Sunday, August 21, 2005

சிலமாதங்களுக்கு முன்னால் சென்னையில் நான் காண நேரிட்ட ஒரு நிகழ்ச்சி 'அமைதி' கண்காட்சி (Peace). அழைத்து சென்ற இஸ்லாமிய சகோதரர் ஒரு காட்சி அமைப்பினை வைத்திருந்தார். அவரது அழைப்பின் பேரில் சென்றேன். வாயிலில் நுழைவுக்கட்டணப் பகுதிக்கு செல்கையில் காவலாளர் அழைத்து சென்ற நண்பரிடம், "காஃபீருங்களுக்கு கட்டணம் கிடையாது" என்பதை கேட்க நேர்ந்தது என் துர்பாக்கியம். நண்பர் அன்புடன் "மாற்று மத சகோதரர்களுக்கு நுழைவுக்கட்டணம் ஏதும் கிடையாது" என்றார். இலவசமாக எடுத்துக்கொள்ள வைக்கப்பட்டிருந்த தமுமுகவின் அதிகாரபூர்வ ஏடுகள் பழைய கூட்டாளியின் வன்முறை வரலாற்றை கூறிக்கொண்டிருந்தன. (வன்முறையை நியாயப்படுத்துறதெல்லாம் அவுரங்கசீப்புக்கு மட்டுந்தானுங்களா ஆப்தீனுக்கு கிடையாதுங்களா என கொட்டாவி மூலம் உள்நுழைந்து சைத்தான் கேட்ட கேள்வியை மறந்துவிடலாம்.) அங்கிருந்த ஸ்டால்களில்லொரு சூப்பர் ஸ்டாராக ஹரூன் யாஹியாவின் படைப்புகள் விளங்குவதை காண முடிந்தது. அவரது படைப்புவாத நூல் 'Tell me about the Creation' (Goodword publishers, New Delhi) இந்தியாவில்தான் முதலில் வெளியிடப்பட்டுள்ளது. பரிணாம அறிவியலை 'பொய்யென நிரூபிக்கும்' பல குறுந்தகடுகளும் அங்கு இறைந்து கிடந்தன. திண்ணையில் சில இஸ்லாமிய நண்பர்களும் காஃபீரான அரவிந்தன் நீலகண்டன் உய்யுமாறு அவரது இணையதளத்தினை சுட்டிக்காட்டவே அவரது நூலை வஹி வராமலே 'இறக்கி' படித்தால்...ஒரு விஷயம் புரிந்தது...இந்நூலைப் பயன்படுத்தி பரிணாம அறிவியலை விளக்கி எழுதலாம் அத்துடன் படைப்பு வாதிகள் செய்யும் திரிப்பு வேலைகளையும் வெளிப்படுத்தலாம் என்று. எனவே இங்கு எழுதப்பட்டுள்ள கட்டுரையை படித்து விட்டு இந்த வகுப்புவாத காஃபீரை நீங்கள் அர்ச்சிக்கலாம்.

0 Comments:

Post a Comment

<< Home