Tuesday, August 30, 2005

வேதாளம் சொல்லும் கதை : ஜைனூல் ஆப்தீன் கூட்டத்தில் ஈவெரா



தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் மரத்தின் மீதேறி அங்கு தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து கொண்டு மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து, மரத்திலிருந்த வேதாளத்தை மீண்டும் தூக்கி தன் தோளில் போட்டபடி செல்கையில் வேதாளம் சற்றே நகைத்து "மன்னனே நீ ஏன் இந்த பலனில்லாத முயற்சியில் ஈடுபடுகிறாய்? ஒருவேளை இந்த முயற்சியைக்காட்டிலும் இந்த முயற்சியில் உன்னைத் தூண்டியவனிடத்தில் உனக்கு விசுவாசம் இருப்பதால் இது பகுத்தறிவற்றதென தெரிந்தும் நீ அமைதிகாக்கிறாயா ஆனால் அப்போதும் கூட சில சமயங்களில் அமைதியை மீற வேண்டிய நிலை ஏற்படலாம். இதற்கு உதாரணமாக வருங்காலத்தில் நாகர்கோவில் எனும் நகரில் சில கருஞ்சட்டை தோழர்கள் நடந்துகொண்ட விதத்தின் கதையை உனக்கு நான் கூறுகிறேன். கவனமாகக் கேள்." எனக்கூறி கதையை சொல்லலாயிற்று.


சுனாமியடித்த கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் நாகர்கோவில் என்று ஒரு நகரமுண்டு. அந்நகரில் அரவிந்தன் நீலகண்டன் என்று ஒரு காஃபீர் வாழ்ந்து வந்தான். பொது சகாப்தம் 2005 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி நாகர்கோவிலில் நடந்த 'இஸ்லாம் ஓர் இனியமார்க்கம்' நிகழ்ச்சியில் பார்வையாளனாகக் கலந்து கொள்ள இந்த கடைந்தெடுத்த காஃபீரான அரவிந்தன் நீலகண்டனுக்கு வாய்ப்பு கிடைத்தது. கேள்விகளுக்கு பதிலளித்தவர் ஜைனுல் ஆப்தீன் எனும் மார்க்க பெரியவர். 'மற்ற மார்க்கத்தவர்களுக்காக' நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஏறத்தாழ ஐந்து மணிநேரம் நின்றபடியே ஓய்வின்றி முகத்தில் எவ்வித மாறுதலுமின்றி ஓர் நகைச்சுவைத்தன்மையுடன் பதிலளித்தபடியே இருந்தார் ஆப்தீன். ஜிகாத், ராமஜென்மபூமி, மகர், குரானில் நவீன அறிவியல் கூறப்பட்டிருக்கும் அதிசயம் என வெளுத்து வாங்கினார். அப்படியும் காலப்பளுவின் காரணமாக ஐந்து மணிநேரத்தில் பதினைந்தோ பதினெட்டோ பேருக்குத்தான் அவரால் பதிலளிக்க முடிந்தது. சாலமன் பாப்பையாவும் ஈமானும் கலந்த அந்த விசித்திர மனிதரின் பதில்கள் வழக்கமான இஸ்லாமிய சால்ஜாப்புகள்தான் என எண்ணியபடி அந்நிகழ்ச்சியை தொடர்ந்து கவனித்துக்கொண்டிருந்தான் காஃபீர் நீலகண்டன். தொடர்ந்து விவாதிக்கும்படியாக இல்லாமல் அடுத்தடுத்தாக கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்கும்படியாக அமைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி. தௌதவாகவே மேடைமேல் இருப்பவருக்கு சாதகமான சூழ்நிலை என்றே இஸ்லாமின் ஔதபடாத அவனது இருளடைந்த மனதிற்கு தோன்றியது. அவர் எழுப்பிய அடிப்படை தகவல் பிழைகளைக் கூட தட்டிக்கேட்க முடியாத நிகழ்ச்சி அமைப்பு என அவனுக்கு பட்டது. உதாரணமாக பாபர் காலத்தில் ஒருத்தனுக்கு ஒருத்தன் என்று சண்டை போடற நிலைங்க. பீரங்கி துப்பாக்கியா இருந்துச்சு. அப்படியிருக்கும் போது எப்படிங்க பாபர் பெரும்பான்மை மக்களுக்கான கோவில இடிச்சுருப்பாரு..." "...பாபர் ஒரு உயில் எழுதி அது டெல்லியில தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் இருக்குது. அதுக்கு பேரு பாபர் நாமா" "...1949க்கு முன்னால ராமஜென்மபூமி பத்தி எந்த வழக்கும் கிடையாது" "துளசிதாஸக் காப்பியடிச்சு கம்பன் தமிழ்ல ராமாயணம் எழுதினான்" என்கிற ரீதியில் (வேதாளத்திற்கு வயதாகிவிட்டதால் சரியாக அதே வார்த்தைகளில் கூறியுள்ளதா தெரியவில்லை ஆனால் சாராம்சம் இதுதான்- மண்ணாந்தை) இதெல்லாம் 'கேட்பவன் கிறுக்கன் என்றால் ஒசாமா கூட மகாத்மாதான்' என்ற பாணியிலான உளறல்கள் என்றும் குறைந்தபட்சம் பத்தாவது வகுப்பு மாணவனின் வரலாற்று அறிவோடு இருப்பவர்கள் கூட அவரது வாதங்களை முறியடித்துவிடலாம் என்பது அரவிந்தன் நீலகண்டனின் காஃபீர்தனமான நம்பிக்கைகள். ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் எடிட் செய்து அளிக்கப்படுகையில் சாதாரண இஸ்லாமியரின் நம்பிக்கையையும் இஸ்லாமிய ஈகோவையும் நிமிர்ந்து நிற்கவைக்கும் என்பது அந்த வக்கிரம் பிடித்த காஃபீருக்கு எப்படி தெரியும்?


அப்போதுதான் அது நிகழ்ந்தது. ஈவெராவினை சிலாகிப்பதாகக் கூறிக்கொண்ட ஒருமனிதர் 'கடவுள் உண்டா? அதற்கு சான்று என்ன?' எனக் கேட்டார். ஜைனூல் ஆப்தீன் "சிலர் கடவுளின்பெயரால் பிழைப்பு நடத்தினால் ஈவெரா கடவுள் இல்லை என்று சொல்லி பிழைப்பு நடத்தியவர். அவர் என்ன உழைத்தா பிழைத்தார்? கடவுள் இல்லை என்று சொல்லி பிழைப்பு நடத்தினார். வீட்டுக்கு வர இவ்வளவு ரூபாய். வீட்டில் சாப்பிட இவ்வளவு ரூபாய். வீட்டில் தண்ணீர் குடிக்க இவ்வளவு ரூபாய். குழந்தைக்கு பெயர் வைக்க இவ்வளவு ரூபாய். கல்யாணத்திற்கு வர இவ்வளவு ரூபாய். கருமாதிக்கு வர இவ்வளவு ரூபாய். என்று வசூலித்து பிழைப்பு நடத்தினார். ஏன் வீரமணி வழக்கறிஞருக்கு படித்தவர்தான். அவர் வேலை செய்கிறாரா அல்லது கடவுள் இல்லை என்று சொல்லி பிழைப்பு நடத்துகிறாரா? கடவுள் என்று கல்சிலையை வணங்குகிறீர்களே என்று கேட்ட ஈவெராவுக்கு சிலை அவரது சிலைக்கு பூமாலை. கடவுள் இல்லை என்று சொல்லுகிறவர்களுக்குள்ளேயே அடிதடி...வீரமணிக்கும் கொளத்தூர் மணிக்கும் சண்டை" என்றெல்லாம் ஆக்ரோஷித்தார். இந்நிலையில் பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த கருஞ்சட்டை வீரர்களில் ஒருவர் கையைத்தூக்கி உரத்த குரலில் ஆட்சேபம் எழுப்பினார். ஆனால் அதை அலட்சியம் செய்த ஆப்தீன் பின்னால் உங்களுக்கு வாய்ப்பளிக்கிறேன் என்று தொடர்ந்தார். தொடர்ந்து குரானில் 1400 வருடங்களுக்கு முன்னரே பூமி உருண்டை, பூமி சுழல்கிறது, சூரியனை சுற்றுகிறது என்பது முதல் மருத்துவம் வரை பல இன்றைய கண்டுபிடிப்புகள் கூட உள்ளன எனக் கூறினார். அந்த கருஞ்சட்டை வீரரின் வீரத்தை கண்டு வியந்து போன காஃபீர் நீலகண்டன் "இவரன்றோ தைரியசாலி" என எண்ணி அந்தகருஞ்சட்டை வீரரை அணுகி "ஐயா எனக்கு எண் 314. எனவே என் முறை வர வாய்ப்பில்லை. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கையில் அவர் கூறியுள்ள அபத்தங்களையும் சேர்த்து விளாசுங்கள். டார்வீனிய பரிணாம அறிவியல்..." என்று தொடங்க அந்த கருஞ்சட்டை வீரர் அப்படியே கையை உயர்த்தி " நமக்கு அவர் சொல்ற மத்த விசயங்களப் பத்தி கவலையில்லீங்க...ஆனா தந்தை பெரியார் பத்தி அவரு ஒண்ணும் மோசமா சொல்லப்படாது அவ்வளவுதான்...அறிவியலெல்லாம் நமக்கு தெரியாதுங்க." என்று கூறினார். அரவிந்தன் நீலகண்டன் முகத்தை தொங்கப்போட்டபடி உடைந்த மூக்கை துடைத்துக் கொண்டு அவனது இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டான்.


இக்கதையை கூறிய வேதாளம், " மன்னனே முதலில் கருஞ்சட்டை வீரரிடம் சென்று எதற்கு அரவிந்தன் நீலகண்டன் உளறினான் பிறகு ஏன் மௌனமாக வந்து அமர்ந்தான்? இதற்கான பதிலை நீ தெரிந்திருந்தும் கூறாவிட்டால் உனது தலையை சுக்கு நூறாக சிதறவைப்பேன்" என்று கூறியது. விக்கிரமாதித்தனும், "காஃபீரும் ஏக இறைவன் மீது நம்பிக்கையும், அவரது ஒரே தீர்க்கதரிசியின் மீது எள்ளளவும் மரியாதையற்றவனுமான அரவிந்தன் நீலகண்டன், கருஞ்சட்டை வீரர் கையை உயர்த்தியதும் அவர் பகுத்தறிவுக்காக குரல் கொடுப்பவர் என கருதினான். எனவே ஜைனூல் ஆப்தீன் குரானில் இருக்கும் அறிவியல் குறித்து அபத்தமாக உளறியதாக அவனுக்கு பட்டதும், அவன் அந்த கருஞ்சட்டை வீரர் இன்னமும் ஆத்திரம் அடைவார் எனவே அவருக்கு துணையாக தானும் குரல் கொடுக்கலாம் எனக் கருதி அவரிடம் சென்று பேசினான். பகுத்தறிவின் சின்னமாக தான் நினைக்கும் ஈவெராவை விமர்சித்ததற்கே இத்தனை ஆத்திரம் வருபவருக்கு, பகுத்தறிவின் சர்வதேச சின்னமாக திகழும் பரிணாம அறிவியலுக்கு எதிராக பேசினால் எத்தனை ஆத்திரம் வரும் அத்தகைய மனிதருடன் தானும் இணைவது இச்சூழலில் சரி என அவன் கருதினான். எனவேதான் ராமஜென்மபூமி குறித்து அவர் கூறியபோது கூட இருக்கையில் இருந்து அசையாத அவன், அந்த கருஞ்சட்டை வீரரிடம் இது குறித்து சென்றான். ஆனால் கருஞ்சட்டை வீரர் அப்படி ஒன்றும் பகுத்தறிவு பைத்தியமல்ல. அவர் ஈவெரா மீது ஈமான் கொண்டவர். எனவே பகுத்தறிவு, அறிவியல் பார்வை போன்றவை எக்கேடு கெட்டாலும் ஈவெரா சிலை ஒழுங்காக பராமரிக்கப்பட்டால் போதும் எனும் எண்ணம் கொண்டவர். ஈவெராவின் திராவிட இயக்கத்துக்கும் பகுத்தறிவுக்கும் இருக்கும் தொடர்பைக்காட்டிலும் ஈவெரா மார்க்கத்தினருக்கும் ரசிகர் மன்ற மனப்பான்மைக்குமே ஒற்றுமை அதிகம் என்பதை அறியாத முட்டாள் காஃபீரான அரவிந்தன் நீலகண்டன் அத்தருணத்தில் அதை உணர்ந்ததால் அவனது இருக்கையில் மரியாதையாக மௌனமாக வந்து அமர்ந்து கொண்டான்." என்று கூறினான். விக்கிரமாதித்தனின் சரியான இந்த பதிலால் அவனது மௌனம் கலையவே வேதாளம் அவன் சுமந்து வந்த உடலோடு உயரக் கிளம்பி மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டது.


-மண்ணாந்தை
[கதையமைப்புக்கு நன்றி: அம்புலிமாமா]
நன்றி: திண்ணை.காம் ஆகஸ்ட் 11 2005

5 Comments:

Anonymous Anonymous said...

பாப்பார நாயே
இன்னாத்துக்கு இது? சிண்டு முடிச்சுவிடுறியா மவனே போட்டுத்தள்ளப்போறோம் பாத்துக்க
எங்களுக்குள்ள ஆயிரம் இருக்கும் நீ யார்ர்ரா பாப்பாரக்குடுமி கைபர் போலன் வழியா வந்தேறியா வந்தவனுக்கு சோப் போடுற நாயி நீயா பேசுற தந்தை பெரியார் பத்தி.
ஒழுங்கா ஊத்தி மூடிட்டு போடா நாயே

9:40 PM, August 30, 2005  
Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

9:32 AM, August 31, 2005  
Anonymous Anonymous said...

babar masuthi vidyamaaha avarudaya uraikku unnudaiya bathil enna.
summa kathaikka kuudaathu aatharaththudan vilakam theevai.

2:51 AM, September 06, 2005  
Anonymous Anonymous said...

நல்ல பதிவு தொடருங்கள்....

6:52 AM, September 06, 2005  
Anonymous Anonymous said...

Great posting Aravindan.I request you to edit the abusive posts here.Let this blog be only for decent people.

10:45 AM, September 07, 2005  

Post a Comment

<< Home