Saturday, July 21, 2007

ஓமலூர் விவகாரம்: சுகன்யா மரணம்

தினகரன்: (21-நவம்பர் 2006)



கடந்த 3-9-2006 அன்று அகில இந்திய செட்யூல்ட் இன இளைஞர் பேரவை மாநில செயலாளர் சங்கரன் தமிழக டி.ஜி.பி, சேலம் மாவட்ட எஸ்.பி., ஓமலூர் டி.எஸ்.பி இன்ஸ்பெக்டரிடம் ஒரு புகார் அளித்திருந்தார். அதில் ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தாய், தந்தை இலாத மாணவிகள் தங்கிப்படித்து வருகின்றனர். அவர்கள் திடீரென காணாமல் போவது மட்டுமின்றி மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் அல்லது கொலை செய்யப்பட்டு யாருக்கும் தெரியாமல் பள்ளித் தோட்டத்தில் புதைந்துவிடுவது தொடர்ந்து நடந்து வருகிறது. சமீபத்தில் இதே போல ஒரு மாணவியின் உடல் புதைக்கப்பட்டுள்ளது. இதற்கு தலைமை ஆசிரியர் வார்டன் இரவு காவலாளி உடந்தையாக இருக்கின்றனர். இறந்து போன மாணவியின் உடலைத் தோண்டி பிரேத பரிசோதனை நடத்த வேணும் என மனுவில் சங்கரன் குறிப்பிட்டிருந்ததாக தங்கம் (ஓமலூர் ஒன்றிய குழு உறுப்பினர்) கூறினார்.
ஓமலூர் பள்ளி தலைமை ஆசிரியை உட்பட 86 பேரை இடமாற்றம் செய்த பின்னர் பள்ளி திறக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் வகுப்புக்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினா.


தினமலர் நவம்பர்-22-2006: திமுக அமைச்சருக்கு சேலம் பிஷப் பதிலடி

சேலம் நவ. 22: அமைச்சர் கூறியிருப்பது போல ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இருக்கும் 86 பேரையும் இடமாற்றம் செய்யமுடியாது. இது அரசு பள்ளியல்ல. தனியார் கிறிஸ்தவ அமைப்பு நடத்தும் பள்ளி. இருவரை மட்டுமே இடமாற்றம் செய்யமுடியும் என்று சேலம் மறைமாவட்ட பிஷப் சிங்கராயன் தெரிவித்தார்



இது பிஷப் பேட்டியில் இருந்து
...

  • கேள்வி: வகுப்பறையில் இரத்தம், உடைந்த வளையல், பூ இருந்ததாக பள்ளி மாணவி ஒருவர் பேட்டி அளித்துள்ளாரே?
    பூனை பெருச்சாளியை கடித்ததால் ஏற்பட்ட ரத்தம் அது. உடைந்த வளையல் இருக்க வாய்ப்பு இல்லை. இருந்தாலும் பெண்கள் பள்ளி என்றால் பூ வளையல் எல்லாம் இருக்கத்தான் செய்யும்.

  • உங்கள் பள்ளியில்தான் பெண்கள் பூ வைக்கக் கூடாது என்று விதிமுறை உள்ளதே. எப்படி பூ வந்தது?

    ...பதில் இல்லை
  • பள்ளிக்குள் மதுபான பாட்டில்க கைப்பற்றப்பட்டுள்ளது எப்படி?
    இது குறித்து எனக்கு தகவல் வரவில்லை. இது தொடர்பாக கருத்து சொல்ல விரும்பவில்லை.

.... (தினமலர், 22-நவம்பர்-2006)
இன்றைய நிலை:

மாணவி சுகன்யா பாலியல் பலாத்காரத்துக்கு ஆட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டாரா? இது குறித்து பரிசோதனைக்கு சென்னை பெங்களூரு ஆகிய இடங்களில் உள்ள குற்றவியல் பரிசோதனை சாலைகளுக்கு விவகாரம் சென்றது. சுகன்யா மர்மமான முறையில் இறந்து ஆறு மாதங்களுக்கு பிறகு வந்த பரிசோதனை அறிக்கைகள் அவர் மரணத்துக்கு முன் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார் என்பதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளன. இனியாவது அங்கிகளுக்குள் தங்கியிருக்கும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?

1 Comments:

Blogger அக்குஹீலர் சுப்ரமணியன் said...

Tamil Nadu Govt. will not do anything for this. They never allow flash this news in any media. So that to keep the people beleive "these nasty Christian" schools.

Do they have face to preach christianity to our people ????



Since this GOVT. headed by a "CULPRIT", he will try to save them only.

12:28 AM, July 23, 2007  

Post a Comment

<< Home