Sunday, March 18, 2007

மார்க்சியமும் அறிவியலும்

கட்டுரை சுருக்கம்:



சோவியத் அரசின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து புதைத்து வைக்கப்பட்ட பல நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் வெளிவந்தன. அவற்றுள் முக்கியமான ஒன்று அறிவியல் எவ்வாறு கொள்கை பிரச்சார கருவியாக சோவியத் அரசால் பயன்படுத்தப்பட்டது என்பதுமாகும். பொதுவாக மார்க்சீய வட்டங்கள் இத்தகைய பயன்பாட்டினை மேற்கத்திய பிரச்சாரம் என்றே மறுத்து வந்துள்ளன. ஆனால் சோவியத் வீழ்ச்சியின் பின் வெளிப்பட்ட உண்மைகள் பிரச்சாரத்திற்கும் அப்பாற்பட்ட உண்மை நிகழ்வுகளென தெரியவந்த பின் இவை மிகவும் பரந்த மனம் கொண்டவர்களாக கருதப்படும் மார்க்சீய அறிஞர்களால் கூட ஒன்றிரண்டு வரிகளில் விவாதிக்கப்பட்டு ஒதுக்கப்படுகின்றன. இந்நிகழ்வுகளுக்கான பொதுவான சித்தாந்த விளக்கம் ஸ்டாலினின் தனிமனித மேன்மை இயக்கத்தின் விளைவுகள் என்பதும் இப்பெரும் மானுட அழிவுகள் மார்க்சீய சித்தாந்த விளைவுகள் அல்ல என்பதுமாகும். இக்கட்டுரை இந்த சித்தாந்த விளக்கத்தின் உண்மையை ஆராய்கிறது. புதிய இயற்பியல் மற்றும் மரபணுத் துறைகளினை குறிப்பாக கொண்டு மார்க்சீய சித்தாந்த பற்றே சோவியத் அரசில் அறிவியலின் மீது தொடுக்கப்பட்ட கொடுமைகளுக்கு காரணம் என இக்கட்டுரை சில ஆதாரங்களை முன்வைக்கிறது இவ்விதத்தில் மார்க்சியம் தன்னளவில் அடைப்பட்டதும் விரிவாக்க தன்மை கொண்டதுமான மற்றெந்த ஆபிரகாமிய மதங்களிலும் மாறுபட்டதல்ல என்பதையும் இக்கட்டுரை நிறுவ முயல்கிறது.
மார்க்சீய நிலைபாடு:



லெனின் ட்ராஸ்கியுடன்


மார்க்சீய வட்டாரங்களில் பொதுவாக கூறப்படுவது என்னவென்றால் லெனினுக்கு பின் ஸ்டாலினுக்கு பதிலாக ட்ராஸ்கி அதிகாரத்தை கைப்பற்றியிருந்தால் அறிவியல், கலை, மானுட உயிர் மற்றும் மானுட உரிமைகள் பெரும் அழிவுகளை சந்திக்க நேர்ந்திருக்காது என்பதாகும். சோவியத்தில் நடந்த கலை மற்றும் அறிவியல் உலகின் மீதான தாக்குதல்கள் மார்க்சீயத்திலிருந்து விளைந்தவையல்ல என்றும் மாறாக மார்க்சீயத்திற்கு எதிரான ஸ்டாலினிசத்திலிருந்து தோன்றியவை என்றும் இன்று கூறப்படுகிறது1. 'நிகழா நிகழ்வு நிகழ்ந்திருந்தால் ' என கூறப்படும் விளக்கங்கள் பொய்ப்பிக்கப்பட முடியாதவை. ஆனால் சோவியத்தின் அடிப்படைகளை வடிவமைத்த விளாதிமீர் இலியுச் லெனின் அறிவியலையும் அதன் வளர்ச்சியையும் எவ்வாறு கண்ணுற்றார் என்பதனையும் அவர் காலத்திய அறிவியல் சித்தாந்த மாற்றங்களில் அவர் எடுத்த நிலைபாடு எவ்வாறு இருந்தது என்பதும் இவ்விளக்கத்தின் உண்மையை அறிய உதவும். மார்க்சிய சித்தாந்தம் 'அனைத்தாற்றலுடையது (omnipotent) ஏனெனில் அது உண்மை'2என்பதே லெனினின் எடுத்துரைக்கப்பட்ட நிலைபாடு. இந்நிலைபாட்டிற்கான மூலம் மார்க்ஸின் வார்த்தைகளிலிருந்தே பெறப்பட்டன.'கலை இலக்கியம் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டத்தின் ஒரு அங்கமாக வேண்டும்'3மற்றும் 'இயற்கை குறித்த அறிவியலை மனிதனை குறித்த அறிவியல் தன்னகப்படுத்திக் கொள்ளும் '3 என்பவையே அறிவியல் மற்றும் கலை குறித்த மார்க்சீய சித்தாந்த பார்வையாயிருந்தது. இதனுடைய தர்க்க ரீதியான நீட்சியாகவே வி.இ.லெனினின் கலை மற்றும் அறிவியல் குறித்த கருத்துகளையும் செயல்பாடுகளையும் நாம் கொள்ள வேண்டும். இங்கு மனிதனைக் குறித்த அறிவியல் என மார்க்சிசம் பகர்வது தன்னையேதான் என்பதனையும் கணக்கில் கொள்ள வேணும்.
லெனினின் ஆட்சி நடவடிக்கைகள்:



லெனின்


கலை மற்றும் அறிவியலுலகை பொறுத்தவரை பல ஸ்டாலினிய நிகழ்வுகளின் முன்னோடிகளை லெனினின் செயல்பாடுகளில் தெளிவாகவே காணலாம். லெனின் பல கலைஞர்களை கைது செய்த போது எதிர்ப்பு தெரிவித்த மாக்ஸிம் கார்க்கியிடம் லெனின் அரசியல் எதிர் சித்தாந்தவாதிகளை 'மக்கள் எதிரிகளை' சிறையில் தள்ளுவதில் தனக்கு எவ்வித தயக்கமும் இல்லை எனத் தெளிவாகவே கூறினார்.மேலும் கார்க்கி, பூர்ஷ்வா உலகின் மிக மோசமானவர்களால் சூழப்பட்டு அவர்களது கூப்பாடுகளுக்கு மதி மயங்கி விட்டதாகவும் குற்றம் சாட்டினார்4. 1920 இல் ஒரு பேட்டியின் போது அவர் 'கலை மக்களுக்காகவே ' என்னும் கோஷத்தின் அடிப்படையில் கலையின் அனைத்து நவீன வெளிப்பாடுகளையும் நிராகரித்தார். இதனை தொடர்ந்து பல கலைஞர்கள் தங்கள் உயிரையும்,கலையையும்,சுதந்திரத்தையும் காப்பாற்ற வெளிநாடுகளுக்கு தப்பியோட நேர்ந்தது5.


கார்க்கிக்கு லெனினின் மிரட்டல் கடிதம்

இயற்பியலில் அடிப்படை மாற்றங்கள்:


லெனின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு சில காலத்திற்கு முன் இயற்பியல் தன் அடிப்படை பார்வையில் பெரும் புரட்சியினை சந்தித்துக் கொண்டிருந்தது. இந்த இயற்பியல் அடிப்படை மாற்றத்தினை லெனின் மிகக் கூர்ந்து கவனித்து வந்தார். இன்றும் விரிவு பெறும் மிக முக்கியமான கணிதவியல் வித்துகள் இக்கால கட்டத்தில் தான் தூவப்பட்டன. இயற்பியலுக்கும் கணிதத்திற்குமான உறவுகள் புதிய சமன்பாடுகள் மூலம் புத்துருவாக்கம் பெற்று வந்த காலகட்டம் அது.எனவே நியூட்டானிய இயற்பியலின் அடிப்படை பார்வையினால் சமூக உறவுகளை வரையறை செய்து அதன் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு சித்தாந்தமான மார்க்சிசத்தின் ஆக சிறந்த சித்தாந்தவாதி, இம்மாற்றங்களால் அடைந்த மன உணர்வுகளும், அவருடைய சித்தாந்த எதிர்வினைகளும் மிக முக்கியமானவை.

இயற்பியலின் இந்த அடிப்படை மாற்றங்கள் உண்மையில் சில நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த கலிலியோ புரட்சியினை விடவும் அடிப்படையானது. எனினும் பொதுவாக மேற்கத்திய அறிவியல் உலகம் இம்மாற்றத்தை எளிதாகவே ஏற்றுக் கொண்டு விட்டது. கலிலியோவின் காலத்த்இதற்கு ஒரு முக்கிய காரணியாக இருந்தது எது? சில ஆண்டுகளாகவே பல முக்கிய அறிவியலாளர்கள் மூலகூறு மற்றும் அணுக்களின் அடிப்படையிலான பொருள்-வாத இயற்பியல் அடிப்படையினை சந்தேகித்ததுதான். இவர்களுள் முக்கியமானவர்கள் ஆஸ்திரிய இயற்பியல் அறிஞர் எர்ன்ஸ்ட் மாக், ஜெர்மானிய வேதியிலாளர் லுட்விக் ஆஸ்ட்வால்ட், ஜெர்மானிய இயற்பியலாளர் ஜியார்ஜ் கெல்ம் மற்றும் பியெரி கியூரி ஆகியோர். எதிரணியிலும் மிக முக்கியமான அறிவியலறிஞர்கள் இருந்தனர். போல்ட்ஸ்மான் போன்றவர்கள் பொருள்முதல்வாத நிலைப்பாட்டினையே எடுத்திருந்தனர். என்ற போதிலும் போல்ட்ஸ்மான் ஆஸ்ட்வால்ட்டுடனான ஒரு அறிவியல் விவாதத்தின் போது நியூட்டானிய அடிப்படையான அனைத்து நிகழ்வுகளும் மைய விசைகளால் நிர்ணயிக்கப்படும் பருப்பொருட்துகள்களின் இயக்கத்தால் விளக்கிவிட முடியும் எனும் நிலையிலிருந்து அறிவியல் வெகுவாக முன்னகர்ந்துவிட்டது எனக் கூறினார்.இது 1895 இல் நடந்தது. ஆக நியூட்டானிய அறிவியலில் இருந்து பெறப்பட்ட லாப்பேழேசிய நிர்ணயதன்மையின் நிலை என்ன? அதுவும் 1905 களில் சற்றேறக்குறைய பத்தாண்டுகளாக புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் விளைவாக தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தது.


பருப்பொருட்களுக்கு அப்பால் எங்கெங்கும் பரவியதோர் ஈதரென்னும் ஆகாசப் பொருளின் வெளிப்பாடாக பருப்பொருட்களை காணும் கோட்பாடும் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் இதனை பொய்ப்பித்த ஆல்பர்ட் ஐன்ஸ்டானின் பங்களிப்பு முழுக்க முழுக்க புதிய பார்வையினை அளித்தது. அணுவாதத்தின் அடிப்படை உண்மையை சந்தேகித்த ஆஸ்ட்வால்ட் ஐன்ஸ்டைனின் ப்ரவுனிய இயக்கத்தினை அணுழமூலக்கூறு இயக்க அடிப்படையில் விளக்கியதன் பேரில் தான் அணுவாதத்தின் அடிப்படையை தாம் ஐயுற்றதை மாற்றிக்கொண்டார். பின்னாளில் மிகவும் அதிர்வுறச் செய்யும் க்வாண்டம் இயற்பியலின் சில அடிப்படை நிலைபாடுகளை ஆஸ்ட்வால்ட்டின் ஆற்றல் முதல்வாத அணியினர் கணிதவியல் மூலம் முன்னறிய முடிந்தது. உதாரணமாக, 1880 களில் கார்ல் பியர்சனின் கணித ரீதியான பிரபஞ்சவியல் அடிப்படையில், ஆர்தர் ஸ்கஸ்டர் எனும் பிரிட்டிஷ் கணிதவியலாளர், எதிர் பருப்பொருள் (antimatter) இருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் , அத்தகைய எதிர் பருப்பொருள் பருப்பொருளோடு 'சந்திக்கையில் ' முழு பருப்பொருள் அழிவும் ஆற்றலும் வெளிப்படும் எனவும் கூறினார். 1898 இல் வெளியிடப்பட்ட இம்முடிவுகள் நவீன இயற்பியலினால் பின்னர் மெய்ப்பிக்கப்பட்டன6.


சார்பியல் மற்றும் க்வாண்டம் இயற்பியலில் உச்சமடைந்த இந்த மாற்றங்களின் சங்கிலித்தொடரில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது இதே தன்மையுடன் முந்தைய நூற்றாண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களில் இருந்த தீயெரிப்பு மற்றும் புனித விசாரணைத் தண்டனைகள் இல்லை என்பதே. ஏனெனில் இவை நிகழ்ந்த நாடுகளில் நியூட்டானிய லொப்பேழேசிய அறிவியலின் அடிப்படைகளை பூரண உண்மைகளாக கொண்ட அதிகார சித்தாந்தங்கள் அரசாளவில்லை. காலனியாதிக்கம் உண்மையில் தன் அடிப்படைகளை அரிஸ்டாட்டிலிய சித்தாந்த கூறுகளிலும் நியூட்டானிய கூறுகளிலுமிருந்து பெற்றிருந்தது எனினும் அது முழுமையாக இல்லை. (கிறிஸ்தவம் மற்றும் மார்க்சீயம் கலாச்சார காலனியத்தை நியாயப்படுத்தும் சித்தாந்தங்களாகவே இன்றும் இருந்து வருகின்றன.)


ஆனால் மார்க்சியம் தன் மிக அடிப்படையான முரண்பாட்டியங்கியல் வாதத்தின் அஸ்திவாரமாக நியூட்டானிய பொருள்முதல் வாதத்தினைக் கொண்டிருந்தது. மனித சூழலில் இந்த பொருள்முதல்வாத முரண்பாட்டியங்கியல் உற்பத்தி உறவுகளாக பரிணமித்து அதன் அடிப்படையிலேயே அனைத்தும் (மனித பிரக்ஞை முதல் மானுட ஒழுக்கம் வரை) உற்பத்தி உறவிகளின் மீது அமைக்கப்படும் மேல்-அமைப்புகளாக காணப்படுகின்றன. இச்சித்தாந்தத்தின் மூலம் அரசு அதிகார விழைவு கொள்ளும் ஒரு இயக்கத்தில், அறிவியல் இந்த அடிப்படை உண்மையை உறுதி செய்வதாகவே அமைய வேண்டும். இந்த உறுதிப்பாடே அறிவியலின் இருத்தலுக்கான நியாயமாகும். உறுதி செய்யப்பட்ட, தீர்மானிக்கப்பட்ட உண்மைகளை மீண்டும் தன் இயக்கத்தின் மூலம் உறுதி செய்வதே அறிவியலுக்கு அளிக்கப்பட்ட ஒரே பணியாக மத்திய கால கிறிஸ்தவ உலகில் இருந்ததை போன்றதோர் நிலையே இதுவும்.


இயற்கை அறிவியல் துறைகள் குறித்த லெனினின் பிரகடனம்:



பிரச்சார தபால்தலையில் லெனின்



லெனின் சிலை உண்மையில் 'மதிக்கப்படும்' விதம்

இயற்பியலின் இந்த இயக்கம் குறித்த மார்க்சீய சித்தாந்த எதிர்வினை 1908 -இல் வி.இ. லெனின் எழுதிய ஒரு சிறிய வெளியீட்டில் விரிவாக முன் வைக்கப்படுகிறது.பின்னாளில் தாங்கள் சோவியத் அரசு அதிகாரம் அடைந்த பிறகு சோவியத் அறிவியல் வளர்ச்சிக்கான திசைகள் இவ்வெளியீட்டிலிருந்தே பெறப்பட்டன. ஆற்றலியல் கோட்பாட்டுலகினைச் சார்ந்த அனைத்து அறிவியலாளர்களும் லெனினின் கடும் வசை சொற்களுக்கு ஆளாகின்றனர். அறிவியல் தத்துவவியலாளரான பெர்மானின் கூற்றுகள் 'மூடத்தனமானவை '; கணிதவியலாளரான ஹென்றி பான்கரேயின் சித்தாந்தங்கள் 'அதீத கற்பனையால் நிரம்பியவை'; டூஹெம்மின் சித்தாந்தங்களோ 'பொய்மை' நிறைந்தவை. மேலும் நியூட்டானிய இயற்பியலிலிருந்து புதிய இயற்பியலின் தோற்றம் மனித குலத்தின் அறிவு பரிணாமத்தின் ஒரு பொற்காலம் எனவே கருதப்படலாம். ஆனால் லெனினின் சித்தாந்த பார்வையில் இக்காலம் 'தற்காலிகமான விலகல்; அறிவியலின் வரலாற்றில் விரைவில் மாறிவிடக்கூடிய நோய் பிடித்ததோர் காலம்.' இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக இவ்வெளியீட்டில் லெனின் இயற்பியல் எந்த திசை நோக்கி வளர வேண்டும் என்பதையும் எவ்வித நோக்குடன் அறிவியல் வளர்க்கப்பட வேண்டும் என்பதையும் விவரிக்கிறார்,
'ஒரு குறிப்பிட்ட அறிவியல் துறையைச் சார்ந்த ஒரு குறிப்பிட்ட சித்தாந்தமுடைய அறிவியலாளர்கள், தத்துவார்த்த பொருள்முதல் வாதத்திலிருந்து முரண்பாட்டு பொருள்முதல் வாதத்திற்கு முன்நகர முடியாது, பிற்போக்குத்தனமான தத்துவங்களில் மூழ்கிவிட்டனர். ஆயினும் இந்த முன்னகர்வு இயற்பியலால் எடுக்கப்படுகிறது, எடுக்கப்பட்டே தீரவேண்டியது. ஒரே உண்மை அறிவியல் முறை மற்றும் ஒரே உண்மையான அறிவியல் தத்துவமான முரண்பாட்டியங்கியல் நோக்கி இயற்பியல் வந்தே தீர வேண்டும்.நேராக இல்லாவிட்டாலும் சுற்றி வளைத்தாவது வர வேண்டும்.பிரக்ஞையற்று என்றாலும் தன்னியல்பாக அது நடந்தேற வேண்டும். தன் முதுகைக் காட்டிக்கொண்டாவது இயற்பியல் முரண்பாட்டியங்கியலை நோக்கியே நகர்ந்தாக வேண்டும்.'
7 அதிர்ஷ்டவசமாக லெனின் க்வாண்டம் இயற்பியலின் கோபன்ஹேகன் விளக்கத்தை கேட்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக ஸ்டாலின் கேட்டார்- அதன் முழு தத்துவ தாக்கத்துடன்.


சோவியத் இயற்பியல்:



க்வாண்டம் இயற்பியல் மார்க்சிய அரசினால் பொருள்முதல்வாத முரண்பாட்டியங்கியலுக்கு எதிரான கருத்துமுதல்வாத சார்புடையதாக கருதப்பட்டது.

லெனினின் இப்பிரகடனமே பின்னர் ஸ்டாலினின் கீழ் சோவியத் அறிவியலில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னான சோவியத் இயற்பியலின் நிலை மிக அபாயகரமானதாக இருந்தது. லெனினின் பிரகடனத்தின் அடிப்படையில் சோவியத் தத்துவ அறிஞர்கள் 1930களிலேயே க்வாண்டம் இயற்பியலினை தீவிரமாக எதிர்த்து வந்தனர். கல்வி அமைச்சக உயர் அதிகாரியான காஃப்தனாவ் சோவியத் துணை அதிபரான கிலிமெந்தி வோராஷி லொவ்விற்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டார்,'தீர்மானமான முறையில் முரண்பாட்டியங்கியலுக்கு எதிரான போக்குகளை தோலுரிப்பதை விட்டுவிட்டு சில அறிவியலாளர்கள் கருத்து முதல்வாத நிலைபாடுகளை தழுவி விடுகின்றனர். இக்கருத்துகள் மேல் படிப்பு துறைகளை இயற்பியல் மூலம் எட்டிவிடுகின்றன.'8 பல முக்கியமான இயற்பியலாளர்கள் .பீட்டர் காஃபிஸ்டா, இகாவ் ஃபெரன்கல், லெவ் லாந்தவ் போன்றவர்கள் முரண்பாட்டியங்கியலுக்கு எதிரானவர்களாக தண்டிக்கப்பட்டனர் அல்லது தங்கள் பதவிகளிலிருந்து இறக்கப்பட்டனர்8. 'பிற்போக்குத்தனமான தத்துவங்களில் மூழ்கிவிட்ட'வர்களை 'தன் முதுகைக் காட்டிக் கொண்டாவது முரண்பாட்டியங்கியலுக்கு நகர்த்தும் ' லெனினின் பிரகடனத்தின் செயலாக்க முயற்சியே ஸ்டாலினுடையது.





இயற்பியலாளர்களைக் காப்பாற்றிய குருச்சட்டோ வ்

அணுஆயுத போட்டியும், சித்தாந்தத்தை விட அதிகாரத்தை நம்பும் ஸ்டாலினின் நடைமுறை வாத அரசியலுமே இங்கு சோவியத் இயற்பியலை லெனினிய அழிவிலிருந்து காப்பாற்றியது எனலாம். ஸ்டாலினின் வலதுகரமாக விளங்கிய லாவரெந்தி பெரியா சோவியத் அணு ஆயுத தயாரிப்புக்கான பொறுப்பினை ஏற்றிருந்தார். முழுமையாக இயற்பியல் முரண்பாட்டியங்கியலுக்கு ஏற்ப சீர்மை படுத்தப்படுவதற்காக அவர் ஒரு மாநாடு ஏற்படுத்தவிருந்தார். அணுஆயுத ஆய்வினை நடத்தி வந்த குருச்சட்டேவ் அப்போது குறுக்கிட்டு அதை நிறுத்தும் படி கூறினார். அதன் விளைவாக அம்மாநாடு நிறுத்தப்பட்டது. இதன் விளைவாக சோவியத் இயற்பியல் சோவியத் மரபணுவியலின் விதியை சந்திக்காமல் தப்பியது. இது குறித்து எரிச்சலடைந்த ஸ்டாலின் அதே சமயம் சோவியத் அணு ஆயுதத்திற்கு 'பிற்போக்குத்தனமான தத்துவங்களில் மூழ்கிவிட்ட' இயற்பியலாளர்களின் தேவையை அறிந்திருந்ததால் பின்வருமாறு கூறினார், 'அவர்களை இப்போதைக்கு அவர்கள் போக்கில் விடுங்கள் பிறகு சுட்டுக் கொல்லலாம்.'8


அணு ஆயுத தயாரிப்பு பிரிவின் இராணுவ மேற்பார்வையாளரான தளபதி மாக்கென்னோவ் இம்மாநாடு குறித்து பெரியா குருச்சட்டோ விடம் நடத்திய கேள்விகளை பின்வருமாறு தெரிவிக்கிறார்,

' 'முரண்பாட்டியங்கியலுக்கு எதிராக சார்பியலும் க்வாண்டம் இயற்பியலும் கருத்து முதல் வாதத்தை ஆதரிக்கின்றன என்பது உண்மையா? ' என பெரியா கேட்டார். அதற்கு குருச்சட்டடீவ் 'சார்பியலையும் க்வாண்டம் இயற்பியலையும் மறுப்பதென்றால் அணு ஆயுதங்களையும் மறந்துவிட வேண்டியது தான் ' எனக் கூறினார். இதனால் கவலை அடைந்த பெரியா இவ்விஷ்யத்தை ஸ்டாலினிடம் உடனே தெரிவித்தார். இயற்பியல் குறித்த மாநாடு கைவிடப்பட்டது.'
8ஆக, நடைமுறை ஆதாயங்களுக்காக உலகஅரசியலில் அதிகார ஆற்றல் கருதி லெனினிய நிலைபாட்டினை ஸ்டாலின் கைவிட்டதாலேயே சோவியத் இயற்பியல் 'முரண்பாட்டியங்கியலுக்கு நகர்த்தப்படும் ' விதியிலிருந்து தப்பியது. ஆனால் சோவியத் உயிரியலாளர்கள் அவ்வளவு கொடுத்து வைக்கவில்லை. (இந்த சித்தாந்தத்திற்கும் இயற்பியலுக்குமான போராட்டத்தில் சில நகைச்சுவை நிகழ்வுகளும் உண்டு. உதாரணமாக சோவியத் தத்துவ அகராதியின் படி பல காலமாக E=mc2 என்னும் சமன்பாடு மார்க்சீய தத்துவ அடிப்படையில் லெபையிதேவ் மற்றும் எஸ்.ஐ.வவிலோவ் ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது.)
சோவியத் உயிரியல் -லைசன்கோ ஓர் சித்தாந்த உதயம்:


மார்க்ஸ் தன்னை டார்வினின் சமூகதள வாரிசாகவே பாவித்து வந்தார். டார்வினிய பரிணாமத்தின் அப்போதைய பலவீனம் மரபியல் செயல்பாடுகளின் அறிவின்மையே. பிரெடரி ஏங்கல்ஸ் இதற்கான தீர்வினை லமார்க்கிய மரபியல் செயல்பாட்டினை கொண்டார். அக்காலத்தில் அதுவே முன்வைக்கப்பட்ட தீர்வாக இருந்தது. ஒரு உயிர் அதன் வாழ்வின் போது அடையும் மாற்றங்களின் கூட்டு அதன் சந்ததிகளுக்கு கடத்தப்படும் எனும் இந்த மரபியல் செயல்பாடு முரண்பாட்டியங்கியலுக்கு உகந்ததாக ஏங்கல்ஸால் கருதப்பட்டது. இதில் உயிரியல் அடிப்படையில் நியாயப்படுத்தப்படும் ஐரோப்பிய கலாச்சார முதன்மை வாதமும் கலந்திருந்தது. உதாரணமாக அவர் , 'ஒரு ஐரோப்பிய குழந்தை இயல்பாகவே ஒரு ஆஸ்திரேலிய ஆதிவாசியை விட கணித விதிகளை எளிதாகக் கற்றுவிட முடிவதை நாம் காணலாம்.'9 என குறிப்பிடுகிறார். (இந்தியாவின் கலாச்சாரம் குறித்த மார்க்ஸின் பார்வையும் இச்சித்தாந்த அடிப்படையிலேயே அமையப் பெறுகிறது10. தமிழகத்தின் மார்க்சீய அடிப்படைவாதியான ஞானியிலும் மார்க்ஸின் காலனீய கலாச்சார பார்வையினை காணலாம்11.) எனவே ஸ்டாலினின் காலகட்டத்தில் உருவான லைசென்கோ நிகழ்வு ஒரு மார்க்சீய அடிப்படை அசைக்கப்பட்டதின் பேரில், அவ்வடிப்படையின் மேலெழுப்ப பட்ட அதிகார இயந்திரத்தின் எதிர்வினை எனவே காண வேண்டும்.இவ்வகையில் எந்த மத்திய கால கத்தோலிக்க புனித விசாரணைகள் மற்றும் தீயெரிப்புகளை விட சோவியத் விசாரணைகளும் தண்டனைகளும் மிகுந்த துல்லியத்தன்மை வாய்ந்தவையாகவே இருந்தன.


டார்வினிய பரிணாம வாதம் தன்னியல்பில் பெரும் பலவீனமாக கருதிய மரபியல் செயல்முறையினை மெண்டலிய மரபணுக் கொள்கையால் தீர்த்துக் கொண்டது. வெய்ஸ்மானால் முன்வைக்கப்பட்ட மரபியல் தொகுதிகள் மற்ற உயிரியல் தொகுதிகளிலிருந்து பிரிந்திருப்பதும், மெண்டலிய விதி சார்ந்த மரபணு இயக்கமும் பரிணாம வாதத்தினை முழுமையாக அறிவியல் தன்மைக்கு கொண்டு சென்றன. மார்க்சீயம் இங்கு ஒரு அடைக்கப்பட்ட சித்தாந்தமாக செயல்பட்டது. இந்நிகழ்வுகளின் முரண்தன்மை நோக்குதற்குரியது. முக்கியமாக இடதுசாரி சோஷலிஸ்ட் எண்ணவோட்டம் கொண்ட பல பிரிட்டிஷ் உயிரியலாளர்கள் மரபியல் துறையின் முன்னோடிகளாக உள்ளனர். உதாரணமாக கார்ல் பியர்சன், ஜே.பி.எஸ் ஹால்டேன் போன்றவர்கள். அதே சமயம் அவர்கள் இனதூய்மை வாதிகளாகவும் இருந்திருக்கின்றனர். (அதே சமயத்தில் மற்றொரு பரிணாம வாத தத்துவவியலாளரான ஹென்றி பர்கூசன் இனரீதியாக மரபியல் தன்மைகள் காலம்காலமாக சேர்ந்து தனி இனத்தன்மைகள் உருவாகக் கூடும் என்பதற்கு அறிவியல் அடிப்படை ஏதும் இல்லை எனக் கூறியுள்ளார்.)



ஹால்டேன் : இறுதிவரை சோஷலிஸ்டாகவே இருந்த ஹால்டேன் பின்னாட்களில் கம்யூனிசத்தை விட்டு விலகியதுடன் இந்து தத்துவங்களில் ஈடுபாடு கொண்டவரானார்

1930களில் சோஷலிசத்திலிருந்து மார்க்சிசத்திற்கு பரிணமித்துக் கொண்டிருந்தவர் ஹால்டேன். மரபணு சார்ந்த மனிதருக்கு மனிதர் ஏற்படும் வேறுபாடுகள் சோஷலிசத்திற்கு பெரும் ஆதரவான காரணமாக அமையும் என அவர் கருதினார்.12 ஆனால் மார்க்சீயத்திற்கு இது ஏற்படுத்தும் தத்துவார்த்த சிக்கல்களையும் அவர் உணர்ந்திருந்தார். 1932 இல் புதிதாக உயிர்த்தெழும் மரபணுவியல் துறையை அவர் 'சோவியத் குடியரசு அறிவியல் மீது கொண்டுள்ள பற்றுக்கான பரீட்சை '13 என குறிப்பிட்டார். ஆனால் மீண்டும் கால வேடிக்கையாக 1930 களில் தீவிர மார்க்சீய பற்றாளராக ஹால்டேன் மாறிய அதே சமயத்தில்தான் லைசென்கோ தன் போலிழஅறிவியலை சோவியத் அதிகாரத்தின் தத்துவ ஆசீர்வாதத்துடன் மிகக் கொடூரமாக அரங்கேற்றிக்கொண்டிருந்தார். ஹால்டேனின் லைசென்கோவிசத்திற்கான எதிர்வினைகள் முடிந்த வரை மார்க்சீய பாதுகாப்புக்காக உண்மையை மறுதலிப்பதாகவே இருந்தது. ஸ்டாலினின் தனிமனித துதி வட்டத்திற்கு எவ்விதத்திலும் ஆளாகாத அறிவியலாளரான ஹால்டேன் லைசென்கோ நிகழ்வுகளை எதிர்கொண்ட விதம் சித்தாந்த பற்றன்றி வேறல்ல. இவ்விதத்தில் ஹால்டேன் தன் தனிப்பட்ட நண்பரும் ரஷியாவின் சிறந்த மரபணுவியலாளருமான நிகலொய் வவிலாவ் லைசென்கோவினால் பெற்ற மரணத்தை கூட பொருட்படுத்த வில்லை. வவிலோவ் மிகக் கேவலமாக நடத்தப்பட்டு சிறையில் உயிரிழந்தார்.



மார்க்ஸிய பிரச்சார பார்வையில் ஸ்டாலின்


மக்களால் காரி உமிழப்படும் ஸ்டாலின்: 'தூ...சர்வாதிகாரியே'


மார்க்சிய பேராசான் ஸ்டாலினின் ஆசியுடன் மரபணுவியலை எதிர்த்து அறிவியலை கேலிக்கூத்தாக்கிய லைசன்கோ

சோவியத் அறிவியல் அகாடமிக்கு ஆற்றிய உரையில் இந்த பெரிய மனிதர் லைசன்கோ கூறினார்:"மெண்டலிய மோர்கனிசம் (அதாவது க்ரோமோசோம் -மரபணுவியல்) அடிப்படையிலேயே பொய்யானது. அவை உயிரின், இயற்கையின் யதார்தத்தை அடிப்படையாக கொண்டிராமல் தத்துவ தேடலையும் கருத்துமுதல் வாதத்தையும் தனது அடிப்படையாக கொண்டது." 14பேராசிரியர். சாலமோன் லெவிட் (மருத்துவ மரபணுவியல் மையத்தின் இயக்குநர்), நிகோலாய் துலாய்கோவ் (இயக்குநர், உணவுதானிய ஆராய்ச்சி அமைப்பு) ஆகியோர் கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான உயிரியலாளர்களில் முக்கியமானவர்கள். முதலில் குறிப்பிடப்பட்ட ரஷியாவின் சிறந்த மரபணுவியல் மேதை நிகலொய் வவிலாவ் ஆகஸ்ட் 6 1940 இல் கைது செய்யப்பட்டு 'விசாரிக்கப்பட்டு' சிறையில் 26 ஜனவரி 1943 இல் உயிரிழந்தார். பொருள்முதல்வாத சோஷலிச சொர்க்கத்தில் இருபதாம் நூற்றாண்டில் அவர் அனுபவித்த கொடுமையுடன் ஒப்பிடுகையில் மத்திய கால கலிலியோவின் விசாரணை எத்தனையோ மனிதத்தன்மையுடன் நிகழ்ந்தது எனலாம்.
அவரது விசாரணை குறித்த பதிவு இதனைத் தெளிவாக்குகிறது.

  • விசாரணையாளர் க்வாத்: நீர் யார் ?
  • நிகலொய வவிலாவ் : நான் அறிவியலாளர் வவிலோவ்
  • விசாரணையாளர் க்வாத்: நீர் அறிவியலாளர் அல்ல. நீர் வெறும் ஒரு மலக் குப்பை 15



ஸ்டாலினின் மரணத்துக்கு பின்னரும் உலக அரங்கில் தலைகுனிவை சந்தித்த பிறகும் மார்க்சிய புனித விசாரணையில் உயிரிழந்த வவிலோவ் அவர் உயிரிழந்த பின் அறிவியலாளராக சோவியத்தால் ஏற்கப்பட்டார்.

லைசென்கோவிற்கு ஆதரவாக ஹால்டேன் வானொலி விவாதங்களில் தனது சக சிறந்த மரபணுவியலாளர்களான ரொனால்ட் பிஷர் போன்றவர்களை எதிர்த்து பங்கெடுத்தார். பின்னர் அறிவுடைய எந்த மனிதனாலும் ஆதரிக்க முடியாத அளவு லைசென்கோ ரஷிய உயிரியலை அழித்தொழித்திருப்பது வெளி வந்த பின் தன் கட்சித் தொடர்பினை ஹால்டேன் வெகுவாகக் குறைத்துக் கொண்டார். அத்துடன் ஹால்டேனின் வீடு மார்க்ஸிஸ்ட்களால் சோவியத்துக்காக உளவறியும் பயன்படுத்தப்பட்டதாகவும் செய்திகள் கசிய ஆரம்பித்தன. ஹால்டேனின் எதிர்வினையின் முக்கியத்துவம் எவ்வாறு ஒரு சிறந்த அறிவியலாளர் கூட தன் சித்தாந்த பற்றினால் மானுட சோகங்களுக்கு துணை போக முடியும் என்பதே. பற்று கொள்ளும் சித்தாந்தத்தின் தன்னியல்பும் இத்துணை போதலுக்கு பெரும் பங்காற்றுகிறது.


சீனாவிலும்:
இந்த கூத்துக்களை எதிர்த்தவர்கள் 'மேல்சாதி துதி பாடும் உளறுவாயர்கள்' என முத்திரை குத்தப்பட்டார்கள். லைசென்கோ மாவோவையும் கவர்ந்தார். விளைவு சீனத்தின் சொந்த லைசன்கோக்கள் உருவானார்கள். லூவோ திஅன்யு மரபணுவியலில் அறிவியலாளர்களை வேட்டையாடும் புனித விசாரணைப்பணியை மேற்கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சார வெளியீடுகள் நம்பமுடியாத விந்தை கதைகளை வெளியிடலாயின. ஆரம்பப்பள்ளி மாணவர்கள் புதிய பயிரினங்களை உருவாக்குவதாக 'அவர்கள் அதிசயங்களை செய்கிறார்கள்' எனும் சீன பிரச்சார வெளியீடு கூறியது. மரபணுவியல் பாசிச பொய் என அறிவிக்கப்பட்டது. சிக்கிள் செல் அனீமியா போன்ற நோய்கள் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டன. ஏனெனில் எல்லாமே புறச்சூழல் சார்ந்தவை என்பதால் மரபுவழி கடத்தப்படுவதாக அறியப்பட்ட நோய்கள் இருக்கக் கூடாதல்லவா! மேலும் மாவோ ஒரே இன செடிகள் ஒன்றோடொன்று போட்டி போடாது ஏனெனில் அவற்றுக்கு வர்க்க ஒற்றுமை இருக்கும் என கருதினார். இந்த கருத்து ஒரு அறிவியல் உண்மையாக செயல்படுத்தப்பட்டது. ஒரே வகை பயிர்கள் இடம்விடாமல் நெருக்கமாக பயிரிடப்பட்டன. இந்த வகை பயிரிடுதல் வெற்றி என காட்ட போலி புகைப்படங்கள் வெளியிடப்பட்டன. வெட்கமேயில்லாமல் அறிவியல் குறித்த அடிப்படை அறிவும் இல்லாமல் பொய்கள் வெளியிடப்பட்டன. ஒரு எடுத்துக்காட்டு: தக்காளி (சோலானேசியே குடும்பம்) பருத்தியுடன் (மால்வேசியே) இனக்கலப்பு செய்து சிவப்பு பருத்தி எனும் புதிய செடியினம் உருவாக்கப்பட்டதாம். இந்த 'அதிசயம்' பிரிட்டிஷ் இடதுசாரி பத்திரிகையான கார்டியனில் 24-மார்ச்-1960 இல் வெளியானது.16


ஒரு சீன பிரச்சார பொய் படம்: கோதுமையை அருகருகே நட்டால் அது செழித்து வளர்ந்து அதற்கு மேல் குழந்தைகள் கூட நிற்க முடியுமாம். இந்த அடிப்படை அறிவியல் சாத்தியமற்ற பொய்யினை கோதுமை பயிரால் மூடிய பெஞ்சில் குழந்தைகளை நிற்க வைத்து எடுத்துள்ளார்கள்.


இந்த லைசென்கோவிசத்தின் விளைவுகள் சீனாவில் பயங்கரமானவை.இந்த காலகட்டத்தில் சீனாவில் இறந்தவர்கள் சீன அரசு பின்னால் அதிகாரபூர்வமாக ஒத்துக்கொண்ட கணக்கின் படி 140 இலட்சம்.17
மனநல சிகிச்சையும் சித்திரவதைக் கூடமும்:


விளாதிமீர் கோண்டண்டினோவிச் புக்கோஸ்கி

சோவியத்களின் மனநலசிகிச்சை கூடங்கள் அறிவியல் மூலம் மானுட நலத்தினை வளர்க்கும் அமைப்புகளாக விளங்கிடவில்லை. மாறாக அரசியல் எதிரிகளை சித்திரவதை செய்யவும் அழிக்கவும் மூளைச்சலவை செய்யவும் பயன்படும் கூடங்களாயின. விளாதிமீர் கோண்டண்டினோவிச் புக்கோஸ்கி (Vladimir Konstantinovich Bukovsky) என்பவர் 1960களில் மாஸ்கோவில் கவிதை அரங்கு ஒன்றை ஏற்பாடு செய்ததற்காக மனநல சிகிச்சை மையத்திற்கு (psikhushka) அனுப்பப்பட்டார். ஜனவரி 1970 இல் விடுதலையான இவர் மனநல மருத்துவ மையங்கள் எவ்வாறு அரசியல் எதிரிகளை சித்திரவதை செய்யும் மையங்களாக மார்க்சிச அரசால் செயல்பட்டு வருகின்றன என்பதனை வெளிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து இதற்காகவே 1972 இல் கைதானார். டாக்டர்.செமையோன் க்ளூஸ்மன் (Semyon Gluzman) எனும் கெய்வ் மருத்துவருடன் (அவரும் கைதிதான்) இணைந்து 'A Manual on Psychiatry for Dissidents' எனும் நூலை அவர் எழுதினார். 18அரசியல் எதிரிகளுக்கு சித்திரவதை செய்ய மனித நலத்திற்காக உருவாக்கிய மருத்துவ அறிவியல் மையங்களை ஒரு அரசு பயன்படுத்துவது பெரும் எதிர்ப்பினை உலக அரங்கில் ஏற்படுத்தியது. உலக மனசிகிட்சையாளர்கள் அமைப்பு (World Psychiatry Association) 1977 இல் மனசிகிட்சை அளிப்பதற்கான தார்மீக நெறிமுறைகளை அறிவித்தது. இந்த 'குற்றத்துக்கு' விலையாக டாக்டர். செமையோன் க்ளூஸ்மன் தன் வாழ்க்கையில் 10 வருடங்களை கடும் உழைப்பு முகாம் சிறையில் கொடுக்க நேர்ந்தது. 1960களில் ஆந்த்ரே ஸ்நேழ்நெவ்ஸ்கி (Anre Snezhnevsky) என்கிற மார்க்சிய மனவியலாளர் 'தளர்நிலை மனச்சிதைவு' (Sluggish Schizophernia) எனும் ஒரு வித மனச்சிதைவு நிலையை கண்டுபிடித்துள்ளதாகக் கூறினார். இந்த நிலையின் வரையறை பொதுவாக மார்க்சிய அரசுக்கு எதிரான எவரையும் மனநோயாளியாக வரையறை செய்திட வாய்ப்பளித்தது.19 மார்க்சிய ராஜ்ஜியத்தில் அரசியல் கைதிகளை மனநல மருத்துவர்கள் சித்திரவதைக்கு ஆட்படுத்தியது குறித்து ஆராய சர்வதேச மனநல மருத்துவ குழுவில் இணைந்திருந்த டாக்டர். ராபர்ட் வான் வோரன் கூறுகிறார்:
"மனநல மருத்துவர்கள் சர்வதேச அளவில் தம் தொழில் நிபுணர்களிடம் தொடர்பு கொள்வது இல்லாமல் ஆக்கப்பட்டிருந்தது அவர்களுக்கு வெளியுலகில் -'பூர்ஷ்வா' உலகில்- தம்மையொத்த சக-மனநல சிகிச்சையாளர்கள் எவ்விதத்தில் பிரச்சனைகளை அணுகுகிறார்கள் எவ்வித நம்பிக்கைகளை கொண்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாது. அப்படி ஏதாவது தகவல்கள் உள்ளே கசிய நேர்ந்தால் உடனே அவையெல்லாம் 'வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் பூர்ஷ்வா சமுதாயத்தின் விளைவுகள்' என கூறப்பட்டு ஒதுக்கப்பட்டுவிடும். தனித்துவ முயற்சிகள், சுதந்திர சிந்தனை ஆகியவை எல்லாம் ஆபத்து என்றும் அத்தகைய தன்மை உடையவர்கள் கிரிமினல்கள் எனவும் கருதப்பட்ட ஒரு சூழலில் மனநல சிகிச்சையாளர்கள் வாழ்ந்தார்கள். பிறரிலிருந்து வேறுபட்டவர்கள் அனைவரும் சமுதாயத்திற்கும் சோசலிசத்திற்கும் எதிரிகள் என கற்பிக்கப்பட்ட சூழலில் அவர்கள் வாழ்ந்தார்கள். இந்த சூழலும் ''தளர்நிலை மனச்சிதைவு' (Sluggish Schizophernia) குறித்த கருத்தியலும், சர்வதேச மனநிலை சிகிச்சை குறித்த பரிச்சயம் இல்லாத, முன்னணி தொழில்முறை சோவியத் மனநிலை சிகிச்சையாளர்களையும் 'கம்யூனிஸ்ட் கட்சியின் எதிரி' என கருதப்படுபவர்களை, கட்சியை எதிர்த்து தனது சுகத்தையும் தனது குடும்பத்தையும் கூட துறக்க தயாராக இருக்கும் அரசியல் எதிரிகளை 'மனநிலை சரியில்லாதவர்கள்' என அறிவிக்க வைத்தது."
20



13 வருடங்கள் மனநோயாளி என மார்க்சிய அரசால் பீஜிங் மனநல மையத்தில் அடைக்கப்பட்ட வாங்வான்சிங்

மற்றொரு மார்க்சிய சொர்க்கமான சீனாவில் இன்றைக்கும் இதே நிலை தொடர்கிறது. உதாரணமாக சீன காவல்துறை கலைக்களஞ்சியம் காவல்துறையால் கவனிக்கப்பட வேண்டிய மனநிலை சரியில்லாதவர்கள் யார் என பின்வருமாறு விளக்குகிறது:
"பொதுவாக இவர்கள் அரசியல் கிறுக்கர்க்ள் ("political maniacs") என அழைக்கப்படுவார்கள். இவர்கள் பிற்போக்குத்தனமான கோஷங்களை போடுவார்கள்; பிற்போக்குத்தனமான கோஷங்கள் கொண்ட அட்டைகளை எழுதி தாங்கித் திரிவார்கள்; பிற்போக்குத்தனமான கடிதங்களை எழுதுவார்கள்; பொது இடங்களில் அரசாங்கத்துக்கு எதிராக பேசுவார்கள்; முக்கியமான உள்நாட்டு வெளிநாட்டு விஷயங்களில் தங்கள் சொந்த கருத்துக்களை தெரிவிப்பார்கள்."
21 உதாரணமாக 2000 ஆண்டில் 'Journal of Clinical Psychological Medicine'காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட மனநிலை சரியில்லாத ஒரு 45 வயது பெண்ணின் மனநிலை சரியின்மைக்கான ஒரே அடையாளமாக பின்வரும் அவரது நிலையை தெரிவிக்கிறது:
"அரசாங்கம் பலூங்காங் குழுவை ஒரு தீய குழு (evil cult) என பிரகடனப்படுத்திய பின்னரும் அவர் அக்குழுவில் தனது ஈடுபாட்டை நிறுத்திக்கொள்ளாமல் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். பலூங்காங் சடங்குகளை செய்யவும் மக்களை தூண்டி வந்தார்"
இதில் சுவாரசியமான விசயம் என்னவென்றால் 1999 வரை பாலூங்காங் கம்யூனிஸ்ட் கட்சியின் நல்ல பார்வையில் இருக்கும் வரை சீன மனநலவியல் ஆராய்ச்சி தாள்கள் அதனை பாராட்டி செய்திகளை வெளியிட்டு வந்தன.22
தொடரும் சித்தாந்த நிலைபாடுகள்:

மார்க்சியவாதிகளால் சித்தாந்த ரீதியில் எதிர்க்கப்பட்ட ஸ்டீபன் ஹாவ்கிங் : ஒரு மார்க்சிய அரசின் கீழ் ஹாவ்கிங் இருந்திருந்தால்...

இன்றைக்கும் மார்க்சீயம் இவ்வியல்பினைத் தொடர்கிறது. சோவியத்தில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சிகள் யாவுமே தன் தேச அறிவு வளர்ச்சியில் பற்று கொண்ட அறிவியலாளர்கள் மற்றும் மார்க்சீய சித்தாந்தத்தை நடைமுறை வசதிகளுக்காக கை கழுவ தயாராயிருந்த அரசியல் தலைமை ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் விளைந்தவையே. இந்த தேவைகள் ஏதுமற்ற மார்க்சீயவாதிகளுக்கோ அறிவியலை முரண்பாட்டியங்கியல் அடிப்படையில் 'நல்ல ' அறிவியலாகவும் 'கெட்ட ' அறிவியலாகவும், முதலாளித்துவ சமூக விளைவாகவும் சதியாகவும் காணும் போக்கு நீடித்தே வருகிறது. கனாடிய கம்யூனிஸ்ட் கட்சியின் அர்தயால் பென்ஸ் மதச்சார்பற்ற மானுட வாதிகளை அமெரிக்க ஏகாதிபத்திய சதியின் ஒரு அம்சமாக காண்கிறார்23.சீரின்மை(chaos) அறிவியல் சித்தாந்த சமன்பாடுகள் பிரபலமடைந்து வருவதற்கு காரணம் நவீன முதலாளித்துவ உலகின் தன்னியல்பில் மூடநம்பிக்கைகளையும் ஆன்மீகமறையியலையும் நோக்கி திரும்பும் தன்மையே காரணம் என 1989 இல் மார்க்சீய அறிவியல் தத்துவவாதிகளான மன்ஜித் சிங்கும் ஜான் கிப்சனும் வாதிக்கின்றனர். அவர்களது 'வழி பிறழ்ந்த ' அறிவியலாளர்களின் வரிசையில் புகழ் பெற்ற அறிவியலாளர்களான பிரிகோகைன், பவுல் டேவிஸ் ஆகியோரும் இடம் பெறுகின்றனர்24. மார்க்சீய குறை கூறல் பொதுவாக கணிதத்தின் அழகியல் குறித்ததாகவும் உள்ளது. சீரின்மை தத்துவத்தின் வேர்களை பான்கரேயில் காணமுடியும். வி.ஐ.லெனின் அவரை தன் நூலில் குறை கூறியிருந்தார். இன்று சற்றேறக்குறைய இதே காரணங்களுக்காக ஸ்டீபன் ஹாக்கிங், பென்ரோஸ், பிரிகோகைன், பவுல் டேவிஸ் ஆகியோர் மார்க்சீயவாதிகளால் குறை கூறப்படுகின்றனர்25.ஸ்டீபன் ஹாவ்கிங் தமது புகழ்பெற்ற காலத்தின் சுருக்கமான வரலாறு எனும் நூலில் எவ்வாறு தாமும் பென்ரோஸும் எழுதிய பிரபஞ்சவியல் ஆய்வுத்தாள் ரஷிய மார்க்ஸிஸ்ட்களால் மார்க்சிய நம்பிக்கைக்கு எதிரானது எனும் அடிப்படையில் எதிர்க்கப்பட்டதைக் குறிப்பிடுகிறார்.26 தன்னியல்பில் மூடலுடைய (closed) அதே சமயம் அதிகார விழைவும் பரவு தன்மையும் வாய்ந்த ஆபிரகாமிய மதத்தின் அனைத்து தன்மைகளையும் மார்க்சீய சித்தாந்தம் அறிவியலுடான உறவில் வெளிப்படுத்துகிறது.


பயன்படுத்த பட்ட நூல்கள் மற்றும் குறிப்புகள்:


  • 1. மார்க்சீய இன்றைய விளக்கங்களுக்கு சிறந்த உதாரணமாக காண்க ப்ராங்க் ககிலோட்டி, The fate of Soviet genetics, 4 அக்டோ பர் 1996 World Socialist Web Site. ஸ்டாலினின் கீழ் மரபணுவியலாளர் அனுபவித்த கொடுமைகளை பட்டியலிட்ட பின் கட்டுரையாசிரியர் பின்வருமாறு முடிக்கிறார், 'இவையெல்லாம் சோஷலிசத்தினுடையவோ மார்க்சிசத்தினுடையவோ விளைவுகளல்ல, மாறாக அவற்றிற்கு எதிரான சித்தாந்தமான ஸ்டாலினிசத்தினுடையவை. ' மேலும் 'ஸ்டாலினிச அதிகார வர்க்கத்தின் உடனடித் தேவைகளுக்காக அறிவியல் ஒடுக்கப்பட்டது. ' இக்கருத்தே இக்கட்டுரையில் பரிசீலிக்கப்பட்டு மறுக்கப்படுகிறது.
  • 2. வி.ஐ.லெனின், Collected Works, நான்காவது ஆங்கில பதிப்பு , Progress Publishers,மாஸ்கோ, 1968,பாகம்-19, பக்கம். 23
  • 3.மார்க்ஸ் & ஏங்கல்ஸ், Selected Works Vol-I பக்கங்கள் 398, 400 அருண்ஷோரியால் மேற்கோள் காட்டப்பட்ட நூல். Eminent Historians
  • 4.செப்டம்பர் 15,1919 தேதியிட்ட லெனினின் கடிதம்.இரகசியம் என குறியிடப்பட்ட இக்கடிதம் கார்க்கி தன் பூர்ஷ்வா அறிவுஜீவிகளுடனான தொடர்புகளை அறுத்துக் கொள்ளாவிடில் மரணத்தை சந்திக்க வேண்டுமென்றும், ஒரு படைப்பாளி என்ற முறையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கிறது. முழுக்கடிதத்தையும் இங்கேகாண்க:
  • 5. ஆண்ட்ரூ ஜே கார்ட்டன்,The Forgotten Avant Garde, Central Europe Review Vol 1, No 1, 28 ஜூன் 1999.
  • 6.ஹெல்கே க்ராக், Quantum Generations: A History of Physics in the Twentieth Century,Princeton University Press 1999. இயற்பியலின் வரலாறு குறித்த அனைத்து தகவல்களும் இந்நூலின் முதல் அத்தியாயத்திலிருந்து எடுக்கப்பட்டவை.
  • 7.வி.ஐ.லெனின், Materialism and Empirio-Criticism Lenins Collected Works, Progress Publishers, Moscow, Volume 17, 1972 (புதிய இயற்பியலினைக் குறித்த லெனின் அனைத்து மேற்கோள்களும் இந்நூலிலிருந்து எடுக்கப்பட்டவையே ஆகும். இந்நூல் எழுதப்பட்டது 1908.)
  • 8. டேவிட் ஹோலோவே, How the bomb saved Soviet Physics. The Bulletin of the Atomic Scientists, நவம்பர்/டிசம்பர் 1994.
  • 9. ப்ரெடரிக் ஏங்கல்ஸ், Dialetics of Nature, Third Revised Edition, Progress Publishers, மாஸ்கோ 1964.பக்-271
  • 10.கார்ல் மார்க்ஸ், 'The British Rule in India ' (1853), கார்ல் மார்க்ஸ் மற்றும் ப்ரெடரிக் ஏங்கல்ஸ், Articles on Britain , Progress Publishers, மாஸ்கோ 1971 பக்-166-72
  • 11. ஞானி, 'கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை?' - அனுமான் குறித்த ஞானியின் வார்த்தைகளை கார்ல் மார்க்ஸின் வார்த்தைகளுடன் ஒப்பிட்டு பார்க்கவும்.
  • 12. ஜே.பி.எஸ் ஹால்டேன், The Inequality of Man, Penguin 1932.
  • 13. அதே.
  • 14.லைசன்கோ பேச்சு மேற்கோள் காட்டப்பட்ட பிரசுரம், ஆர்.ஏ.ஃபிஷர், "What Sort of Man is Lysenko?", Listener, 40: 874-875, (1948); reprinted in Occasional Pamphlet of the Society for Freedom in Science,9:6-9.
  • 15.Soyfer, Valery Lysenko and the Tragedy of Soviet Science (Rutgers, 1994)
  • 16.ஜாஸ்பர் பெக்கர், Hungry Ghosts China's secret famine, பக். 68-72 (John Murray, 1996)
  • 17.Population and Development Review 13, no. 4 (1987), 639-70 பார்க்க:http://en.wikipedia.org/wiki/Great_Leap_Forward
  • 18.பார்க்க: http://en.wikipedia.org/wiki/Vladimir_Bukovsky
  • 19.எஸ்.ப்ளாக், பி.ரெடவே: "Psychiatrists and dissenters in the Soviet Union", in 'The Breaking of Bodies and Minds'. தொகுப்பாசிரியர் நைட்டிங்கேல் E ஸ்டோ வர்,WH ப்ரீமேன், 1985, பக். 160
  • 20.டாக்டர்.ராபர்ட் வான் வோரன், 'Soviet and Chinese Political Psychiatry', J Am Acad Psychiatry Law 30:131஖5, 2002.
  • 21. ஜோனதன் மிர்ஸ்கி, 'China's Psychiatric Terror', ராபின் மன்ரோவின் 'Dangerous Minds: Political Psychiatry in China Today and Its Origins in the Mao Era' எனும் நூலின் விமர்சனக் கட்டுரையிலிருந்து, தி நியூயார்க் ரிவ்யூ ஆஃப் புக்ஸ் (Vol 50, Num 3 : February 27, 2003) http://www.nybooks.com/articles/16082
  • 22. அதே.
  • 23.அர்தயால் பென்ஸ், வீரத்தியாகிகளின் முழக்கம், மார்க்ஸ் எங்கல்ஸ் லெனின் ஸ்டாலின் இன்ஸ்டிடியூட், டொராண்டோ , 1985. பக்.157-61
  • 24. ஜான் கிப்சன் & மன்ஜித் சிங், Chaos Theory The science of despair, Living Marxism (Monthly review of Revolutionary Communist Party, UK, டிசம்பர் 1989 இதழ் எண் 14
  • 25. ஜான் கிப்சன் & மன்ஜித் சிங் The Marxist review of books, Living Marxism, நவம்பர் 1991, இதழ் எண் 37.
  • 26. ஸ்டீபன் ஹாவ்கிங், 'A Brief History of Time' Bantam 1989 பக்.54 சுவாரசியமாக இதே நூலில் ஹாவ்கிங் போப் இரண்டாம் ஜான்பால் ஹாவ்கிங்கிடம் பெரும் வெடிப்புக்கு 'முந்தைய' நிகழ்வுகள் ஆண்டவனின் இரகசியம் எனவே அதை அறிவியலாளர்கள் ஆராயக்கூடாது என கூறியதையும் குறிப்பிட்டுள்ளார். (பக்.122)

இக்கட்டுரை சட்டீஸ்கரில் மார்க்சிய பயங்கரவாதிகளால் கோழைத்தனமாக கொல்லப்பட்ட காவல்துறையினரின் குடும்பங்களுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.

21 Comments:

Blogger Muse (# 01429798200730556938) said...

மதிப்பிற்குரிய அரவிந்தன் அவர்களே,

ஆரம்ப பாராக்களை மட்டுமே படித்தேன். ஆழமாகப் படிக்கப் போகிறேன். அதற்கு முன் சில கேள்விகள்:

இந்நிகழ்வுகளுக்கான பொதுவான சித்தாந்த விளக்கம் ஸ்டாலினின் தனிமனித மேன்மை இயக்கத்தின் விளைவுகள் என்பதும் இப்பெரும் மானுட அழிவுகள் மார்க்சீய சித்தாந்த விளைவுகள் அல்ல என்பதுமாகும்.

1. ஒரு சில தனிமனிதர்களின் மேன்மை என்று சொல்ல வருகிறார்களா, அல்லது அனைத்து தனிமனிதர்களின் மேன்மையை சொல்ல வருகிறார்களா? இரண்டாவதாக இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றினாலும் தெளிவாக்கிக்கொள்ளக் கேட்கிறேன்.

2. மேலேயுள்ள இரண்டு கருத்துக்களில் முதல் கருத்தைத்தான் பரந்த மனப்பான்மை மார்க்கஸீய நபிமார்கள் சொன்னார்கள் என்றால், இது ஏறத்தாழ ஹிட்லரின் மேன்மையை உயர்த்திப்பிடிக்கும் கருத்துக்கு இணையாக உள்ளதே.

3. ஹிட்லரை உயர்த்த நீட்ஷேவின் "உயர் மனிதன்" தத்துவம் பயன்படுத்தப்பட்டதாக அடிக்கப்பட்டுவரும் ஜல்லிக்கும், ஸ்டாலினை (, மார்க்ஸை, மாவோவை, லெனினை,....) ஒரு "ஸூபர் மேனாகவும்", கம்யூனிஸத்தை ஒரு "ஸூப்பர் ஸொல்யூஷன்" ஆகவும் மாற்ற நடந்துவரும் ஜல்லிக்கும் ஏதேனும் வித்யாஸம் உள்ளதா?

4. ஆபிரகாமிய தத்துவங்கள் அனைத்தும் ஒரு வித தனிமைப்படுத்துதல் என்பதையே அடிப்படையாகக் கொண்டுள்ளதன் "சமூக மனோவியல்" என்ன?

12:03 AM, March 19, 2007  
Blogger Muse (# 01429798200730556938) said...

ஸ்டாலினின் மரணத்துக்கு பின்னரும் உலக அரங்கில் தலைகுனிவை சந்தித்த பிறகும் மார்க்சிய புனித விசாரணையில் உயிரிழந்த வவிலோவ் அவர் உயிரிழந்த பின் அறிவியலாளராக சோவியத்தால் ஏற்கப்பட்டார்.

ரஷ்யாவின் Joan of arc?

7:18 AM, March 19, 2007  
Blogger சாலிசம்பர் said...

ஹாவ்கிங்கினுடைய கண்டுபிடிப்புகள் மார்க்சீயத்திற்கு வலு சேர்ப்பவையாகவும் ஆத்திகத்திற்கு ஆப்பு வைப்பதாகவும் உள்ளன.

//ரஷிய மார்க்ஸிஸ்ட்களால் மார்க்சிய நம்பிக்கைக்கு எதிரானது எனும் அடிப்படையில் எதிர்க்கப்பட்டதைக் குறிப்பிடுகிறார்.26 தன்னியல்பில் மூடலுடைய (closed) அதே சமயம் அதிகார விழைவும் பரவு தன்மையும் வாய்ந்த ஆபிரகாமிய மதத்தின் அனைத்து தன்மைகளையும் மார்க்சீய சித்தாந்தம் அறிவியலுடான உறவில் வெளிப்படுத்துகிறது. //
மார்க்சிஸ்டு அறிவியலாளர்களின் எதிப்பு ஆக்கபூர்வமானது,அறிவு பூர்வமானது.மார்க்சிஸம் மதத்திற்கு எதிரானது.அதையும் மதத்தையும் ஒன்றுபடுத்திப் பேசுவது மோசடி மற்றும் பொய்ப் பிரச்சாரமுமாகும்.

8:31 AM, March 19, 2007  
Blogger Muse (# 01429798200730556938) said...

இப்பூலோகத்தின் சக்கரவர்த்தியாக நான் ஆனவுடன் இட இருக்கிற ஆணைகளில் உங்களுடைய இந்த கட்டுரைக்கு அக்ஷர லக்ஷம் பரிசு கொடுப்பதும் ஒன்று. அதை நீங்கள் வாங்கத் தயாராவதற்கு முன்னால் இந்த அறிவீனனுடைய சில சந்தேகங்களை தங்களின் மூலமாய் தீர்த்துக்கொள்ளும் பாக்கியம் வேண்டும்:

(DISLAIMER: இந்தக் கட்டுரையை ஒரு முறை மட்டுமே மேலோட்டமாக நான் படித்த பாவத்தை உங்களின்மேல் சுமத்துகிறேன். மற்றவர்களின் பாவங்களுக்காக யாரோ ஒருவர் சிலுவையில் செத்ததாக எங்கள் ஊர் மிஷனரிகள் கதைப்பர். எனக்காக நீங்கள் இந்தப் பாவத்தைப் பொறுத்துப் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.)

*. இயற்பியலில் ந்யூட்டானிய கருதுகோள்களை ஆதரித்த மார்க்கஸீயர்கள், உயிரியலில் ஒரு உயிரிலிருந்து அதன் சந்ததிகளுக்கு அவ்வுயிரின் வாழ்வியல் மாற்றங்களின் தொகுப்புக்கள் கடத்தப்படுகின்றன என்று கூறுகிற லமார்க்கிய மரபியலை ஏற்கின்றனர். (இதைப் பயன்படுத்தி உலகளவில் இனவாதத்தையும், இந்திய அளவில் ஜாதிவெறியையும் ஆதரித்துவிடலாம்.)

*. அணு ஆயுதம் தயாரித்துத் தொலைக்க வேண்டிய கட்டாயத்தால் இயற்பியலில் கருத்துமுதல்வாதத்தை வேறு வழியின்றி ஏற்று "சகிப்புத்தன்மையை" வெளிப்படுத்திய மார்க்கசீயர்களால் உயிரியலில் சகிப்புத்தன்மையுடன் நடந்துகொள்ள முடியவில்லை என்கிறீர்கள். இதைப் பின்பற்றியவர்களாக சீன, கனடிய கம்யூனிஸ்ட்டுக்களையும், அவர்களது பொய்யுரைக்கும் ஒலிபரப்பியாக விளங்கிய ப்ரிட்டிஷ் பத்திரிக்கைகளையும் தோலுரித்துள்ளீர்கள். நன்றி.

ஆனால், ஒரு சிறு சந்தேகம். அணு ஆயுதங்களுக்காக கருத்துமுதல்வாதத்தை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட்டுக்கள் "உயிரியல் ஆயுதங்கள்" தயாரிக்க எந்த கொள்கைகளைப் பயன்படுத்தினார்கள்?

இவர்களிடம் உயிரியல் ஆயுதங்களே இல்லை என்பது நம்புவதற்குக் கடினமான ஒன்று.

(இங்கே நீங்கள் உண்மை தெரியாமலோ அல்லது தெரியப்படுத்தவேண்டாமென்றோ சொல்லுகிறீர்கள் என்று நான் நினைக்கவில்லை. அப்படி நினைத்தால் இந்த கேள்வியே கேட்டிருக்க மாட்டேன். தவறாய் இருந்தால் மன்னிக்கவும், ஆனல் தயவு செய்து தவறை திருத்தவும். தங்களிடம் சரியான விளக்கம் இருக்கும் என்று நம்புவதாலேயே இந்தக் கேள்வி.)

*. லமார்க்கிய சித்தாந்தத்தின்படி மரபு சந்ததிகளின்மூலமாய் கடத்தப்படுவது. ஆனால், தங்களுடைய இந்தக் கட்டுரையில்,

சிக்கிள் செல் அனீமியா போன்ற நோய்கள் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டன. ஏனெனில் எல்லாமே புறச்சூழல் சார்ந்தவை என்பதால் மரபுவழி கடத்தப்படுவதாக அறியப்பட்ட நோய்கள் இருக்கக் கூடாதல்லவா!

என்பதை மேற்கோள் காட்டுகிறீர்கள். இடிக்கிறதே.

* ஹென்றி பர்கூசனும் (கார்ல் பியர்சன் மற்றும் ஜே.பி.எஸ் ஹால்டேன் போன்றவர்களைப்போல) ஒரு பிரித்தானிய இடதுசாரி ஸோஷியலிஸ்டுத்தானா?

ஆம் எனின் இத்தகைய த்ரோகிகளை கம்யூனிஸம் ஏன் விட்டுவைத்தது?

* இந்த ஜே.பி.எஸ் ஹால்டேனும், லைஸன்கோவிஸம் ஒரு பொய் என்று புரிந்திருந்தாலும் ஏற்றுக்கொண்டுவிட்ட சித்தாந்ததிற்காக (அல்லது உயிர் வாழ்வதற்காக) ஆதரித்த, பிரச்சாரம் செய்த, ஆனால் கடைசியில் ஹிந்து மதத் தத்துவங்களில் ஆர்வம் காட்டிய ஹால்டேனும் ஒருவர்தானா?

ஆம் எனின், இந்த ஹால்டேன் ஒரு ரஷ்யரா?

ஆம் எனின், சித்தாந்தத்திலிருந்து மதம் மாறிய இவரை கம்யூனிஸம் விட்டு வைத்தது ஏன்? (ஒருவேளை வவிலோவிற்கு (புனிதர்பட்டம்போல) செத்தபின் கொடுத்த சீதனமாய் அறிவியலாளர் பட்டத்தை கொடுத்ததற்கான காரணங்கள்தான் இதையும் தூண்டியதா?)

* கார்ல் பியர்சன் மற்றும் ஜே.பி.எஸ் ஹால்டேன் போன்றவர்கள் மெண்டலீய மரபணுவாதத்தை ஏற்றுக்கொண்டிருந்தாலும், அவர்களது இடதுசாரி சோஷியலிஸ கண்ணோட்டம் அவர்களை இனத்தூய்மைவாதிகளாக வைத்திருக்கிறது என்கிறீர்கள்.

இத்தகைய எதிர் முரண்பாடுகளை தகவமைக்க அவர்கள் வேறு ஏதேனும் சமன்பாடுக்களைப் பயன்படுத்துகிறார்களா? அதாவது இந்த எதிர் நிலைப்படுகள் வேறு ஏதேனும் நிலைப்பாட்டின் பிண்ணணியில் ஒத்திசைகின்றதா?

இல்லை எனின், இத்தகைய தெளிவில்லாத ஆட்களை அறிவியலாளர்களாக வைத்துப் போஷிக்கும் நாடு எந்த சித்தாந்தத்தை கொண்டுள்ளது?

அந்த சித்தாந்தத்திற்கு இந்த குழப்பவாதிகளால் என்ன பலன்? அதாவது பயன் இல்லாமலா இவர்களை இந்த நாடு/கள் போஷிக்கின்றன?

* ரஷ்யாவோ, சீனாவோ, அல்லது வேறு எந்த கம்யூனிஸ எதேச்சதிகார நாடுகளோ முரண்பாட்டுஇயக்கவியலுக்கு எதிரான, அல்லது வேறுபட்ட கருத்துக்கூறிய அனைத்து அறிவியலாளர்களையும் அழித்ததா? அல்லது சகித்துக்கொண்டாலும், இத்தகைய பயங்கரத்தின் அச்சுறுத்தலுக்கு நடுவே பல கண்டுபிடிப்புக்களை வெற்றிகளை ரஷ்யர்கள் எங்கனம் சாதித்தார்கள்? ஏனெனின் மனிதம் சுதந்திரமான சூழ்நிலையிலேயே உற்பத்தித் திறன் அதிகம் கொண்டுள்ளது. அச்சூழ்நிலை இல்லாதபோதும் ரஷ்யா எத்தனையோ சாதனைகளை செய்தது என்பது ஒரு மிகப் பெரிய முரணாய் உள்ளதே. விளக்குங்களேன்.


* "Anre Snezhnevsky" என்கின்ற பெயரை நீங்கள் "ஆந்த்ரே ஸ்நேழ்நெவ்ஸ்கி" என்று உச்சரிக்கும்படி எழுதியுள்ளீர்கள். இந்த "ழ்" உச்சரிப்பு நம் தமிழ் "ழ"கர உச்சரிப்புத்தானா? ஆம் என்றால், எங்கள் தமிழிலிருந்துதான் ரஷ்ய மொழியே வந்தது என்று ஜல்லியடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். ஹி, ஹி, ஹி)

* "கால வேடிக்கை" என்கின்ற உங்களுடைய புதிய ப்ரயோகம் ரஸிக்கும்படி உள்ளது. இது உங்களது கண்டுபிடிப்பா?

நான் ஏன் இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறேன் என்றால் இங்கே ஒருவர் "கற்பகவிநாயகம், அசுரன், ராஜா வனஜ்" என்று பல புனைப்பெயர்களை வைத்துக்கொண்டு எதிர்கால இந்தியா "தூய" கம்யூனிஸ்டுக்களுக்குத்தான் என்று குரல் கொடுக்கிறார்.

அப்படி ஏதும் நடந்துவிட்டால் கண்டிப்பாக உங்களுக்கு 'தளர்நிலை மனச்சிதைவு' (Sluggish Schizophernia) என்று சொல்லி ஏதேனும் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் போட்டு சித்திரவதை செய்வார்கள். அப்போது உங்களை நான் கேள்வி கேட்டேன் என்று சொல்லி தப்பித்துக்கொள்ளலாம் பாருங்கள். அதனால்தான் இப்படிக் கேள்வி கேட்கிறேன். அதாவது ("தூய" வஹாபி இஸ்லாமோ, ஆண்டவனின் ஸாம்ராஜ்ஜியமோ ஆட்சியை பிடிக்காமல்) "தூய கம்யூனிஸம்" இந்தியாவை கைப்பற்றுவதற்கு முன்னால் பதில் சொன்னீர்கள் என்றால் எனக்கு குழப்பங்கள் தீரும் வாய்ப்பு இருக்கிறது.

(கடைசியாய் ஒரு கேள்வி, ஆரம்பிக்கும்போது உங்களது கட்டுரைக்கு அக்ஷர லக்ஷம் என்று அறிவித்துவிட்டு, கடைஸியில் நீங்கள் மாட்டினாலும் நான் தப்பிக்கவேண்டும் என்று முயற்சிக்கிறேன் அல்லவா. எனவே எனக்கு இடதுசாரி சொஷியலிஸ
"தூய" கம்யூனிஸ்டாகத் தேவையான அருங்குணங்கள் இருக்கின்றனவா?)

8:45 AM, March 19, 2007  
Blogger வஜ்ரா said...

//
மார்க்சிஸ்டு அறிவியலாளர்களின் எதிப்பு ஆக்கபூர்வமானது,அறிவு பூர்வமானது.மார்க்சிஸம் மதத்திற்கு எதிரானது.அதையும் மதத்தையும் ஒன்றுபடுத்திப் பேசுவது மோசடி மற்றும் பொய்ப் பிரச்சாரமுமாகும்.
//

ஜல்லி பம்ப்பர் தெரியாமல் உளருகிறார்.

மார்க்ஸீயத்தையும் மதத்தையும் ஒற்றுமைப்படுத்தியது அரவிந்தன் நீலகண்டன் அல்ல. ஆர்த்தர் கோயெஸ்ட்லர் என்ற Ex. மார்க்ஸ்வாதி.

Arthur Koestler என்று கூகிளாண்டவரைக் கேட்டால் விளங்கும்!

மார்க்ஸீயமும் அறிவியலும் என்பதே oxymoron போல் தெரிகிறது.

மார்க்ஸீயம் X அறிவியல் என்பது தான் சரியான சமன்பாடு.

மார்க்ஸ்வாதிகள் அறிவியல் பேசுவது வேடிக்கை. அறிவியலாளர்கள் மார்க்ஸ்வாதிகளாக இருக்கிறார்கள் என்றால் அவர்கள் முட்டாள்கள் என்று அர்த்தம்.

10:24 AM, March 19, 2007  
Blogger சாலிசம்பர் said...

//அறிவியலாளர்கள் மார்க்ஸ்வாதிகளாக இருக்கிறார்கள் என்றால் அவர்கள் முட்டாள்கள் என்று அர்த்தம். //

சுதந்திரத்தைப் பற்றி மார்க்ஸை விட விளக்கமாக பேசியவர் யாருமில்லை என்று சொன்ன அமர்த்தியா சென்னும்,கம்யுனிச கொள்கைகளை கடைப்பிடித்து தன் டிரைவரைக் கூட கோடிஸ்வரனாக்கிய நாராயணமூர்த்தியும் முட்டாளா?

10:28 PM, March 19, 2007  
Blogger வஜ்ரா said...

நாராயண மூர்த்தி வெரும் மார்க்ஸிஸ்டாக இருந்திருந்தால் இன்ஃபோசிஸ் உடோபியாவாகத்தான் இருந்திருக்கும்.

அவரே அவர் வாயால் தான் ஒரு (compassionate) capitalist என்று ஒத்துக் கொள்கிறார். இங்கே

http://www.askasia.org/teachers/essays/essay.php?no=103
..

அமர்தியா சென் மார்க்ஸைத்தாண்டி எகனாமிக்ஸில் எவ்வளவோ தூரம் போய் விட்டார். அவர் மார்க்ஸைச் சொன்னது பற்றி மட்டும் பிடித்துக் கொண்டு தொங்கும் கூட்டத்தில் அவர் இல்லை என்பது வேடிக்கையான உண்மை.

ஆர்த்தர் கோயெஸ்ட்லர் கூட மார்க்ஸ்வாதியாக இருந்து பின்னர் "மதம்" மாறியவர் தாம்.

மார்க்ஸ்வாதியாக இருப்பது பிரச்சனை அல்ல. தப்பென்று தெரிந்தும் தலையை புதைத்துக் கொண்டு உலகம் இருட்டு என்பது முட்டாள் தனமன்றி வேறு என்ன ? (நம்ம ஊரில் "அறிவுசீவித்தனம்").

ஜாலிஜம்பர்,

உங்களுக்கு மார்க்ஸ்வாத உடோபியா கனவு கலைந்து உண்மை உணர வேண்டும் என்றால்

F.A Hayek எழுதிய The Road to Serfdom என்ற புத்தகத்தைப் படியுங்கள்.

எப்படி சோஷியலிசம் என்பது சர்வாதிகாரிக்கு தீனி போடும் "இசம்" என்பது விளங்கும். கம்யூனிசத்தை எதிர்ப்போரின் ஞாயம் புரியும்.

1:20 AM, March 20, 2007  
Blogger Muse (# 01429798200730556938) said...

ஹல்லோ ஜாலிஜம்பர்,

ச கொள்கைகளை கடைப்பிடித்து தன் டிரைவரைக் கூட கோடிஸ்வரனாக்கிய நாராயணமூர்த்தியும் முட்டாளா?


Narayanamurthy's views on communism:

Please read the article:

http://www.ibnlive.com/news/exclusive-chat-narayana-murthy/30575-3-single.html

And from this interview:

http://www.india-seminar.com/2000/485/485%20interview.htm

You worked overseas early in your career. What did you learn from your stint abroad?

My years in Paris were the most influential years of my life. I observed how in a western country even the socialists understood that wealth has to be first created before it can be distributed. That there could only be a few leaders to create wealth. And that it’s the job of the government to create an environment where it’s possible for people to create wealth. I realised that all this talk of socialism as practised in India was not meaningful. Our country treated communism as an ism that was completely disassociated from the reality of the context. You cannot distribute poverty.

My father always told us that India had a lot to learn from the West. Also, he was a great fan of classical music. On Sundays, air used to play music for an hour. One day I asked him: why should I listen to this alien music? He said: What appeals to me is that in a symphony there are over 100 people, each of whom is a maestro, but they come together as a team to play according to a script under this conductor and produce something divine. They prove that one plus one can be more than two. It’s a great example of teamwork.



What prompted your change of heart from being a staunch leftist?

After my Paris stay, I donated my earnings and with $450 in my pocket decided to return home overland. I came to Nis, a border town between the then Yugoslavia and Bulgaria to take the Sofia Express. I struck up conversation with a girl in the compartment. After about 45 minutes the train stopped, the police took the girl away, ransacked my backpack, and put me in a room that had no mattress and a window 10 ft high. They kept me there for 60 hours after which they freed me saying that since I was from a friendly country they were letting me go. I felt that if this system treats friends this way then I did not want anything to do with it. This experience really shook me.



So the socialist in you became a committed capitalist?

I am a 100% free marketeer but I call myself a compassionate capitalist. While I’m very conservative in economic matters I’m very liberal about social matters. But I have no illusions about socialism. In a country like India, when we have to make capitalism an attractive alternative to people, it is extremely important for us to show tremendous compassion to the less fortunate. That doesn’t mean that you should give jobs to people who don’t deserve them or that you should make less profits but wherever you can show compassion you should.

1:54 AM, March 20, 2007  
Blogger சாலிசம்பர் said...

நாராயணமூர்த்தியை மார்க்சிய ஆதரவாளர் என்று கருதியது தவறு தான். //I believe that what I term ‘compassionate capitalism’ - capitalism in mind, socialism at heart which means corporations, which make profits - will have to make sure that they live in harmony with the society around them. So that they use a part of the profits to make sure that they help the less fortunate in society//
கலைஞரை பார்த்து இவரும் கெட்டுப் போய்விட்டார்.இந்த இதயத்தில் இடம் கொடுக்கும் வேலையே வேண்டாம்.அவர் முழுமையான கேபிடலிஸ்ட்டாகவே இருக்கட்டும்.

சோசலிச சமூகத்திற்கு அவசிய முன் தேவையாக முதலாளித்துவ சமூகம் இருக்கிறது என்ற வகையிலும்,முதலாளித்துவ சமூகம் வர்க்கத்தை இரு பிரிவுகளுக்குள் "இருப்பவன்,இல்லாதவன்"அடக்கிவிடுகிறது என்ற வகையிலும் முதலாளித்துவ வளர்ச்சியை வரவேற்கிறோம்.

வஜ்ரா,ம்யுஸ் அவர்களே பதிவின் கருத்திலிருந்து விலகிவிட்டோம்.

7:37 AM, March 20, 2007  
Blogger Muse (# 01429798200730556938) said...

பின்வரும் பதங்களுக்கான ஆங்கில டெர்மினாலஜிக்கள் என்ன?

பொருள்முதல்வாதம்:

(Materialism?)

கருத்துமுதல்வாதம்:

முரண்பாட்டியங்குவியல்:

3:48 AM, March 21, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//மார்க்சிஸ்டு அறிவியலாளர்களின் எதிப்பு ஆக்கபூர்வமானது,அறிவு பூர்வமானது.மார்க்சிஸம் மதத்திற்கு எதிரானது.அதையும் மதத்தையும் ஒன்றுபடுத்திப் பேசுவது மோசடி மற்றும் பொய்ப் பிரச்சாரமுமாகும்.//

ஜாலி ஜம்பர் நான் கூற வருவது சிம்பிளானது: ஸ்டீபன் ஹாக்கிங்கின் எழுத்துக்கள் கருத்து முதல்வாதத்துக்கு ஆதரவா பொருள் முதல் வாதத்துக்கு ஆதரவா என்று ஜல்லியடிக்க நான் வரவில்லை. பெரும் வெடிப்புக்கு 'முந்தைய' விசயம் கடவுளுடையது எனவே நீ ஆராயக்கூடாது என சொல்லுகிற போப்புக்கும் உன் அறிவியல் கருதுகோள் முரண்பாட்டியியங்கியலுக்கு ஒத்து வரவில்லை எனவே இதனை நான் எதிர்க்கிறேன் என்று சொல்லுகிற போலிட் பீரோ மெம்பருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? லைசன்கோவின் மார்க்சிய சித்தாந்தம் சார்ந்த மெண்டலிய எதிர்ப்பினால் அறிவியல் வளரவா செய்தது? கடந்த நூற்றாண்டின் மிக மோசமான அறிவியலாளர் வேட்டை நடத்தப்பட்டது மார்க்சிய அரசாங்கங்களால்தாம். ஒவ்வொரு அறிவியல் துறையிலும் இவர்கள் அறிவியலாளர்களை தாம் மார்க்சிய சித்தாந்தத்தால் வழிநடத்தப்படுவதாக கூறிட வற்புறுத்தினார்கள். இதையெல்லாம் ஆக்கபூர்வமான எதிர்ப்பு என கூறிடுவது -மிக மென்மையான வார்த்தைகளில் சொன்னால்- முட்டாள்த்தனம். நன்றாக புரிந்துகொள்ளுங்கள் ஜாலி ஜம்பர். மார்க்சிய அடிப்படையிலோ அல்லது முரண்பாட்டியங்கியல் அடிப்படையிலோ நீங்கள் இயற்பியலினை ஆக்கபூர்வமாக விமர்சியுங்கள். அல்லது டார்வினியத்தை ஆக்கபூர்வமாக விமர்சியுங்கள். ஆனால் மார்க்சிய விமர்சகர்கள் எவ்வாறு விமர்சித்தனர். ஆர்தர் எடிங்டனையும் ஜேம்ஸ் ஜீன்ஸையும் -அவர்களது நிலைப்பாட்டை- பூர்ஷ்வாத்தனம் என விமர்சிக்கிற விமர்சனம் எவ்விதத்தில் ஆக்கபூர்வமானதாக இருக்க முடியும்? ரிச்சர்ட் அட்டன்பரோ முதல் ஜேன் குடால் வரை மார்க்சிய விமர்சகர்களால் இவ்விதத்திலேயே விமர்சிக்கப்படுகிறார்கள். இவர்களிடம் அரசதிகாரம் வரும் போது இந்த விமர்சனங்கள் -ஏற்கனவே தன்னிலை சாராத அறிவியல் நிலைபாடுகளுக்கு அரசியல்-வர்க்க முத்திரை-குத்துகிற போக்கு- எப்படி உருவெடுக்கும்? அவர்களையெல்லாம் சிறையில் தள்ளுவதில்தான் போய் நிற்கும். அல்லது வதை முகாம்களில் அழிப்பதில். அதுதானே சோவியத் உயிரியலாளர்களுக்கு நேர்ந்தது.

//*. லமார்க்கிய சித்தாந்தத்தின்படி மரபு சந்ததிகளின்மூலமாய் கடத்தப்படுவது. ஆனால், தங்களுடைய இந்தக் கட்டுரையில், சிக்கிள் செல் அனீமியா போன்ற நோய்கள் குறித்த பாடங்கள் நீக்கப்பட்டன. ஏனெனில் எல்லாமே புறச்சூழல் சார்ந்தவை என்பதால் மரபுவழி கடத்தப்படுவதாக அறியப்பட்ட நோய்கள் இருக்கக் கூடாதல்லவா! என்பதை மேற்கோள் காட்டுகிறீர்கள். இடிக்கிறதே.//

ம்யூஸ் லமார்க்கிய பார்வையில் சுற்றுப்புற சூழலிலிருந்துப் பெறக்கூடிய விசயங்களே அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகின்றன. ஆனால் மெண்டலிய மரபுக்கடத்தல் உள்ளார்ந்த சில அமைப்புகளால் கடத்தப்படுகின்றன. உதாரணமாக லமார்க்கிய மரபுக்கடத்தல் சரியாக இருந்தால் இந்திய பெண்கள் பிறக்கும் போது காதில் ஓட்டையுடன் பிறக்க வேண்டும். ஐரோப்பிய சாதி முறைகளை நியாயப்படுத்த லமார்க்கிய மரபுக்கடத்தல் கோட்பாடுகள் பயன்பட்டன. ஜீன்கள்-சுற்றுப்புற சூழலால் தம்மளவில் பாதிக்கப்படாத ஓரளவு தன் வெளிப்பாடு மட்டுமே பாதிக்கப்படும் ஜீன்களின் இருப்பு நியோ-லமார்க்கியவாதிகளான லைசன்கோ போன்றவர்களால் நிராகரிக்கப்பட்டது. சுற்றுப்புற சூழலால் உருவாகாத உள்ளார்ந்த தன்மைகள் என்பது மார்க்சிய பார்வைக்கு முரணானது என கூறப்பட்டது. எனவே ஜெனிடிக்ஸ்ட்கள் வேட்டையாடப்பட்டனர். இன்று எப்படி கத்தோலிக்க சபை பூமி சூரியனை சுற்றுவதை ஏற்றுக்கொள்கிறதோ அது போல இன்று மார்க்சிஸ்ட்கள் (எல்லோரும் அல்ல: அண்மையில் நான் சந்தித்த ஒரு முதுபெரும் தோழர் வர்க்க போராட்ட சுபாவம் பாட்டாளிகளுக்கு மரபு மரபாக கடத்தப்படுவதாக கூறினார்,) ஜீன்களின் இருப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் கையில் அதிகாரம் இருந்தால்...இப்படியெல்லாம் கேடுகெட்ட பூர்ஷ்வா அறிவியல் உங்கள் வர்க்க போராட்ட உணர்வுகளை சோஷலிச சமுதாயக் கட்டமைப்பு மும்மரத்தை மழுங்கப்பண்ணுவதில் இருந்து உங்களை காப்பாற்றுவார்கள்!

ஆர்தர் கோய்ஸ்லர் குறித்து கூறியதற்கு நன்றி வஜ்ரா.

ஹால்டேன் இங்கிலாந்துகாரர், உயிர் பிழைப்பு என்றெல்லாம் அவருக்கு காரணம் இருக்கவில்லை. அவர் முழுக்க முழுக்க சித்தாந்த பற்றினால் அவ்வாறு செய்தார். கம்யூனிச நாடுகளில் பஞ்சம் வந்ததை குறித்து எழுதிவிட்டு அமாத்யா சென் மார்க்சிசத்துக்கு வக்காலத்து வாங்கவில்லையா அது போலத்தான். மக்களுக்கு மதம் ஒரு அபினா எனக்கு தெரியாது ஆனால் நிச்சயமாக அறிவுஜீவிகளுக்கு மார்க்சிசம் ஒரு அபின்.

10:02 AM, March 21, 2007  
Anonymous Anonymous said...

Please view the agappayanam of the cops to which your article is dedicated and the purappayanam of the Maoists. Thanks.

http://timesofindia.indiatimes.com/NEWS/India/Cops_were_sozzled_when_Maoists_struck/articleshow/1790755.cms


Cops were sozzled when Maoists struck
Vishwa Mohan
[22 Mar, 2007 0050hrs ISTTIMES NEWS NETWORK


NEW DELHI: Chhattisgarh cops massacred by Maoists in the state’s Bijapur district during the night of March 14 did not stand much of a chance. Apart from a measly six sentries on duty, the cops were in a deep alcohol-induced sleep when terror struck. The Maoist attack, which claimed the lives of 55 cops, was carried out with surgical precision. But what perhaps made the task of the rebels easier, a home ministry report accessed by TOI has revealed, is that Chhattisgarh Armed Police (CAP) and SPOs in the camp were in the habit of drinking heavily.

"The (police) post members were in the habit of drinking liquor every day and, on that day too, all of them consumed liquor and were fast asleep except for six sentries,’’ the report states. The sentries, despite being awake, were careless and did not notice the Maoists till the rebels opened fire, the report adds.

The sleeping cops were at a distance from where the sentries were posted and could not come to the aid of their colleagues quickly enough. To top it all, the sentries who were manning an LMG had only one magazine at their disposal. The boundary wall was just four feet tall, presenting no hindrance to the Maoists who swarmed into the camp.

11:27 AM, March 22, 2007  
Blogger ஐயன் காளி said...

Anony,

Your response to this article is the typical example of communist-infected propaganda, and

attitude of the propagandist.

First of all, the thing that could not be understood from the TOI report is whether all those who were

in the drunken sleep are in their duty hours or not.

It seems from the report that there are 6 sentries who are awake; clear that they were on duty.

What about others?

If these sleeping policemen are not on duty, what is the f****ing problem if they were having a

drunken sleep?

You may have your puritanical view of not drinking, not smoking, and not showing the ankles of

your aunt's legs with your victorian moralism. But, why do you want to push your puritanical pig-

shit to the level of belittling the lives of human beings?

Even if these police were not doing their duty and drunk while on duty, that does not justifies

KILLING them. You understand?

KILLING is taking away of a person's life. LIFE.

Have you ever had it? Have you ever felt it? Do you ever understood the beauty, necessity,

immensity of LIFE, which can never be compromised for anything else?

55 human beings were killed. But the communist-infected media and those who spread their

"Acquired Communistic Efficeincey Syndrome" were at glee that the news line gives the

impression of a punishment to those poor, pennyless cops who took the dangerous job of

confronting the maoist animals.

Moreover, Sri Aravindan has dedicated this article to the "family members" of those police men.

The poor penniless wives and children of those poor police men, whose only crime might be being

drunk on duty, and to take the job that these cowardly media and the communists would never

dare to, just to feed their family members with two square meals a day. A great sin. eh?

Now, how these women and children will take their life? Now half of their life will be spent on

running between the pillars to posts of the Indian beuracracy to get the meagre compensation,

which thanks to these communalistic-media may not be given as these police men were drunk

when on duty.

Earning and living naturally are sins to your communistic eyes. So, your Maoist brothern go and

kill the poor by the teachings of their book. More the poor, more the members to the party.

Pauperization for popularization. This is your communism, your jihad, and your crusades.

Now these women and children had to exert more than what they have been doing. May be the

utter poverty added to their impoverishment may push these already marginalized (thanks to your

closed economy and closed mindset) members of the society to prostitution or to begging.

But who cares? Your aim is to bring a beautiful future of proletarians, which has ever remained and

ever remains in the future. Never a reality.

If you cannot appreciate a rare expression of humanness that Sri Aravindan expressed to the

innocent family members, (which every other of us have failed to do, and should feel damn guilty

about) atleast you could have thought about the intention of these media reports. Instead, you

would ridicule the hindutva that shows concern to life.

Ofcourse, you people are unreachable to the trivialities of the things known as reality. You are

above these puninesses. You are intellectuals. Morons.

10:03 PM, March 22, 2007  
Blogger ஐயன் காளி said...

(A bettter formatted one below:)


Anony,

Your response to this article is the typical example of communist-infected propaganda, and attitude of the propagandist.

First of all, the thing that could not be understood from the TOI report is whether all those who were in the drunken sleep are in their duty hours or not.

It seems from the report that there are 6 sentries who are awake; clear that they were on duty. What about others?

If these sleeping policemen are not on duty, what is the f****ing problem if they were having a drunken sleep?

You may have your puritanical view of not drinking, not smoking, and not showing the ankles of your aunt's legs with your victorian moralism. But, why do you want to push your puritanical pig-shit to the level of belittling the lives of human beings?

Even if these police were not doing their duty and drunk while on duty, that does not justifies KILLING them. You understand?

KILLING is taking away of a person's life. LIFE.

Have you ever had it? Have you ever felt it? Do you ever understood the beauty, necessity, immensity of LIFE, which can never be compromised for anything else?

55 human beings were killed. But the communist-infected media and those who spread their "Acquired Communistic Efficeincy Syndrome" were at glee that the news line gives the impression of a punishment to those poor, pennyless cops who took the dangerous job of confronting the maoist animals.

Moreover, Sri Aravindan has dedicated this article to the "family members" of those police men. The poor penniless wives and children of those poor police men, whose only crime might be being drunk on duty, and to take the job that these cowardly media and the communists would never dare to, just to feed their family members with two square meals a day. A great sin. eh?

Now, how these women and children will take their life? Now half of their life will be spent on running between the pillars to posts of the Indian beuracracy to get the meagre compensation, which thanks to these communalistic-media may not be given as these police men were drunk when on duty.

Earning and living naturally are sins to your communistic eyes. So, your Maoist brothern go and kill the poor by the teachings of their book. More the poor, more the members to the party. Pauperization for popularization. This is your communism, your jihad, and your crusades.

Now these women and children had to exert more than what they have been doing. May be the utter poverty added to their impoverishment may push these already marginalized (thanks to your closed economy and closed mindset) members of the society to prostitution or to begging.

But who cares? Your aim is to bring a beautiful future of proletarians, which has ever remained and ever remains in the future. Never a reality.

If you cannot appreciate a rare expression of humanness that Sri Aravindan expressed to the innocent family members, (which every other of us have failed to do, and should feel damn guilty about) atleast you could have thought about the intention of these media reports. Instead, you would ridicule the hindutva that shows concern to life.

Ofcourse, you people are unreachable to the trivialities of the things known as reality. You are above these puninesses. You are intellectuals. Morons.

11:04 PM, March 22, 2007  
Anonymous Anonymous said...

Dear Ayyankali

I am surprised by your language but I never will use such language in my comments. I stand corrected that Mr. Aravindan Neelakantan's article was dedicated to the families of the policeman. I have no intention to say anything bad about the families who are also victims of what is going on in Chhatisgarh. In fact, I am not a Marxist and I never had or have the intention to defend the violence of the Maoists or their strategy. Neither am I a moralist on drinking.

Mr. Aravindan's article on science is a learned one which calls for a debate, but he is always on campaign mode. Perhaps that is what he likes and unfortunately nothing seems to change this.

It is a fact that the policemen (and the Salwa Judum) were basically bidding the Tatas' job for clearing the adivasis' land to make way for iron ore and steel mines (to feed the steel to Chinese and Western markets). Aravindan Neelakantan or you have enough resources to get to know this when you talk about the killings - this is what purappayanam entails. From the report, it is clear that they drink daily. Perhaps it is that their daily drinking stems from their life in an isolated forest camp where they have to face an uncertain situation - where duty hours really don't matter. That is their agappayanam - they don't know what is guiding them. That is what I meant.

The Chhattisgarh government last month arrested local CPI activists fighting against this. And for the Maoists, this provides the ground for the attack. In a situation where leaderships of all political parties - Congress, BJP, CPI(M) etc., - favour the Tatas and the globalising capital which operates through them. In this process, both the adivasis and the families of policemen are victims. And the Tatas and the Maoists are the occasional winners. That is purappayanam.

Thanks and bye.

11:36 PM, March 22, 2007  
Blogger Hari said...

This comment has been removed by the author.

3:50 AM, March 23, 2007  
Blogger ஐயன் காளி said...

My earlier comments are due to a generalized view about the media, and about those who tend to appreciate their vested interests. Though the language is very harsh, it still fits the targetted men.

Without your explanation about the intention, your earlier comment with the report of TOI project only those ideas that my earlier comment stands against.

Being part of the oppressed community, my anger gets tripled whenever the oppression and aggression happens against the poor Indians.

From your explanations, it is clear that you want to isolate yourself from all political parties and any stands, and remain apolitical.

You may realize sometime in the future that being isolated is also a political stand, and one which not exclude people from the good and bad effects of political and social web.

Then your cries and joys would be understood by apolitical people of that period as mere campaign, in the same way, as Aravindan's views are interpreted now by some.

4:15 AM, March 23, 2007  
Blogger வஜ்ரா said...

//
. மக்களுக்கு மதம் ஒரு அபினா எனக்கு தெரியாது ஆனால் நிச்சயமாக அறிவுஜீவிகளுக்கு மார்க்சிசம் ஒரு அபின்.

//

Religion is the opiate of the masses என்கிற மாதிரி Communism is the opiate of the intellecutals என்று க்ளேர் பூத் லூசி (clare boothe luce) சொன்னது நினைவுக்கு வருகிறது.

//
Communism is the opiate of the intellectuals with no cure except as a guillotine might be called a cure for dandruff.
//

4:27 AM, March 23, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி வஜ்ரா.

7:04 AM, March 23, 2007  
Blogger ஐயன் காளி said...

Anony's next comment has clarified the standpoint taken about which I have no qualms. Moreover, I appreciate anony's all the comments because it has brought the so far not noticed views of the media to us.

10:29 PM, March 26, 2007  
Blogger thiagu1973 said...

முரண்பாட்டு இயங்கியலுக்கும் நியூட்டனின் பொருள்முதல் வாதம் மட்டுமே உதவியாக இருக்கிறது
அதற்கு பின் வந்த குவாண்டம் தியரி எதிராக உள்ளது எனும் வாதத்துக்கு உங்கள் பதிவில் பதிலை காணோம்
வகையில்

5:15 AM, September 18, 2007  

Post a Comment

<< Home