Thursday, July 19, 2007

குமரி: இந்து கோவில் சிலைகள் உடைப்பு


செய்தி: மாலைமுரசு : நெல்லை பதிப்பு 19-7-2007>

குமரி மாவட்டத்தில் இந்து கோவில் சிலைகள் உடைப்பது தொடர்கதையாக தொடர்கிறது. நேற்று விஷமிகள் கருங்கல் சுணங்கல் பாறை தர்ம சாஸ்தா கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டு வந்த 12 நாகர் சிலைகளில் 4 சிலைகளை உடைத்து நொறுக்கி விட்டு தப்பி சென்றுவிட்டது. கோவில் கமிட்டி தலைவர் கொடுத்த புகாரின் பெயரில் கருங்கல் போலிஸார் சிலை உடைப்பு கும்பலை தேடி வருகின்றனர். கோவில் சிலைகள் உடைக்கப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கிறிஸ்தவர்களால் திருவட்டார் காவு சாஸ்தா கோவில் சிலைகள் உடைக்கப்பட்டு குளத்தில் எறியப்பட்டதும் இந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி அறிவிக்கப்பட்டதும் கன்னியாகுமரியிலும் நாகர் சிலைகள் உடைக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்க சம்பவ ஒற்றுமைகள் ஆகும்.

0 Comments:

Post a Comment

<< Home