Tuesday, November 21, 2006

இஸ்லாமியர்களுக்கு எதிராக பார்ப்பன பாசிச கும்பல் சதி

இஸ்லாமிய மாணவ மாணவிகளுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன சதியை வெட்ட வெளிச்சமாக்கும் பதிவு இது.


மதச்சார்பின்மைக்கு எதிராக இயங்கும் மிகவும் மோசமான பாசிச கும்பல் ஆர்.எஸ்.எஸ் என்கிற வந்தேறி பார்ப்பன கும்பல்தான். எனவேதான் இந்தியாவில் மதச்சார்பின்மைக்காக குரல் கொடுக்கும் ஜமாயத் இ இஸ்லாமி முதல் தமுமுக வரை இந்த பாசிச கும்பலின் தாக்குதலுக்கு ஆளாகிறது. ஆனால் இந்த சதி கும்பல் பூனாவில் நடத்திவரும் சதி வேலையை நாம் தோலுரிக்க வேண்டியது அவசியமாகும். ஆம் தோழர்களே சதிதான். பயங்கரமான சதி. இஸ்லாமியர்களுக்கும் மதச்சார்பின்மைக்கும் எதிரான பச்சை பாசிச பார்ப்பனீய சதி. இந்த பார்ப்பனீய சதியில் சில பெயர்தாங்கி முஸ்லீம்களும் விலை போகியிருக்கிறார்கள். பார்ப்பன பயங்கரவாதிகளின் இந்த இழிவான சதியை விவரிக்கிறேன் கேளுங்கள்.



பூனே கல்வி மாவட்டத்தில் எப்போதுமே மாவட்ட அளவிலான அரசு பத்தாம் வகுப்பு மற்றும் உயர்நிலை இறுதி தேர்வுகளில் சித்பவன் மற்றும் இதர பிராமண மாணவர்களே முதலில் வருவது வழக்கம். எனவே கல்வியில் பார்ப்பன ஆதிக்கம் குறித்த முற்போக்கு பார்வைக்கு இது நல்ல ஆதாரமாக அமைகிறது. இந்நிலையில் இந்த வருடம் இந்த ஆதாரத்தை சீர்குலைக்கும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன கும்பல் ஈடுபட்டுள்ளது இப்போது வெளிவந்துள்ளது. ஆம். 2003 ஆம் ஆண்டு மாவட்ட அளவில் முதல் மதிப்பெண்கள் எடுத்ததில் முஸ்லீம் மாணவிகளும் மாணவர்களும் வந்துள்ளனர். இப்படி நடத்தியதன் பின்னணியில் இருக்கும் ஆசாமிகளை பார்க்கும் போதுதான் நமக்கு ஆர்.எஸ்.எஸ் எவ்வளவு பயங்கரமான நாசி பாசிச விஷப்பாம்புகள் என்பது புரியும்.



உதாரணமாக வஜீதா சேரிப்பகுதியில் வாழும் முஸ்லீம் சிறுமி. இடையறாது ஒலிப்பெருக்கிகள் பாடல்களை பிளிறிக்கொண்டிருக்கும், சரியான மின்சாரவசதியற்ற பகுதியிலிருந்து வரும் இந்த சிறுமி பூனா கல்வி மாவட்டத்தில் பொதுவாக அந்தண மாணவ மாணவிகளே முதல் ரேங்குகள் எடுக்கும் தேர்வுகளில் அவர்களை வென்று முதல் மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவ்வளவு ஆண்டுகள் இல்லாத இந்த புதுமையை 70 வருடங்கள் அந்த இடத்திலிருந்து இயங்கும் உருது பள்ளிக்கூடம் நிகழ்த்தியிருக்கிறது. எவ்வாறு? என்று பார்த்தால்தான் இஸ்லாமின் ஆணிவேரை பிடுங்கிட ஆர்.எஸ்.எஸ் செய்யும் சதி அம்பலமாகிறது. இந்த சதிக்கு உடன்போகும் பெயர்தாங்கியின் பெயர் இனாம்தார் என்பது. இந்த பெயர்தாங்கி குலாம் முகமது ஆஸாம் கல்வி அறக்கட்டளை என்கிற போர்வையில் 16 ஆண்டு காலமாக நடத்திவரும் செய்கைகளின் விளைவுதான். வறுமையான குடும்பங்களில் இருந்தும் கூட இஸ்லாமிய பெண்கள் பூனேயில் மாவட்ட அளவில் முதலில் வருகின்றனர். இந்த பெயர்தாங்கி இஸ்லாமிய சமுதாய துரோகிக்கு உதாரணம் யார் தெரியுமா? முகமது கஜினியா? அவுரங்கசீப்பா? முகமதலி ஜின்னாவா? தாவூத் இப்ராகிமா? அல்லது அப்சலா? இத்தகைய இஸ்லாமிய சான்றோர்களை தனது உதாரணமாக எடுக்காத இந்த சமுதாய துரோகி இஸ்லாமிய அரசியல் இயக்கங்களை 'ஹிட்லரிய இயக்கங்கள்' என வசைபாடிய அம்பேத்கரை தமது முன்னுதாரணமாக கொள்கிறார். இனாம்தார் முஸ்லீம்கள் ஏதோ தாங்கள் இந்த தேசத்தில் கொடுமை படுத்த படுவதாகச் சொல்லுவதை விட்டுவிட்டு கல்வி மூலமாக பாடுபட்டு தம்மை முன்னுக்கு கொண்டு வரவேண்டும் என்று சொல்லுகிறார். எப்படி இருக்கிறது கதை பாருங்கள்! முஸ்லீம்கள் இந்தியாவில் கொடுமைப்படுத்தப்படுவதாக சொல்வதுதானே அண்ணன் கயிதே-ஆசன முகமதலி ஜின்னா முதல் பாராளுமன்ற போராட்ட தியாகி அப்சல் அவர்கள் வரை நமக்கு காட்டிய மரபு. அதை விட்டு விட்டு முஸ்லீம்கள் அம்பேத்கர் வழியில் செல்லவேண்டுமாம். எப்படி இந்த இழிபிறவி பெயர்தாங்கிக்கு இந்த யோசனை வந்தது? என்று பார்க்கிறீர்களா?



தனது கல்வி அறக்கட்டளை மூலம் மாவட்ட அளவில் முதல் ரேங்க் வாங்குகிறதை பாராட்ட வரும் ஒவ்வொருவரிடமும் இந்த பெயர்தாங்கி கூறுவதை பாருங்கள். அவர் தவறாமல் ஒவ்வொருவரிடமும் சொல்கிறாராம், இந்த முஸ்லீம் மாணவர்கள் ஹிந்துக்களின் உதவியில்லாமல் இந்த சாதனைகளை நிகழ்த்தியிருக்க முடியாது என்று. மட்டுமல்ல மேலும் மறக்காமல் சொல்கிறாராம் அவர் ஆர்.எஸ்.எஸ் இயக்க கல்விசாலை ஆசிரியர்களை தமது மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் நடத்த அழைத்த போது ஒவ்வொரு முறையும் அந்த பார்ப்பன வந்தேறிக்கும்பல் அழைப்பினைத் தட்டாமல் வந்து இந்த முஸ்லீம் மாணவ மாணவிகளுக்கு மிகவும் அக்கறை எடுத்து சொல்லிக்கொடுத்தார்களாம்.

(... Indeed, none of these students would have made it to the top had it not been for the contribution of Hindus. Mr. Inamdar makes it a point to declare that teachers from RSS-run schools have not only come whenever invited, as guest teachers for his special Merit List batch, but have also taught his students diligently.
ஆதாரம் : தி ஹிண்டு : வெள்ளிக்கிழமை , ஆகஸ்ட் 22, 2003, 'Changing face of Pune schools')


இஸ்லாமிய சகோதரர்களே நாளைக்கு உங்கள் பகுதிகளிலும் இந்த பார்ப்பன பாசிச கும்பல் ஊடுருவி உங்கள் குழந்தைகளையும் மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் முதல் மதிப்பெண்கள் வாங்க செய்துவிடலாம். ஜாக்கிரதை எனவே புனிதமாதங்கள் முடிந்ததும் இந்த பார்ப்பன கும்பலை கண்ட இடங்களில் .... அவர்கள் நடத்தும் பள்ளிகளிலும் அவர்கள் அலுவலகங்களையும் தடைசெய்யுங்கள். இல்லாவிட்டால் நாளைக்கு முஸ்லீம்களின் வறுமையை கல்வியின்மையை முதலாக வைத்து நமது ஜிகாத் அரசியலை நடத்த முடியாது.


0 Comments:

Post a Comment

<< Home