Tuesday, November 21, 2006

இஸ்லாமியர்களுக்கு எதிராக பார்ப்பன பாசிச கும்பல் சதி

இஸ்லாமிய மாணவ மாணவிகளுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன சதியை வெட்ட வெளிச்சமாக்கும் பதிவு இது.
மதச்சார்பின்மைக்கு எதிராக இயங்கும் மிகவும் மோசமான பாசிச கும்பல் ஆர்.எஸ்.எஸ் என்கிற வந்தேறி பார்ப்பன கும்பல்தான். எனவேதான் இந்தியாவில் மதச்சார்பின்மைக்காக குரல் கொடுக்கும் ஜமாயத் இ இஸ்லாமி முதல் தமுமுக வரை இந்த பாசிச கும்பலின் தாக்குதலுக்கு ஆளாகிறது. ஆனால் இந்த சதி கும்பல் பூனாவில் நடத்திவரும் சதி வேலையை நாம் தோலுரிக்க வேண்டியது அவசியமாகும். ஆம் தோழர்களே சதிதான். பயங்கரமான சதி. இஸ்லாமியர்களுக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான பச்சை பாசிச பார்ப்பனீய சதி. இந்த பார்ப்பனீய சதியில் சில பெயர்தாங்கி முஸ்லீம்களும் விலை போகியிருக்கிறார்கள். பார்ப்பன பயங்கரவாதிகளின் இந்த இழிவான சதியை விவரிக்கிறேன் கேளுங்கள்.


பூனே கல்வி மாவட்டத்தில் எப்போதுமே மாவட்ட அளவிலான அரசு பத்தாம் வகுப்பு மற்றும் உயர்நிலை இறுதி தேர்வுகளில் சித்பவன் மற்றும் இதர பிராமண மாணவர்களே முதலில் வருவது வழக்கம். எனவே கல்வியில் பார்ப்பன ஆதிக்கம் குறித்த முற்போக்கு பார்வைக்கு இது நல்ல ஆதாரமாக அமைகிறது. இந்நிலையில் இந்த வருடம் இந்த ஆதாரத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பல் ஈடுபட்டுள்ளது இப்போது வெளிவந்துள்ளது. ஆம்.2003 ஆம் ஆண்டு மாவட்ட அளவில் முதல் மதிப்பெண்கள் எடுத்ததில் முஸ்லீம் மாணவிகளும் மாணவர்களும் வந்துள்ளனர். இப்படி நடத்தியதன் பின்னணியில் இருக்கும் ஆசாமிகளை பார்க்கும் போதுதான் நமக்கு ஆர்.எஸ்.எஸ் எவ்வளவு பயங்கரமான நாசி பாசிச விஷப்பாம்புகள் என்பது புரியும்.



உதாரணமாக வஜீதா சேரிப்பகுதியில் வாழும் முஸ்லீம் சிறுமி. இடையறாது ஒலிப்பெருக்கிகள் பாடல்களை பிளிறிக்கொண்டிருக்கும், சரியான மின்சாரவசதியற்ற பகுதியிலிருந்து வரும் இந்த சிறுமி பூனா கல்வி மாவட்டத்தில் பொதுவாக அந்தண மாணவ மாணவிகளே முதல் ரேங்குகள் எடுக்கும் தேர்வுகளில் அவர்களை வென்று முதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவ்வளவு ஆண்டுகள் இல்லாத இந்த புதுமையை 70 வருடங்கள் அந்த இடத்திலிருந்து இயங்கும் உருது பள்ளிக்கூடம் நிகழ்த்தியிருக்கிறது. எவ்வாறு? என்று பார்த்தால்தான் இஸ்லாமின் ஆணிவேரை பிடுங்கிட ஆர்.எஸ்.எஸ் செய்யும் சதி அம்பலமாகிறது. இந்த சதிக்கு உடன்போகும் பெயர்தாங்கியின் பெயர் இனாம்தார் என்பது. இந்த பெயர்தாங்கி குலாம் முகமது ஆஸாம் கல்வி அறக்கட்டளை என்கிற போர்வையில் 16 ஆண்டு காலமாக நடத்திவரும் செய்கைகளின் விளைவுதான். வறுமையான குடும்பங்களில் இருந்தும் கூட இஸ்லாமிய பெண்கள் பூனேயில் மாவட்ட அளவில் முதலில் வருகின்றனர். இந்த பெயர்தாங்கி இஸ்லாமிய சமுதாய துரோகிக்கு உதாரணம் யார் தெரியுமா? முகமது கஜினியா? அவுரங்கசீப்பா? முகமதலி ஜின்னாவா? தாவூத் இப்ராகிமா? அல்லது அப்சலா? இத்தகைய இஸ்லாமிய சான்றோர்களை தனது உதாரணமாக எடுக்காத இந்த சமுதாய துரோகி இஸ்லாமிய அரசியல் இயக்கங்களை 'ஹிட்லரிய இயக்கங்கள்' என வசைபாடிய அம்பேத்கரை தமது முன்னுதாரணமாக கொள்கிறார். இனாம்தார் முஸ்லீம்கள் ஏதோ தாங்கள் இந்த தேசத்தில் கொடுமை படுத்த படுவதாகச் சொல்லுவதை விட்டுவிட்டு கல்வி மூலமாக பாடுபட்டு தம்மை முன்னுக்கு கொண்டு வரவேண்டும் என்று சொல்லுகிறார். எப்படி இருக்கிறது கதை பாருங்கள்! முஸ்லீம்கள் இந்தியாவில் கொடுமைப்படுத்தப்படுவதாக சொல்வதுதானே அண்ணன் கயிதே-ஆசன முகமதலி ஜின்னா முதல் பாராளுமன்ற போராட்ட தியாகி அப்சல் அவர்கள் வரை நமக்கு காட்டிய மரபு. அதை விட்டு விட்டு முஸ்லீம்கள் அம்பேத்கர் வழியில் செல்லவேண்டுமாம். எப்படி இந்த இழிபிறவி பெயர்தாங்கிக்கு இந்த யோசனை வந்தது? என்று பார்க்கிறீர்களா?


தனது கல்வி அறக்கட்டளை மூலம் மாவட்ட அளவில் முதல் ரேங்க் வாங்குகிறதை பாராட்ட வரும் ஒவ்வொருவரிடமும் இந்த பெயர்தாங்கி கூறுவதை பாருங்கள். அவர் தவறாமல் ஒவ்வொருவரிடமும் சொல்கிறாராம், இந்த முஸ்லீம் மாணவர்கள் ஹிந்துக்களின் உதவியில்லாமல் இந்த சாதனைகளை நிகழ்த்தியிருக்க முடியாது என்று. மட்டுமல்ல மேலும் மறக்காமல் சொல்கிறாராம் அவர் ஆர்.எஸ்.எஸ் இயக்க கல்விசாலை ஆசிரியர்களை தமது மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்த அழைத்த போது ஒவ்வொரு முறையும் அந்த பார்ப்பன வந்தேறிக்கும்பல் அழைப்பினைத் தட்டாமல் வந்து இந்த முஸ்லீம் மாணவ மாணவிகளுக்கு மிகவும் அக்கறை எடுத்து சொல்லிக்கொடுத்தார்களாம்.



(... Indeed, none of these students would have made it to the top had it not been for the contribution of Hindus. Mr. Inamdar makes it a point to declare that teachers from RSS-run schools have not only come whenever invited, as guest teachers for his special Merit List batch, but have also taught his students diligently.
ஆதாரம் : தி ஹிண்டு : வெள்ளிக்கிழமை , ஆகஸ்ட் 22, 2003, 'Changing face of Pune schools')



இஸ்லாமிய சகோதரர்களே நாளைக்கு உங்கள் பகுதிகளிலும் இந்த பார்ப்பன பாசிச கும்பல் ஊடுருவி உங்கள் குழந்தைகளையும் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் முதல் மதிப்பெண்கள் வாங்க செய்துவிடலாம். ஜாக்கிரதை எனவே புனிதமாதங்கள் முடிந்ததும் இந்த பார்ப்பன கும்பலை கண்ட இடங்களில் .... அவர்கள் நடத்தும் பள்ளிகளிலும் அவர்கள் அலுவலகங்களையும் தடைசெய்யுங்கள். இல்லாவிட்டால் நாளைக்கு முஸ்லீம்களின் வறுமையை கல்வியின்மையை முதலாக வைத்து நமது ஜிகாத் அரசியலை நடத்த முடியாது.


23 Comments:

Blogger வஜ்ரா said...

அதனால் தான் இஸ்லாமியர் எப்பப் பார்தாலும் ஆர் எஸ் எஸ் பூச்சாண்டி காட்டி தம் மக்களை படிக்காமல் முன்னேரவிடாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

இதற்கு நம் இடது சாரிகள் ஜால்ரா தனி track ல் ஓடிக் கொண்டிருக்கும். வோட்டுப்பிச்சைக்காக.

இந்த இஸ்லாமிஸ்டுகள் தங்கள் பதவியை, அதனால் கிட்டும் பண பலத்தை தக்கவைத்துக் கொள்ள அப்பாவி இஸ்லாமியரை அடிமைகளாகப் பயன் படுத்துகின்றனர்.

இவர்கள் தலைவனாக இருக்க அடிமைகள் தேவை. நம் காம்ரேடுகள் காம்ரேடுகளாக இருக்க ஏழைகள் தேவை போல்.!!

12:01 AM, November 22, 2006  
Anonymous Anonymous said...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

12:07 AM, November 22, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி வஜ்ரா. வருகைக்கும் உங்கள் கருத்துகளுக்கும்.
கீழ்காணும் நோக்கங்களே ஆர்,எஸ்.எஸ்ஸின் இந்த சதி செயலுக்கு காரணமாக இருக்கலாம்.

1. விளிம்பு நிலை மக்களுடன் இஸ்லாமியருக்கு நெருக்கம் ஏற்பட்டால் நாளை பார்ப்பனீயத்திற்கு ஆபத்து ஏற்படலாம் என்பதனை நினைத்து அவர்களை பிரித்திட ஆர்.எஸ்.எஸ் இயக்கம் செய்யும் சதி.

2. இப்படி முஸ்லீம் மாணவர்களையும் மாணவிகளையும் முதல் ரேங்க் எடுக்கவைத்தால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டிய அவசியம் வராது என்பதனால் அதற்காக ஆர்.எஸ்.எஸ் இயக்கம் செய்யும் சதி.

3. இதெல்லாம் பொய். இப்படி ஒரு விஷயமே நடக்கவில்லை. இது மேல்சாதி வெறியர்களின் பொய் பிரச்சாரம்

இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை வைத்து சத்தம் போட்டு பிரச்சாரம் செய்தால் போயிற்று, உண்மையாம் உண்மை யாருக்கு அது வேணும் வெங்காயம். ஆர்.எஸ்.எஸ்ஸை பேயாக்கி பிசாசாக்கி பிரச்சாரம் செய்யணும் அதுதான் பகுத்தறிவு அதுதான் முற்போக்குதனம் அதுதான் நேர்மை. ஆர்.எஸ்.எஸ்ஸை திட்டாதவனெல்லாம் பிற்போக்கு மொள்ளமாரி, பாசிச கேப்மாறி, நாசி ராஸ்கோலு பார்ப்பன வந்தேறி அப்படி இல்லைன்னா பார்ப்பன வந்தேறிக்கு அடிவருடி.

12:10 AM, November 22, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி இணைவைப்பவன். அடிக்கடி வாருங்கள்.
அழகான பெயர்.

12:12 AM, November 22, 2006  
Anonymous Anonymous said...

இதை எல்லாம் ஒத்துக் கொள்ள முடியாது. நாங்கள் இப்போது இருப்பது போல் தான் எப்போதும் இருப்போம்.

-
மருமகளை கல்யாணம் கட்டிகிட்டவன்

12:34 AM, November 22, 2006  
Anonymous Anonymous said...

Nilakandtan

I am happy to see you giving posts which are creating a good atmosphere. But why are you sarcastic? you should try to give this as positive. This type news is not known to us. We are always thinking RSS is really anti Muslim and Fascist.

- Anonymous Muslim

12:53 AM, November 22, 2006  
Anonymous Anonymous said...

அதிர்ச்சியான தகவல். நன்றி

12:56 AM, November 22, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ன்றி மருமகள்-புருசன் (யாரையோ நினைவுபடுத்தும் பெயர்.) :)
நன்றி அனாநி மற்றும் அனானி முஸ்லீம்,
ஆம். ஆர்.எஸ்.எஸ் முஸ்லீம்களை வெறுக்கும் இயக்கம் அல்ல.

12:58 AM, November 22, 2006  
Blogger ஜயராமன் said...

நீலகண்டன் ஐயா,

இது ஒருவேளை பாகிஸ்தானிய சதியாக கூட இருக்கலாம். இந்த பார்ப்பன சூட்சியை உடனே முறியடிக்கவேண்டும். அதனால், சிறையிலிருக்கும் எல்லா முஸ்லிம்களையும் உடனே விடுவிக்க வேண்டும். தூக்குதண்டனை பெற்றவர்களுக்கு உடனே நாலு ஏக்கர் நிலமும், கலர் டிவியும் வழங்க வேண்டும் என்று நினைக்கிறேன்

நன்றி

1:04 AM, November 22, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

பாகிஸ்தான் ஒரு அப்பாவி நாடு. மும்பையில் மதநல்லிணக்கத்துக்காக இரயிலில் வைத்த குண்டுகளால் இறந்த இந்துக்களைவிட அதிக எண்ணிக்கையில் முஷாரப்பின் தலை முடிகள் வெள்ளையாகியிருப்பதில் இருந்து பாகிஸ்தான்தான் இந்தியாவை விட அதிகமாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெரியும். பாவம் குளிர்காய கார்கில் மலை மீது வந்து அமர்ந்திருந்த அப்பாவி புனிதப்போராளிகளை அடித்து விரட்டிய பாசிச இந்திய படைக்கும் அதற்கு இரத்தவெறியுடன் ஆதரவு கொடுத்த அடல்பிகாரி வாஜ்பாயுமே இந்த பிரச்சனைக்கெல்லாம் காரணம். மற்றபடி உங்கள் ஐடியா அருமை. திருவாளர்.'மஞ்சள் துண்டு பகுத்தறிவிடம்' கூறினால் அடுத்த தேர்தல் அறிக்கையில் அவர் இந்த ஐடியாவை 'இஸ்லாமிய கைதிகளுக்கு இலவச கலர்டிவி திட்டம்' என ஒரு உதார் விட வசதியாக இருக்கும். :)

1:13 AM, November 22, 2006  
Anonymous Anonymous said...

Your views are very nice and straight forward. But its not the way to respond. You should be polite and polished to convey this like "Ava". Really they are doing the same in hidden way. I'm very proud of your boldness. SOciety needs many more men like you.

1:15 AM, November 22, 2006  
Blogger Hariharan # 03985177737685368452 said...

ஆர்.எஸ்.எஸ் என்றாலே நாட்டு மக்களை (தேசபக்தி)கஞ்சாக் குடிக்கியாக்கிக் கொண்டிருப்பது என்பது தானே முற்போக்கு வாதம்!

1:26 AM, November 22, 2006  
Blogger ஜடாயு said...

நானும் ஏதோ சேரிகளுக்குப் போய் வாரக் கடைசியில் சும்மா ஏழைக் குழைந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறேன் ஆர்.எஸ்.எஸ். சேவை இயக்கம் நடக்கும் இடங்களில்.

இப்போது தான் புரிகிறது எவ்வளவு பெரிய சதி வேலையை சாதாரணமாகச் செய்கிறார்கள் என்று... ஆனாலும் மனதுக்கு நிறைவளிக்கும் சதி :)

நல்ல பதிவு. அதைவிட நல்ல தலைப்பு.

1:34 AM, November 22, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ஆமாம் அரிகரன் முற்போக்கு வாதம்தான் அறிவு'சீவி'களின் அபின் என்று அண்ணன் மார்க்ஸ் எங்கும் சொல்லவில்லை. கரும்பாறை உளறல்தான் பகுத்தறிவு என்று பகுத்தறிவில் ஆதவன் ஈவேரா எங்கும் முழங்கிடவில்லை. :)

1:37 AM, November 22, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

ஆமாம் நன்றி ஜடாயு! நீங்களும் சதிகாரர்தானா? தலித்துகள் மத்தியிலும் இந்த பார்ப்பன சதி நடந்து கொண்டிருக்கிறது. ஒரு கூலித்தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் தம்பதிகளின் மகன் சேவாபாரதியின் உதவியுடன் எம்பிபிஎஸ் படித்து இப்போது அவரும் சேரிகளில் சேவாபாரதி அமைப்பினருடன் சேவை செய்ய போவது குறித்து போனவாரம் சேவா பாரதி, பெங்களூரில் நடத்திய சந்திப்பில் அந்த மருத்துவ மாணவரே கூறினார். எப்படிப்பட்ட சதி வேலைகள் நடக்கிறது பார்த்தீர்களா? இந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்ய வேண்டும்.

1:41 AM, November 22, 2006  
Anonymous Anonymous said...

இந்த பதிவை தடை செய்ய வேண்டும்

1:49 AM, November 22, 2006  
Anonymous Anonymous said...

வருத்தமாக இருந்தாலும் நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கிறது. குஜராத் பூகம்பத்தின்போது பாதிக்கப் பட்ட என் நண்பன் ஒருவன் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் பல முஸ்லீம்களுக்கும் பாரபட்சம் பார்க்காமல் உதவி செய்ததைப் பார்த்ததாகச் சொன்னான். அவர்கள் சில சமயங்கள் வன்முறையில் இறங்கினாலும் பல நெருக்கடி நேரங்களில் நாட்டுக்கு நன்மையே செய்துவருகிறார்கள்.

- அப்துல்லா, மும்பை

3:31 AM, November 22, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அப்துல்லா.
ஒரு சிறிய திருத்தம்.
//அவர்கள் சில சமயங்கள் வன்முறையில் இறங்கினாலும் // என்று கூறியுள்ளீர்கள்
அவர்கள் சிலசமயங்களில் வன்முறையில் இறங்க வைக்கப்பட்டாலும் என்பதே சரியாக இருக்கும்.

3:49 AM, November 22, 2006  
Blogger கால்கரி சிவா said...

நீல்ஸ், இது புனேயில் நிற்காமல் பாரதமெங்கும் பரவவேண்டும் என்பது என் அவா.

7:55 AM, November 22, 2006  
Blogger Muse (# 01429798200730556938) said...

நீலகண்டன் அவர்களே,

இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை வைத்து சத்தம் போட்டு பிரச்சாரம் செய்தால் போயிற்று,

இந்த மூன்றையுமே அவர்கள் செய்யமாட்டார்கள். ஏனெனில், எதிர்ப்பதற்குக்கூட உண்மையின் அருகில் வருபவன் உண்மையின் பக்கம் சேர்ந்துவிடுவான் என்கின்ற பயம்தான் காரணம். ராமனின் உருவெடுத்த ராவணனால் பெண்களைத் தவறாக பார்க்க முடியாததுபோல.

தங்களது கட்டுரைகளால் உண்மை புரிந்தவர்கள் பலர். மனம் திரும்பிக்கொண்டிருப்பவரும் உளர். இதைப் புரிந்து கொண்ட இருள்மதத்தினர் குறை சொன்னால், உடனடியாக பதில் அஸ்திரம் வரும், அது பட்டால் சுவனம்பற்றிய கனவுகள் கலைந்துவிடும் என்று அஞ்சுகின்றனர்.

போப்பின் கத்தோலிக்க அரசு பல புத்தகங்களை படிக்கக்கூடாதவை என்று வைத்திருக்கிறதாம். அதுபோல உங்களது பதிவுகளை வைத்துவிட்டு சுவனம் பற்றியோ, ஆண்டவர் பற்றியோ கனவு காண உறங்க சென்றுவிடுவார்கள்.

11:02 AM, November 22, 2006  
Anonymous Anonymous said...

I came to know many new things.

11:39 AM, November 22, 2006  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

நன்றி ம்யூஸ், சும்மாவா சொன்னார்கள் ignorance is bliss என்று, நன்றி ஹேமா. வருகைக்கும் கருத்துக்கும்

12:50 PM, November 22, 2006  
Anonymous Anonymous said...

இந்த ஆள் சொல்றது குழப்புதுங்க. யாராவது உண்மையை சொல்லுங்களேன். ஆரெஸஸ் நல்லதா கெட்டதா?

3:53 PM, November 22, 2006  

Post a Comment

<< Home