Tuesday, November 14, 2006

சுதேசி அறிவியல் அமைப்புக்கு ஜவஹர்லால் நேரு பரிசு

சுதேசி அறிவியல் அமைப்புக்கு ஜவஹர்லால் நேரு பரிசு





சுதேசி அறிவியல் இயக்கம்: விஞ்ஞான பாரதி அமைப்பின் கேரள பிரிவாகும். 2005-2006 ஆம் ஆண்டுக்கான அறிவியலை மக்களிடையே பிரபலப்படுத்தியமைக்கான பரிசான 'ஜவகர்லால் நேரு பரிசு' இந்த அமைப்புக்கு கிடைத்துள்ளது. இந்திய அறிவியல் காங்கிரசின் தேசிய விருது கேரளாவைச் சார்ந்த ஒரு அரசு சாரா அமைப்புக்கு கிடைப்பது இதுவே முதல் தடவையாகும். ஹைதராபாத்தில் விவசாய பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த பரிசளிப்பு விழாவில் சுதேசி அறிவியல் இயக்கத்தின் மாநில தலைவரான திரு.பி.என்.சுப்பிரமணியம் இந்த விருதினை பிரதம மந்திரி மன்மோகன்சிங்கிடமிருந்து பெற்றுக்கொண்டார்.


சுதேசி அறிவியல் இயக்கம் தன்னார்வ அமைப்பாகும். இது 1991 இல் நவம்பர் 7 (சிவி ராமனின் பிறந்த தினம் அன்று) தொடங்கப்பட்டது. இது பல அறிவியல் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. ஆயுர்வேதம், யோகம், கணிதம், சூழலியல் அறிவியல் நிகழ்ச்சிகள் ஆகியவை இவற்றுள் அடங்கும். உலக அளவில் சூழலியல் மற்றும் ஆயுர்வேதம் தொடர்பாக உலக அளவிலான இரு மாநாடுகளை இந்த அமைப்பு நடத்தியுள்ளது. இதில் 40 நாடுகளைச் சார்ந்த அறிவியல் அறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.



டாக்டர் அப்துல்கலாம், அவர்களின் பிறந்ததினமான அக்டோபர் 15 இந்த அமைப்பால் தேசிய சுய சார்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் பெண்கள் பிரிவான 'சக்தி' அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலமாக கிராமப்புற பெண்களுக்கும் மற்றும் நலிந்த பிரிவினைச் சார்ந்த பெண்களுக்கும் சுயசார்பும் வலிமையும் உருவாக்குவது தொடர்பாக உழைத்து வருகிறது.


இந்த அமைப்பினால் வெளியிடப்படும் மாத இதழ் 'Science India' இது கேரளா முழுவதும் மாணவர்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

0 Comments:

Post a Comment

<< Home