Sunday, December 31, 2006

சிலை உடைப்பும் பயங்கரவாத சுவர்க்கமும்


கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் பிரச்சனை. மரத்தடி சாஸ்தா கோவில் பீடத்தை உடைத்து சாஸ்தா சிலையை உடைத்து குளத்தில் எரிந்துள்ளனர் மத வெறியர்கள். காலம்
காலமாக மக்கள் வழிபட்டு வரும் மரத்தடி தர்ம சாஸ்தா கோவில் திருவட்டார் அருகே அமைந்துள்ள ஆற்றூர்குழிவிளை எனும் ஊரில் அமைந்துள்ளது.இதற்கு 100 அடி தூரத்தில்
பெந்தகோஸ்தே அமைப்பினர் 'செப பிறை' ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவினார்கள். (ஏனென்றால் ஒரு மதத்தவர் ஆலயங்களுக்கு அருகே பிறமதத்தவர் ஆலயங்கள் அமைக்க தடை உள்ளது. எனவே சர்ச் என்று சொல்லாமல் ஜெப கூடாரம், ஜெபவீடு, ஜெபபிறை என்கிற பெயர்களில் இவர்கள் முதலில் அமைப்பார்கள்.) பின்னர் அது சர்ச் ஆகியுள்ளது. இந்நிலையில் கடந்த கார்த்திகை 1 ஆம் தியதி ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிவிப்பு விழா நடத்திய போது இந்த பெந்தகோஸ்தே கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு
தெரிவித்தனர். இதனையடுத்து 'சிறுபான்மையினர் பாதுகாப்பு பேரவை' என்கிற பெயரில் ஒரு கூட்டத்தை கார்த்திகை 1 ஆம் தேதி கூட்ட முயன்றனர். இதற்கு போலிஸ் அனுமதி
வழங்க மறுத்துவிட்டனர். இந்நிலையில் தமிழ்முரசு (டிசம்பர் 31 2006) செய்தி:
"திருவட்டார் டிச.31 திருவட்டார் அருகே கோவில்-சர்ச் பிரச்சனையில் நேற்று இரவு சாஸ்தா கோவில் சிலைகள் உடைக்கப்பட்டு அருகில் இருந்த குளத்தில் வீசப்பட்டதால் பெரும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..... சாஸ்தா கோவிலில் நேற்று இரவு சுவாமி சிலை இருந்த பீடமும் சுவாமி சிலையும் உடைக்கப்பட்டிருந்தன.பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டு அருகில் இருந்த குளத்தில் வீசப்பட்டு கிடந்தன."




நன்றி: தமிழ்முரசு -நாகர்கோவில் பதிப்பு- 31-12-2006


பயங்கரவாதிகளின் சுவர்க்கமாகிறது தமிழ்நாடு:

தமிழ்நாடு இந்து விரோத பயங்கரவாதிகளின் சுவர்க்க பூமியாகி வருகிறது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அண்மையில் 2005 தீபாவளி சந்தை தாக்குதல் போலவே டெல்லி
பகர்கஞ்ச் சந்தை பகுதியில் வெடிகுண்டு வைத்து ஏராளமானவர்களை கொல்ல திட்டம் வகுத்த சமியுல்லா (34) மற்றும் அலி முகமது (26) ஆகிய லஸ்கர் ஈ தொய்பா
பயங்கவரவாதிகளை ஜாயிண்ட் கமிஷனர் டெல்லி போலிஸ், கர்னால் சிங் கைது செய்தார். சமியுல்லாவும் முகமதுவும் அவர்கள் பயங்கரவாத திட்டத்தை நிறைவேற்றிய பின்னர்
தமிழ்நாட்டிற்கு தப்பி செல்ல திட்டம் தீட்டியிருந்ததை கர்னால் சிங் வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது இந்துக்களின் வாழ்வுரிமையும் வழிபாட்டுரிமையும் நசுக்கப்பட்டுவரும் அதே நேரத்தில் பயங்கரவாதிகள் பதுங்கும் சுவர்க்கபுரியாக (ஆயில் மசாஜ் செண்டர், ஆயுர்வேத
சிகிச்சை மற்றும் சிறையில் கூட சிக்கன்) தமிழ்நாடு மாறிவருகிறதா? என்பதனை இந்துக்கள் சிந்திப்பதுடன் இந்த பாசிச பயங்கரவாத ஆதரவு அரசுக்கு எதிராக அகில இந்திய
அளவில் குரல் எழுப்பவும் வேண்டும்.

1 Comments:

Anonymous Anonymous said...

vilai pona madayarkku silayin arumai theriyathu enbathu ithuthan.

9:48 AM, August 03, 2009  

Post a Comment

<< Home