Wednesday, March 31, 2010

Setting the Record Straight for the Rudrans-II

எனது மெயில்
Wed, Mar 17, 2010 at 1:59 PM
//Take your time Doctor. And let us talk with open hearts.
Perhaps it will be a learning experience and even a pleasure for both of us.
luv
Arvind.S//

அடுத்த மெயில்
Wed, Mar 17, 2010 at 6:59 PM
subject Re: well,
அன்புள்ள ருத்ரன்,

1. நீங்கள் 'உரையாடும்' மேரி (அவளது நித்திய கன்னித்தன்மையே மொழி பெயர்ப்புத் தவறினால் அவள் சுமக்கும் கட்டாயம்) குறித்த மெல்லிய நகைச்சுவை, உங்களைப் போல மெத்த படித்த வயது முதிர்ந்த உளவியலாளருக்கு உறுத்தல் ஏற்படுத்துகிறது. அப்போது ராஜா ரவிவர்மா காலெண்டர் ஆர்ட் சரஸ்வதியையே பார்த்து வளந்த ஹிந்துவுக்கு ஹுசைனின் ஓவியம் என்ன விளைவை ஏற்படுத்தும்?

2. ஆனால் அப்படி ஒவ்வொரு ஹிந்துவினிடமும் ஹுசைனின் கலையை கொண்டு சென்று ஹிந்துத்துவவாதிகள் அவருக்கு எதிராக வெறுப்பை கிளப்பவில்லை. அதே நேரத்தில் அவர் நிர்வாணத்தை ஒரு வெறுப்பின் வெளிப்பாடாக பிற இடங்களில் காட்டியிருப்பதை சுட்டிக்காட்டி அவருக்கு எதிராக வழக்கு தொடுத்திருக்கிறார்கள். இங்கு பிரச்சனை நிர்வாணம் அல்ல. நிர்வாணத்தை இழிவுப்படுத்தும் ஒரு குறியீடாக ஹுசைன் உபயோகப்படுத்தியிருக்கிறாரா என்பதுதான். இதற்கான பதிலைத்தான் நீங்கள் கொடுத்திருக்க வேண்டும். மாறாக எவ்வித creativity இம் இல்லாமல் ஹுசைன் க்ளோனாக ஒரு படத்தை வரைந்து என்னையும் யாராவது கலைத்தியாகி ஆக்க மாட்டார்களா என வேண்டுகோள் விடுவது is funny and is not funny. (எல்லாரும் பாத்துக்குங்க நானும் ரவுடிதான்ங்கிற மனச்சிக்கல் உங்களுக்கு இருக்குதோன்னு தோணுது.)

3.இதுவரை எத்தனை இடங்களில் ஹுசைன் அவர் தாக்கப்பட்டார்? அவரது ஓவியங்களில் எத்தனை அழிக்கப்பட்டன?

4. பொதுவாகவே ஹுசைனுக்கு ஜனநாயகத்தின் மீது ஒரு ஆழ்ந்த வெறுப்பு இருக்கிறது. நெருக்கடி நிலையை உருவாக்கி இந்தியாவை உண்மையிலேயே எதேச்சதிகாரத்துக்கு அருகில் இந்திரா கொண்டு சென்ற பின்னர் மொரார்ஜியை குரங்காகவும் இந்திராவை துதி செய்தும் ஓவியங்கள் தீட்டியவர் அவர். ஹுசைன் ஹிந்து மதத்தையும் இதே தன்மையுடன் அணுகிறார் என்றே அவரது ஓவியங்களைக் காணும் போது தோன்றுகிறது. ஹுசைனின் ஓவியங்களின் ஊற்றுக்கண் அவர் ஆழ்மனதில் வெறுக்கும் ஹிந்து தேவ தேவியராக அமைந்து தொலைக்கிறார்கள். குறிப்பாக பெண் தெய்வங்கள். அவர் சார்ந்த மதத்தில் மிகவும் மோசமான தீமையாக பெண் தெய்வங்களே கருதப்பட்டார்கள். அவர் சார்ந்த மதத்தில் இறைதூதராக நம்பப்படும் நபர் அவர்கள் புனிதமாக கருதும் நகரை வென்ற போது கறுநிற பெண் தெய்வம் அழுதபடி ஓடி அழிந்ததாக நம்பிக்கையாளர்கள் கருதுகின்றனர். இந்த பெண் தெய்வ எதிர்ப்பு இறையியலின், இறையியல் சார்ந்த வெறுப்பின், கலைவெளிப்பாடாக ஹுசைனின் ஓவியங்கள் தொடர்ந்து ஹிந்துக்களின் பெண் தெய்வங்களை காட்டுவதை ஒரு ஹிந்து கண்டால் அதனால் மனம் வெதும்பி வழக்கு தொடர்ந்தால் அதில் என்ன தவறு இருக்க முடியும்? நினைவில் கொள்ளுங்கள் இந்தியாவில் இறை நிந்தனை சட்டங்கள் எதுவும் இல்லை. ஆனால் ஹுசைன் "அடைக்கலம்" அடைந்த நாட்டின் நிலை என்ன? அங்கு இஸ்லாமியன் இஸ்லாமைத் துறந்தால் சட்டப்படி மரணத்தண்டனை. தனியார் பத்திரிகை என்றாலும் அரச குடும்பத்தினரும், அரசியல்வாதிகளும் சொந்தமாக நடத்தும் அல்-வதன் இதழோ யூத வெறுப்புச் சித்திரங்களை தீட்டுவதை ஒரு மதக்கடமையாகவே நிறைவேற்றி வருகிறது. இந்தியாவில் வழக்கைச் சந்திக்காமல் கத்தாரில் குடியுரிமை வாங்கியதில் ஹுசைன் சொல்லும் செய்தி இதுதான்: ஜனநாயகத்தில், ஜனநாயகமான ஆன்மிக மரபில் எனக்கு நம்பிக்கை இல்லை.

சிந்தியுங்கள்.

அன்புடன்

அரவிந்தன் நீலகண்டன்
- Show quoted text -

அடுத்த மெயில்
Wed, Mar 17, 2010 at 8:26 PM
subject Re: well,
mailed-by gmail.com
Dear Dr.R,

I have never put any comment in your blog in which i have not identified myself in my own name. In fact I have been active in the net-space for the last 10 years and have never abused anyone that too in pseudonym. On the contrary because I use my name i have received all sorts of abuse and even threats. But I have never made them public trying to portray myself as a martyr.

I have work in Chennai so I will be leaving Kanyakumari for Chennai tomorrow. Perhaps we can talk in phone.

luv
s. aravindan neelakandan

அடுத்த மெயில்
Wed, Mar 17, 2010 at 8:36 PM
subject Re: well,
mailed-by gmail.com
hide details Mar 17
Thank you for the wish. It is not your wish but your high pedestal blessings and certification that i do not want.

s. an

அடுத்த மெயில்
dear doctor,

ur wishes work well. :)
my trip has been cancelled.
i left a comment on ur blog
but power went off so not sure u got it.
did u
or should i repost it

அடுத்த மெயில்;
date Thu, Mar 18, 2010 at 10:20 PM
subject Re: well,
mailed-by gmail.com
hide details Mar 18 (13 days ago)
Tried to put this in your blog. But your blog comment box refused. So here it is:

அன்புள்ள ருத்ரன்,

உங்கள் கட்டுரையில் நீங்கள் காட்டியிருப்பது தவறான பார்வை. உதாரணமாக:
// பேச்சி மட்டுமல்ல, முனியையும் மாரியையும் கும்பிடும் அவர்கள், தங்கள் சாமியை எவனாவது அவமானப்படுத்தினான் என்று நினைக்க மாட்டார்கள். அவர்கள் கும்பிடும் சாமி எந்த மனிதனாலும் அவமானப் படுத்தப்பட முடியாத அளவுக்கு வீர்யமானது. நம்மையே பார்த்துக் கொள்ளும் சாமி தன்னை இன்னும் சரியாகப் பார்த்துக் கொள்ளும் எனும் அவர்களது நம்பிக்கை,//

இல்லை. முனைவர்.அ.கா.பெருமாள் நாட்டார் வழக்காற்றியலின் முன்னோடி ஆய்வாளர்களில் ஒருவராக கருதப்படுபவர். இவரது 35 ஆண்டு கால கள ஆய்வுப் பணிகளை "சுண்ணாம்பு கேட்ட இசக்கி" எனும் நூலாக எழுதியுள்ளார் (United Writers, 2006) ஒரு கிராமப்புற பெண் தெய்வத்தை (தீப்பாஞ்ச அம்மன்) குறித்த கள ஆய்வு. அத்தெய்வ சிற்பத்துக்கு கல்லிலேயே ஆடை செதுக்கியிருக்கிறார்கள் கூடவே மேலே பாவாடை சாத்தியிருக்கிறார்கள். ஆராய்ச்சியாளருடன் கூடவே 'தகவலாளி' (informer - நம் சமுதாய அறிவியல்கள் அனைத்துமே இத்தகைய உளவுத்தன்மையுடன் இருப்பது ஒரு காலனிய விளைவு) அம்மனின் ஆடையை நீக்கி படமெடுக்கின்றனர். இனி பேராசிரியரின் வார்த்தைகளில் "அப்போது நீட்டி முழக்கி யாரோ ஏசும் சப்தம் கேட்டது. 'ஏ நாசமாப் போவான் சண்டாளா சாமக்காரா அம்மணங்குண்டியாவா அம்மன போட்டோ எடுப்பா? வெளங்கா...மகனே!துலங்காத....மகனே" என தொடர்ந்து ஏசும் சப்தம் கேட்டது....ஜம்பர் அணியாத அந்தப் பாம்படக் கிழவி சொன்னதையே திரும்ப திரும்பச் சொன்னாள்.

பாவம் ருத்ரனின் 'எப்படி அம்மனையும் முனீஸ்வரனையும் வணங்கும் மக்கள் நடந்து கொண்டால் என் வலைப்பதிவில் பாராட்டு கிடைக்கும்' என்கிற வரையறை அந்த 'ஜம்பர் அணியாத பாம்படக் கிழவி'க்கு கிடைக்கவில்லை போலும் அல்லது ஒருவேளை அவள் 'ஹிண்டூஸ்'களால் 'இன்ப்ளூயன்ஸ்' ஆகியிருப்பாளோ? க்ளோபல் டாக்டர் ப்ராயிடும் லோக்கல் டாக்டர் ருத்ரனுமே அறிவர். கிராம தேவதைக் குறித்து முனைவர் அ.கா.பெருமாள் மேலும் எழுதுகிறார்: "அம்மன் பாவாடையும் தாவணியும் இல்லாமல் இருந்தாலும் அம்மணமாக இருக்க மாட்டாள். சிற்பி கல்லிலேயே ஆடையைச் செதுக்கி இருப்பான். மோகினி உருவம் மட்டும்தான் பெண் உறுப்பைக் காட்டிக்கொண்டிருக்கும். நிர்வாணச்சிலையை யாரும் பிரதிஷ்டை செய்ய மாட்டார்கள்." ஒருவேளை மயிலாடி சிற்பிகளெல்லாம் ரவிவர்மா படத்தைதான் மாடலாக வைக்கிறார்களோ? ஆடையோடு வடிக்கப்பட்ட அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்ட துணியாடையை எடுத்ததற்கே இந்த பேச்சு. இதை ஒரு சமூக-மனவியல் பரிசோதனையாகவே செய்யலாம். ஒரு பதினைந்து கிராம அம்மன் கோவில்களை தேர்ந்தெடுப்போம். ருத்ரன் அங்குள்ள அம்மன்களை நிர்வாணமாக ஹுசைன் 'இசுடைலில்' வரையட்டும். பின்னர் அந்த ஊர் கிராம பெண்களை அழைப்போம். இதோ உங்க ஊர் அம்மன். இதை நாங்க பெரிய 'ஃபைவ் இஷ்டார் ஓட்டலுல' ரிஸப்ஷன்ல வைப்போம். என்று சொல்லுவோம். எத்தனை ஊர்களில் துடப்பக்கட்டையால் அடி படாமல் வருகிறோம் என்பதை நாம் பிறகு எலும்புசிகிச்சை மருத்துவமனை பில்லுடன் சேர்த்து கணக்கிடலாம்.

சரி விடுங்கள். இந்த நிமிஷத்தில் எத்தனை ஊர்களில் சாதாரண கிராம மக்கள் -பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள்- தங்கள் அம்மன் கோவில்களை ஆதிக்க அன்னிய மதமாற்ற சக்திகளிடமிருந்து பாதுகாக்க உயிரைக் கொடுத்து போராடிக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? இந்த சுட்டியை க்ளிக்குங்கள் தெரியும்: http://www.tamilhindu.com/2010/01/hindus-under-attack-in-dindigul-village/

அய்யா ருத்திரனே நீங்கள் முற்பட்ட சமூகத்தை சார்ந்தவராக இருக்கலாம். நீர் சமுதாயத்தின் மேல்தட்டை சார்ந்தவராக இருக்கலாம். உம்முடைய ஓய்வு அறையின் romantic imaginationக்கு எங்கள் மக்கள் அன்னிய ஆக்கிரமிப்பு அழிப்பு மதமாற்ற மதங்களை எதிர்த்து நடத்தும் போராட்டங்களை கொச்சைப் படுத்தாதீர்கள். எங்கள் தாய் தெய்வங்கள் அன்னியமதமாற்றிகளால் பழிக்கப்படுகின்றன. பேய்கள் என்றும் பிசாசுகள் என்றும் சொல்லப்படுகின்றன. நாங்கள் அவற்றை எதிர்த்து போராடுகிறோம். எங்கள் போராட்டம் இன்று நேற்று தொடங்கியதல்ல. சாதியத்தால் அடக்கப்பட்ட எம் மக்களின் சமூக விடுதலைக்கும் மதமாற்றத்தால் அழிக்கப்படும் எம் மக்களின் ஆன்மிக விடுதலைக்குமான இப்போராட்டம் அய்யா வைகுண்டர் போன்ற அவதார புருஷர்களால் காவிக் கொடியின் கீழ் பிரகடனம் செய்யப்பட்டது. சாய்வு நாற்காலியில் சரிந்தபடி புளித்த ஏப்பம் விடும் ஹிண்டு பத்திரிகை படிக்கும் சீனவிசுவாசி நகரவாசிகளால் அல்ல.

எனவே அடுத்த முறை ஏதாவது எழுதுவதற்கு முன் வெறும் புத்தகங்களை மட்டுமல்ல அடக்கப்பட்ட எம் மக்களின் வரலாற்றையும் தெரிந்து கொண்டு கதையுங்கள்.

அன்புடன்

அடுத்ததாக நான் இவருக்கு அனுப்பிய ஒரு பெர்ஸனல் மெயில் அதில் உள்ள என்னைக் குறித்த சில தனிப்பட்ட இந்த விவாதத்துக்கு தேவையில்லாத சில தகவல்களை மட்டும் நீக்கிவிட்டு அதனையும் இங்கே வெளியிடுகிறேன். இம்மடலை நான் இந்த மனிதருக்கு அனுப்பிய காரணத்தையும் சொல்ல வேண்டும். அவரது குடும்ப நபரைக் குறித்து மோசமாக எவனோ அனுப்பியதால் அவர் மனச்சோர்வுற்றிருக்கலாம் என நினைத்து இணையத்தில் இது ஒரு occupational hazard இதை விட மோசமான கொடுமைகளை திராவிடனிஸ்ட் வக்கிரங்களிடமிருந்து நாங்கள் அனுபவித்திருக்கிறோம் எனவே கவலைப்படாதீர்கள் என்பதற்காக எழுதியது...

Dear Dr. Rudran,

I hope you will answer my mail. I am really sad to see the kind of obscene messages you have received.
But what pains me is the irrational correlation of a mental disease/perversion with what you call "Parpaneeyam".

In 2007 almost daily my mail box used to be filled with unprintable filthy comment -***. This was done not by an individual but by a group. Some of these group members were then even my friends (though I did not know it then,) It was their tactics and they tried to get personal data through friendship and then pass it on to their friend in Malaysis who in turn would fill your mail box will all obscenities and hinting that they know about your personal life. Some of us tried hard to nail these guys. And at last the very group had an internal fight and then the person who was actually posting the obscene things was handed over to cyber police. And all this perversion was done in the name of fighting against Brahminism. Some of these guys I actually find in your blog supporting you. A funny thing.

So the problem you face is neither peculiar nor ideology based. It is a perversion arising out of the immense freedom and anonymity that web provides. best way is to ignore him or if u want to be pro-active approach some good cyber-wizards

I have stored these obscene messages without publishing because they give a peep into a pathological mind which only uses the mask of an ideology. And that mind -its pathology- interests me. Perhaps I can even help. But I stopped blogging.

Here are just a very small fraction of the kind i was forced to look at when i opened my mail box
[just some samples of worst abuses i received about my family members and myself from Poli]
So Dear Dr. Rudran,

Relax. We all have gone through this phase in our lives in Blog-sphere.
The world will always be like that. This is the freedom one has to pay for the other great democratization the net provides.

Good Night.
luv
S. aravindan neelakandan

3 Comments:

Anonymous Anonymous said...

அன்புள்ள அரவிந்தன் நீலகண்டன்,

உங்கள் பதிவுக்கு நண்பர் ராஜன் மூலம் வந்தேன். உங்களிடமிருந்து வேறுபடுகிறேன்.

ஹுசேனின் நோக்கம் எதுவாக இருந்தால் என்ன? அவர் ஹிந்துக்களை "அவமானப்படுத்தவே" இந்த ஓவியங்களை வரைந்தார் என்றே வைத்துக் கொள்வோம். அவருக்கு சட்டபூர்வமாக கொடுக்கப்படும் "தண்டனை" அல்லது "மன்னிப்பு" அவரது நோக்கத்தை வைத்தா இல்லை ஓவியத்தை வைத்தா? அவர் அவமானப்படுத்தும் நோக்கத்துடன் "நல்ல" ஓவியத்தை வரைந்தால் என்ன செய்வீர்கள்? ஒரு பேச்சுக்கு இப்படி வைத்துக் கொள்வோம். நிர்வாணமாக வரைவது அவரைப் பொறுத்த வரை ஒருவரை உயர்த்துவது; ஆடையுடன் வரைவது அவரை தாழ்த்துவது; சரஸ்வதியை ஆடையுடன் வரைகிறார்; கேஸ் போடுவீர்களா? ஹுசேன் நல்லவரா, கெட்டவரா, நல்ல எண்ணத்துடன் வரைந்தாரா கெட்ட எண்ணத்துடன் வரைந்தாரா அவருக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இருக்கிறதா இல்லையா ஓவியத்தின் குறியீடு என்னென்ன என்பதெல்லாம் பேச சுவாரசியமாக இருக்கும். ஹுசெனைப் புரிந்து கொள்ள உதவும். ஹுசேனை ஒதுக்குங்கள், இல்லை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வகுத்துக் கொள்ள உதவும். ஆனால் அவை எல்லாம் சட்டத்துக்கு irrelevant!

இறை நிந்தனை சட்டம் இல்லை என்றால் ஹுசேன் மீது எந்த அடிப்படையில் "மனம் வெதும்பி" கேஸ் போடப்படுகிறது? சும்மா அவரை அலைக்கழிக்க மட்டும்தானா?

என்னைப் பொறுத்த வரையில் ஹுசேனின் ஓவியங்கள் கருத்து சுதந்திரம் என்பதற்குள் அடங்குகின்றன. ஹிந்துக்களை "அவமானப்படுத்த" அவருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அப்படி செய்யாமல் இருப்பது ஒரு social courtesy மட்டுமே. நீங்கள் இதை எதிர்த்தால்; தயானந்தா சரஸ்வதி அன்றைய "விதியை" மீறி சுத்தி இயக்கம் தொடங்கியது பல ஹிந்துக்கள் மனதை புண்படுத்தியது, அதனால் அதையும் எதிர்க்க வேண்டி இருக்கும்; உடன்கட்டை ஏறுவதை எதிர்த்தது பல ஹிந்துக்கள் மனதை புண்படுத்தியது; ஜாதி ஒழிய வேண்டும் என்று நூறு வருஷத்துக்கு முன் ஆயிரத்தில் ஒருவர் கூட நினைத்திருக்க மாட்டார், அன்று போராடியவர்கள் எல்லாரையும் எதிர்க்க வேண்டி இருக்கும்; ஹுசேனை நான் அவர்கள் லிஸ்டில் சேர்க்கவில்லை, ஆனால் ஒன்றை எதிர்த்து மற்றதை ஆதரிப்பது logically inconsistent. மனம் புண்படுவது என்பதை அடிப்படையாக கொண்டால் பாமியன் சிலைகள் கூட தாலிபான்காரர்கள் மனதை புண்படுத்தியன. intangible effects cannot be the basis here .

போராட வேண்டியது ஹுசேனை எதிர்த்து இல்லை; மிட்னைட் சில்ரன், டாவின்சி கோட் மற்றும் பல தடைப்படுவதை எதிர்த்து. நம் அரசின் கோழைத்தனத்தை எதிர்த்து. அதை விட்டுவிட்டு அவன் விஷயத்தில் தவறு செய்யும் அரசு என் விஷயத்திலும் செய்ய வேண்டும் என்று போராடுவதில் அர்த்தமில்லை.

எம்.எஃப். ஹுசேனின் "சர்ச்சைக்குரிய" ஓவியங்கள்

ஹுசேனின் கட்டார் முடிவு

ஹுசேன் - சில எதிர்வினைகள், எதிர்வினைகளுக்கு எதிர்வினைகள்

2:29 AM, April 01, 2010  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//ஹிந்துக்களை "அவமானப்படுத்த" அவருக்கு எல்லா உரிமையும் இருக்கிறது//
அதைப் போல அவர் மீது வழக்கு தொடுக்கவும் ஒரு ஹிந்துவுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது.
சமூக சீர்திருத்தம் வேறு. வெறுப்பை உமிழ்வது வேறு.
ஹுசைன் செய்தது வெறுப்பை உமிழ்வது.
ஹுசைன் ஆதரவாளர்கள் ஆர்ப்பரித்து பொங்கியது ஹுசைனுக்காக மட்டுமே. அவனது தூரிகையின் அடி ஹிந்துக்கள் மீது விழுந்ததால் மட்டுமே
அதே ஆசாமிகள் பிற கணங்களில் மௌனித்ததும் அதனால்தான்.
ஆக இங்கு நடப்பது அரசியல். அடையாள அரசியல். கலைச்சுதந்திரம் குறித்த விவாதமல்ல. மேரியை குறித்த நகைச்சுவையால் சங்கடத்தில் நெளிபவர் ஹுசைனுக்காக ஆர்ப்பரிக்கும் அவலம் அதனால்தான் நிகழ்கிறது.

2:50 AM, April 01, 2010  
Anonymous Anonymous said...

அன்புள்ள அரவிந்தன் நீலகண்டன்,

நீங்கள் சல்மான் ரஷ்டி, தஸ்லிமா நஸ்ரீன் போன்றவர்களைப் பற்றி என்ன நிலை எடுக்கிறீர்கள்? அவர்கள் புத்தகங்கள் தடை செய்யப்பட வேண்டியவைதானா? தடை செய்யப்பட வேண்டியவை என்று ஒரு சட்டம் இருந்தால் அது சரியான சட்டம்தானா? ரஷ்டியின் புத்தகம் வெறுப்பை உமிழ்கிறது என்று நினைப்பவர்கள் நிறைய பேர் உண்டு. Subjective feelings of "victims" cannot be the basis for government action and only tangible actions against the "victims" can be a realistic basis.

இறை நிந்தனையை தண்டிக்க சட்டம் இல்லை என்று எழுதி இருந்தீர்கள். அப்புறம் ஹுசேன் மேல் என்ன கேஸ்?

12:31 PM, April 01, 2010  

Post a Comment

<< Home