Wednesday, May 12, 2010

நாகர்கோவில் புத்தக கண்காட்சியும் சில புத்தகங்களும்-2

வாங்கிய நூல்கள்:
"இஸ்லாமியப் பெண்ணியம்"
ஹெச்.ஜி.ரசூல்
பாரதி புத்தகாலயம்

நூலிலிருந்து:

இஸ்லாம் பலதார மணத்தை அங்கீகரிக்கிறது. ஆண் நினைத்த நேரத்தில் தலாக் சொல்லி பெண்ணை விவாகரத்து செய்துவிடலாம். தந்தியில், செல்போனில் கூட தலாக் சொல்லலாம். விவாகரத்து ஆன பெண்ணுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியதில்லை....குடும்ப அமைப்பின் பிணக்குகளை தீர்க்கும் விதத்தில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டுள்ள முரண்களைத் தீர்க்க தலாக்கின் முன்நிலை நடவடிக்கைகள் சில திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளன. அறிவுரை சொல்லுதல் இதன் தொடக்கமாகும். கணவனுக்கு மாறு செய்யும் மனைவி என கண்டறியப்பட்டால் கணவன் அறிவுரையின் மூலம் திருத்துவது முதல் கட்டமாகும். இரண்டாவது நிலை மனைவியை படுக்கையிலிருந்து தள்ளி வைத்தலாகும். மூன்றாவது மனைவியை அடித்து திருத்த முயலுவதாகும். ...இவைகள் அனைத்துமே கணவனுக்கு மாறு செய்யும் பெண்ணை தண்டிக்கவே கூறப்பட்டுள்ளன. ஆனால் மனைவிக்கு மாறு செய்யும் கணவனுக்கு எவ்விதமான தண்டனை என்பது குறித்து அதிக பட்சமும் மௌனமே பதிலாகக் கிடைக்கிறது. அரபு பழங்குடி சமூகத்தில் கணவனை ஒதுக்கி வைக்கும் உரிமை பெண்ணுக்கே இருந்திருக்கிறது. பெண் தனக்கான பாலியல் தேர்வை செய்து கொள்ளும் உரிமையும் இருந்திருக்கிறது....இது கிபி 570க்கு முன்னரே பெண் அனுபவித்திருந்த உரிமையாகும். இஸ்லாம் பெண்ணின் சார்பாக முன்வைப்பது குலாஅ - "விடுவித்துக் கொள்ளுதல்" என்னும் மணவிலக்கு முறையாகும். ...தலாக்கில் மனைவியின் விருப்பமின்றியே கணவன் அவளை மணவிலக்கு செய்யலாம்.குலாஅவில் கணவனின் ஒப்புதல் இல்லாமல் மனைவி அவனை விடுவிக்க முடியாது....புறத்தோற்றத்தில் வகாபியிசம் பெண்ணுரிமை சார்ந்த விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது என்பது போன்றதொரு பாவனை காட்டப்படுகிறது. இது உண்மையற்ற தோற்றமாகும். தர்கா கலாச்சாரம் சார்ந்த பெண்கள் திரளின் சியாரத் வழிபாடுகளை கடுமையாக கண்டனம் செய்யும் வகாபிசம்...சூழல் சார்ந்த அர்த்தத்தை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு இஸ்லாமிய பெண்களின் சுதந்திர வெளியை திரும்பவும் தடை செய்கிறது.
Emphasis in the original.


பள்ளிவாசலில் பெண்கள்: பால்வேற்றுமை பற்றிய வரலாற்றுப் பார்வை
வெளியீடு மெல்லினம்: 2005
முஸ்லிம் பெண்கள் பள்ளிவாசலுக்கு செல்லலாமா என்பது குறித்த ஆராய்ச்சி. இதை செய்தவர் டொராண்டோ பல்கலைக்கழக மாணவி நெவின் ரேடா. தமிழில் புன்யாமீன்

ஜெரூஸலத்திலுள்ள அல்-அக்ஸா பள்ளிவாசலைப் பொறுத்தவரையில் அதை ஒரு ஸ்தூல-பதிவாக கருத முடியாது. ஏனெனில் அங்கு அற்புதத்தன்மையால் நபிகளார் கொண்டு செல்லபட்டதாக முஸ்லீம்கள் நம்புகின்ற போதிலும் அச்சமயத்தில் அது யதார்த்த பள்ளிவாசல் கட்டிடமாக இருக்கவில்லை. மேலும் அல்-அக்ஸாவிற்கு முந்தைய காலத்திலிருந்ததாக சிலர் நம்பும் தொன்மையான இஸ்ரவேல் ஆலயம் ஏற்கனவே சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே அழிந்துவிட்டிருந்தது. மேலும் நபிகளாரின் இரவுப்பயண (மிஃராஜ்) அனுபவம் ஒருவகை ஆன்மிகத்தன்மை வாய்ந்தது என்பதால் அதை ஸ்தூலச் சான்றாகக் கருதவியலாது. எனினும் அல்-அக்ஸா நூல் ஆவணத்தில் (குர்ஆன் 17:1) இடம் பெற்றுள்ளது....கீழ் வரும் அறிவிப்புகள் நம் தலைப்புக்குத் தொடர்பான சில ஹதீஸ்களாகும்:
இறைத்தூதர் கூறினார்: ஒரு நம்பிக்கையாளர் தொழும் போது அவரை கிப்லாவிலிருந்து மறைக்கும் விதமாக ஒரு நாயோ ஒரு கழுதையோ அல்லது ஒரு பெண்ணோ குறுக்கே செல்வது அது அவரது தொழுகையில் தடங்கலை உண்டாக்கும்
சில முக்கிய ஹதீஸ் தொகுப்புகளில் காணப்படும் இந்த ஹதீஸ் தொழுகையில் பெண்களை ஆண்களுக்கு பின்னால் நிறுத்தும் நோக்கமுடையதாக தெரிகிறது.எனினும் இதனுடன் முரண்படும் மற்ற ஹதீஸ்களும் உள்ளன....ஒரு பெண் -உம்மு ஹுமைத் - இறைத்தூதருடன் அவரது பள்ளியில் தொழ விரும்பியதாகவும், ஆனால் அதற்கு நபிகளார் கீழ்காணும் பதிலை அளித்ததாகவும் அறிவிக்கப்படுகிறது.
நீ என்னுடன் தொழ விரும்புகிறாய் என்பதை அறிவேன். எனினும் உமது அறையில் (பைத்கீ) தொழுவது உமது வீட்டில் (ஹுஜ்ரத்கீ) தொழுவதைக் காட்டிலும் சிறந்ததாகும். உமது வீட்டில் தொழுவது நீ வசிக்கும் பகுதியில் (தாரீகி) தொழுவதைக் காட்டிலும் நீ வசிக்கும் பகுதியில் தொழுவது உமது கோத்திரப் பள்ளியில் (மஸ்ஜித் கவ்மிகீ) தொழுவதைக் காட்டிலும் உமது கோத்திரப்பள்ளியில் தொழுவது (எனது) பள்ளிவாசலில் தொழுவதைக் காட்டிலும் சிறந்ததாகும்.
என்று கூறினார்கள் எனவே அவர் (உம்மு ஹுமைத்) தனக்கு உள்வீட்டில் மிக இருட்டிய மூலையில் ஒரு தொழுகையிடத்தைக் கட்டி அதிலேயே மரணிக்கும் வரை தொழுது வந்தார்.

[தொடரும்]

2 Comments:

Blogger snkm said...

பெண்ணுரிமையாளர்கள் எங்கே, இதையெல்லாம் கேட்க மாட்டார்களா! என்ன செய்ய!

2:26 AM, May 13, 2010  
Anonymous Anonymous said...

நீங்கள் அதை தவறாக விளங்கி கொண்டீர்கள் ,நீகள் முழுமையாக விளங்க வேண்டும்,
பெண்களை திருமணம் செய்யும் போது மகர் என்னும் மனக்கொடை பெண்களுக்கு கொடுக்க வேண்டும்(பெண்கள் கேட்கும் கொடை ) என்று இஸ்லாம் வலியுருதிகிறது .

12:01 AM, October 22, 2010  

Post a Comment

<< Home