு 1320 படிகள் உள்ளன. கடல்மட்டத்திலிருந்து 600 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு 1320 படிகளும் ஏறி பக்தர்கள் வந்து செந்தமிழ் கடவுள் முருகப்பெருமானை வணங்கி அருள் பெறுவது வழக்கம். படிகள் போகும் வழிகளில் ஆங்காங்கே பக்தர்கள் இளைப்பாற மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று ஆடி செவ்வாய் என்பதால் கூட்டம் அலை மோதும். இந்நிலையில் 500 படிகள் தாண்டி சில பக்தர்கள் இளைப்பாறிக்கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு மெல்லிய கம்பி படிகளில் செல்வதைக் கண்டனர். அதனை கூர்ந்து நோக்கிய போது மின்சார இணைப்பிலிருந்து ஒரு லைன் தனியாக எடுத்து அதனை கோவில் படிகளில் கொடுத்திருப்பதைக் கண்டனர். கோவில் நிர்வாகத்துக்கு இது தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடந்த சோதனையில் கோவிலுக்கு வரும் சாலையிலும் இதே போல பயங்கரவாத விஷமத்தனம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இந்துக்களுக்கு எதிரான படுகொலை முயற்சிகள் அதிகரிப்பதும் பயங்கரவாத-அடிப்படைவாத அமைப்புகளுக்கு ஆட்சியாளர் துணைபோவதும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அல்-கொய்தா ஏற்கனவே இந்தியாவை குறிவைத்துள்ளதாகக் கூறியுள்ள வேளையில் சுதந்திர தினத்தையொட்டி இவ்விதம் நிகழ்ந்துள்ளது பயங்கரவாதக் கும்பல்களின் திட்டமிட்ட சதியோ என மக்களை எண்ண தூண்டியுள்ளது. (ஆதாரம்: தமிழ்முரசு 14-8-2007)

Labels: , ,

Sunday, August 12, 2007

இந்து வாழ்வுரிமை: தமிழகம் 2007

ஆகஸ்ட் 3 அன்று குமரி மாவட்டத்தில் இந்துக்களின் புனித தினமான ஆடிப்பெருக்கை ஒட்டி இந்து கோவில் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளன.மேலும் இந்து கோவில் ஒன்றில் திருட்டு நடத்தப்பட்டுள்ளது. இரணியல் அருகே கோவிலுக்குள் புகுந்து அம்மன் சிலை உடைக்கப்பட்டுள்ள இந்த சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் இத்தகைய தொடர் சிலை உடைப்பு சம்பவங்கள்-வெறுப்பியல் குற்றங்கள்- தொடர்கதையாகி வருகின்றன. இந்துக்களின் புனிதநாட்களை ஒட்டி இச்சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திமுக வெற்றி பெற்றது அறிவிக்கப்பட்ட உடனேயே கன்னியாகுமரி சிவன் கோவிலில் நாகர் சிலைகள் உடைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: நெல்லை மாலைமுரசு:3-8-2007

இந்துக்களின் பிரபல பக்தி பாடல்களின் மெட்டில் ஆபாச பாடல்களை அமைக்கும் போக்கு தமிழ்நாட்டு திரையுலகில் கூடியுள்ளது. இப்போது அர்ஜுன் நிலா நடிக்கும் ஒரு திரைப்படத்தில் ஒரு குத்தாட்ட பாடலாக 'மருதமலை மாமணியே முருகையா' எனும் பாடல் மெட்டில் போடப்படுகிறது. ஏற்கனவே கற்பூர நாயகியே கனகவல்லி எனும் பாடல் ஒருஆபாச பாடலுக்கு மெட்டாக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக இதனை எதிர்த்து போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது.
>
நன்றி: நெல்லை மாலைமுரசு:3-8-2007

Labels: , ,

Saturday, May 19, 2007

முறியடிக்கப்பட்ட கீழ்த்தர கிறிஸ்தவ மதமாற்ற மோசடி


கோவை மாவட்டம்:
பல்லடம் அருகே செஞ்சேரி மலைப்பகுதி
"சேவாபாரத் அமைப்பினை சேர்ந்தவர்கள் நாங்கள். பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு சேவை செய்ய - விடுமுறை கால வகுப்புக்கள் நடத்த வந்திருக்கிறோம்." என்று சொல்லிக்கொண்டு வந்திருக்கிறது ஒரு கும்பல். நல்லதுதான் செய்கிறார்கள் என நம்பிய
பெற்றோர்களும் குழந்தைகளை இங்கு அனுப்பியிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு பிஸ்கெட்களும் கூல் டிரிங்க்ஸ்களும் புத்தகங்களும் கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக குழ்ந்தைகள் மனதில் கிறிஸ்தவ விஷத்தை செலுத்தியிருக்கிறார்கள் அந்த சமூகசேவை தோல்
போர்த்திய போதக ஓநாய்கள். மெல்ல மெல்ல விஷம் கசிந்தது. பிஞ்சு குழந்தைகள் தங்கள் பெற்றோர் வைத்த பெயர்கள் மேல் வெறுப்புடன் கிறிஸ்தவ பெயர்களை அறிவித்திருக்கிறார்கள். "அப்பா இனிமேல் என் பெயர் இசக்கி இல்லை இலியாஸ்" என்ற போது அதிர்ந்த தந்தை சந்தேகம் அடைந்திருக்கிறார். வெள்ளிக்கிழமை ஊர் திருவிழா வந்த போது குழந்தைகள் "ஏசுதான் ஒரே சாமி இது சாமி இல்லை இதை கும்பிடக்கூடாது"
என சொன்ன போதுதான் ஊர் மக்களுக்கு விசயம் தெரிந்து சேவாபாரத் அமைப்பினை விரட்டி அடித்திருக்கிறார்கள். குழந்தைகளுக்கு கோடைக்கால வகுப்புகளில் அளிக்கப்பட்ட நூல்களை பார்த்த போது அனைத்துமே ஏசு குறித்த நூல்களாக இருந்தது தெரியவந்துள்ளது. விதம்
விதமாக கிறிஸ்தவபோதனைகள் அளிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, "விமானத்தை கண்டுபிடித்தவர்கள் ரைட் சகோதரர்கள், டெலிபோனை கண்டுபிடித்தவர் அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் என்றெல்லாம் சொல்லிவிட்டு இவுங்க பேரையெல்லாம் பாருங்க..இவங்க கிறிஸ்தவங்க ஏசு
சாமியை கும்பிட்டவங்க அதனாலதான் இவங்களால இதையெல்லாம் கண்டுபிடிக்க முடிஞ்சது. நீங்களும் பேரை மாத்திகிட்டு ஏசுவை கும்பிட்டா அவங்களை போல சாதிக்கலாம்"
என்றெல்லாம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். கிராமத்தவர்கள் கோபம் அடைந்துவிட்டார்கள் என தெரிந்ததும் இதனை நடத்திய சாமுவேல் ஓடிப்போய்விட்டார். அந்த இடத்தில் ஆசிரியர் கையேடுகள் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இப்படிப்பட்ட மோசடி கோடைக்கால மதமாற்ற மூளைச்சலவை நிலையங்கள் நடத்துகின்றனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டல ஐ.ஜியான ராஜேந்திரன் இதனை கேட்டு "இப்படியெல்லாமா நடக்கிறது!" என அதிர்ந்திருக்கிறார். "காமநாயக்கன்பாளையம் போலீஸாரை சொல்லி உடனடியாக நடவடிக்கை எடுக்க சொல்கிறேன். மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறதா என விசாரிக்க சொல்கிறேன்" என்று கூறியுள்ளார். அதே நேரத்தில் புளியமரத்துபாளையம் என்ற இடத்திலும் இதைப்போன்ற சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இதில் ஈடுபட்ட பாபு என்கிற மோசடி மதமாற்ற ஆசாமி "நான் செய்தது தப்புதான். இனிமேல் இதுபோல மதமாற்ற சம்பவங்களில் ஈடுபடமாட்டேன். இந்த ஊர் பக்கமே வரமாட்டேன்." என எழுதி கொடுத்திருக்கிறார். இந்த விசயங்களை எல்லாம் மக்கள் புகாராக எழுதி போலிஸில் பாபுவை ஒப்படைத்திருக்கின்றனர். போலீஸ் பாபுவை எச்சரித்து அனுப்பியிருக்கிறது. சேவாபாரதி என்பது உண்மையான சமூக சேவை தொண்டு நிறுவனம். சுனாமியின் போது இந்த அமைப்பு கடலூர் பகுதிகளில் செய்த சேவை மூலம் மக்களிடம் நல்ல மதிப்பை பெற்றுள்ள அமைப்பாகும். எனவே அதே அமைப்பின் பெயரை போல மோசடியாக தமது அமைப்பின் பெயரை 'சேவாபாரத்' என தந்திரமாக வைத்துக்கொண்டு இந்த மோசடி வேலையில் கிறிஸ்தவ மதமாற்றிகள் ஈடுபட்டுள்ளனர். சரியான விதத்தில் எச்சரிக்கையாக செயல்பட்டு மதமாற்றத்தை தடுத்த ஊர் மக்களும் இந்த மோசடியை தைரியமாக வெளியே கொண்டு வந்திருக்கும் ஜூனியர் விகடனுக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்.
நன்றி: ஜீனியர் விகடன், 'பிஞ்சுக்களை மதமாற்றியதா சமூக அமைப்புகள்?' ரிப்போர்ட் by R.லோகநாதன், 23-5-2007

Labels: , ,