Monday, October 01, 2007

இராமர் பாலமும் எனது நிலைபாடும்

சகோதரர் சிறில் அலெக்ஸ் ஒரு வினாவை எழுப்பியிருந்தார்:
Why sudden affection toward Ram Sethu? I remember you had another blog earlier saying believing in Ram Sethu as real bridge built by Ram was against Hindu principles. I remember arguing with you about how Historical references to Gods are taken seriously in religion.
எனது நிலைபாடு இது குறித்து என்ன என்பதனை விளக்கிவிடுகிறேன்.

1. தொடக்கம் முதலே இராமர் பாலம் கட்டியதற்கு நாஸா ஆதாரம் இருக்கிறது என்பதையும் சரி அல்லது 175000 ஆண்டுகளுக்கு முன்னரே இராமர் அதனைக் கட்டினார் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது என்பதற்கு ஆதாரம் இருக்கிறது என்பதையும் சரி நான் எதிர்க்கிறேன். இதனை தொடர்ந்து எதிர்த்து வருகிறேன். தயவு செய்து சிறில் எனது கட்டுரையை மீண்டும் படிக்க வேண்டும். அதில் பிபி லால் எனும் அகழ்வாராய்ச்சியாளரைக் குறிப்பிட்டுள்ளேன். அவரது ஆராய்ச்சி முடிவின் படி ஸ்ரீ இராமரின் காலம் கிமு 700 என கருதுகிறார். (சில ஆராய்ச்சியாளர்கள் அதற்கும் முன்னரே இராமர் வாழ்ந்ததற்கு அகச்சான்றுகளை தருகின்றனர். ஆனால் அகச்சான்றுகள் புறச்சான்றுகளுடன் ஒருங்கிணணயும் போது மட்டுமே ஓரளவு உண்மைக்கு அருகாமையில் வரும் வரலாற்றறிவியல் ஊகங்களை முன் வைக்கமுடியும்.) ஆக, பிபிலாலை குறிப்பிடுவதே 175000 ஆண்டுகளுக்கு முற்பட்டு கட்டப்பட்டதாக கருதப்படும் மடத்தனத்தை எதிர்ப்பதாகும்.
2. தொடக்கத்தில் இருந்தே இராமர் பாலத்தின் புனிதத்தன்மையை நான் கேள்விக்கு உள்ளாக்கவில்லை என்பதுடன் அதனை ஏற்றிருக்கிறேன். உதாரணமாக நீங்கள் (சிறில் அலெக்ஸ்) குறிப்பிடும் வலைப்பதிவிலேயே உள்ள வார்த்தைகளைப் பாருங்கள்:
"இவை எல்லாமே எவ்வளவு அழகாக ஒரு காவியம் நம் தேசத்தின் மக்களின் உணர்வுகளோடும் நம் தேச மண்ணிலும் இரண்டற கலந்துள்ளது என்பதனைக் காட்டுகிறது. ஆனால் நாசா புகைப்படத்தை '1,750,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாலத்திற்கான ஆதாரமாக காணுவது ' அப்புகைப்படத்தின் அழகையும் இராம காதை நம்முள் இரண்டற கலந்தியங்கும் தளத்தையும் கொச்சைபடுத்துவதாகும்.
இதனை இப்படி விளக்க முற்படுகிறேன். இஸ்ரேலின் சாவுக்கடலை நோக்கியபடி ஒரு நெடிதுயர்ந்த உப்புப்பாறை பெண்ணின் தோற்றத்துடன் காணப்படுகிறது. நிச்சயமாக இயற்கையான உருவாக்கம்தான். ஆனால் ஆபிரகாமிய மதநம்பிக்கைகளின் படி அது இறைதூதராக நம்பப்படும் லாத்து என்பவரின் மனைவி உப்பாக உறைந்த பாறை என கருதப்படுகிறது. அதன் அருகில் உள்ள குகையில் லாத்து தன் புதல்விகளுடன் தங்கினார் என நம்பப்படுகிறது. அங்கு ஒரு மடாலயம் உள்ளது. அங்கு கிறிஸ்தவ யாத்திரீகர்கள் வருகிறார்கள். இப்பாறை இயற்கையானது என நிலவியலாளர்கள் கூறினாலும் கூட அதனை ஒரு நெடுஞ்சாலை திட்டத்துக்காக உடைக்க ஜோர்டானிய அரசோ இஸ்ரேலிய அரசோ முன்வருமா? அப்படி முன்வந்தால் அது எத்தகைய எதிர்வினைகளை ஏற்படுத்தும்? பாரதத்தை பொறுத்தவரையில் இத்தகைய புனித நிலவியல் (sacred geography) தேச ஒருமைப்பாட்டுக்கும் பயன்படுகிறது. ராமர் சேது பாரதம் எங்கும் பரவிவிட்ட அத்தகைய சின்னங்களில் ஒன்று. இராமாயணத்தின் வரலாற்றுத்தன்மையை குறித்து கவலைக் கொள்ளாத அதன் அகத்தன்மையையே முன் நிறுத்திய மகாத்மா காந்தி எனவேதான் சேதுபந்தனத்தை தேசிய ஒற்றுமையின் சின்னமாக தனது ஹிந்த் சுவராஜ்ஜியம் நூலில் எழுதினார்.
3. இன்று வரையிலான என் எழுத்துக்களில் இந்த இரண்டு அம்சத்தையும் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியே வந்துள்ளேன். கீழே உள்ள என் எழுத்துக்களை பாருங்கள், நான் சொல்வது விளங்கும்.

  • திண்ணை: 2002 இல் நான் எழுதியது:
    நாசா புகைப்படத் தொகுப்பு அட்டவணையை http://images.jsc.nasa.gov/iams/photos/2002/10/earth/STS006/lowres/ என்னும் இணைய முகவரியில் காணலாம். ஆடம்ஸ் பிரிட்ஜ் என காலனியாளர்களாலும், 'இராமனின் பாலம் ' என நம் நாட்டவராலும் கூறப்படும் பவள படிம தீவுக் கூட்டங்களின் அழகிய புகைப்படங்கள் இங்கு உள்ளன. திருமறைக்காடு என்னும் வேதாரண்ய கடற்கரையில் பல 'ஸ்ரீ ராமர் பாத ' சிறு கோவில்களை காணலாம். இவை எல்லாமே எவ்வளவு அழகாக ஒரு காவியம் நம் தேசத்தின் மக்களின் உணர்வுகளோடும் நம் தேச மண்ணிலும் இரண்டற கலந்துள்ளது என்பதனைக் காட்டுகிறது. ஆனால் நாசா புகைப்படத்தை '1,750,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்களால் உருவாக்கப்பட்ட பாலத்திற்கான ஆதாரமாக காணுவது ' அப்புகைப்படத்தின் அழகையும் இராம காதை நம்முள் இரண்டற கலந்தியங்கும் தளத்தையும் கொச்சைபடுத்துவதாகும்.

  • பிப்ரவரி 2007 இல் 'இராமர் பாலம் - நாஸா ஆதாரம்' கண்டித்து நான் எழுதிய (அதாவது நீங்கள் குறிப்பிட்டுள்ள வலைப்பதிவில்)வலைப்பதிவில் நான் எழுதிய கமெண்ட்:
    அந்த இயற்கை அமைப்பு இடிபடக்கூடாது என்பதில் நானும் அக்கறை காட்டுகிறேன். அதனை இராமர் பாலம் என அழைக்கும் பாரம்பரியத்தையும் நான் மதிக்கிறேன். ஆனால் அகழ்வாராய்ச்சி, கார்பன் டேட்டிங், நாஸா என்றெல்லாம் கூறி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் தாழ்வு மனப்பான்மையை, வக்கிரத்தைதான் கண்டிக்கிறேன். இந்த அமைப்பு பல இலட்சம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியால் உருவானது. அதன் உயிரி வளமையும் அபரிமிதமானது. வர்த்தக இலாபங்களுக்காக அது அழிக்கப்படுவது மானுடகுலத்துக்கே பெருநட்டம்.

  • அதே பதிவின் கமெண்டில் நியோ எனும் நண்பருக்கு நான் அளித்த பதிலில் இராமர் பால அமைப்பின் சூழலியல்/உயிரிப்பன்மை தன்மையயயும் நான் குறிப்பிட்டிருந்தேன்.
    நியோ அக்கட்டுரையை படித்தேன். சுட்டிக்கு நன்றி. ஆனால் இன்றைய தேதியில் அங்கிருக்கும் உயிரிப்பன்மைக்குறித்து அங்கு வாழும் உயிரி இனங்கள் குறித்து அப்பகுதிக்கே உரித்தான அரிய இனங்கள் குறித்து ஏதேனும் தரவுகள் நமக்கு உண்டா? இல்லை என்றே நினைக்கிறேன். இதோ என் முன்னால் 688 பக்கங்கள் கொண்ட 'Flora of the Gulf of Mannar' கிடக்கிறது. Botanical survey of India வினால் 2001 இல் வெளியிடப்பட்டது. பவள அமைப்புகள் குலைக்கப்படுவது (இது சேதுசமுத்திர திட்டம் போல பெருமளவு அழிவல்ல...அத்துடன் ஒப்பிடுகையில் வெகு சாதாரணமானதுதான் என்பதனை கவனியுங்கள்) குறித்து அது என்ன சொல்கிறதென்றால், " பவள அமைப்புகளை க்வாரி செய்வது தடைப்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் கூட அந்த சட்டவிரோத காரியம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. 250 க்யூபிக் மீட்டர் அளவு பவளப்பாறைகள் கூட நாளைக்கு நீக்கப்படுகின்றன. இது கடற்கரையோர நீர் சுழற்சிதன்மைகளை மாற்றிவிடும். இவற்றின் அழிவு கரைப்புற மணல் அரிப்பையும் அதிகப்படுத்தும்." படங்களுடன் கடல் அரிப்பின் தன்மையை இதுவிளக்குகிறது. தூக்கம் கண்ணைக்கட்டுவதாலும் இது தனிப்பதிவாக போடுதற்கு உரியது என்பதாலும் பின்னர் விரிவாக எழுதுகிறேன். தென்கிழக்கு ஆசியாவின் முதல் நீரிலமையும் உயிரிக்கோள காப்புமண்டலம் இப்பகுதியே என்பதனை கருத்தில் கொள்ளுங்கள். இதன் உயிரிபன்மையினை அறிவது குறித்தோ காப்பாற்றுவது குறித்தோ எவ்வித ஆர்வமும் இல்லை. டயர்களை போடலாம் இத்யாதி ...போடமாட்டார்கள் என்பது வேறுவிசயம்...ஆனால் அகழ்ந்தழிக்கப்படும் பன்னெடும் இலட்சக்கணக்கான ஆண்டு பவள அமைப்புகள் அழிவின் முன்னால் டயர்களை போட்டு -அதுவும் சேதாரமான பயன்படாத டயர்கள்தாம்-அல்லது பவளப்பாறைகள் மீண்டும் எழும் என்கிற வாதம். எழும்தான். ஆனால் பெட்ரோலும் டீசலும் இன்ன்பிற மாற்றங்களும் பெற்ற கடலின் தன்மைக்கு தகவமைந்து எழும். அதற்கும் அழிக்கப்பட்ட தொல்நெடுங்கால பரிணாம வரலாற்றெச்சங்களை தாங்கி நிற்கும் பவளப்பாறைகளை நாம் அலட்சியமாக அழித்தொழிக்க போவதற்குமான வேறுபாடு எத்தகையது என்பதனை நான் சொல்லித்தான் நீங்கள் உணரவேண்டுமென்பதில்லை.

மேலும் அண்மையில் எழுதிய கட்டுரைகளில் கருணாநிதியின் அறிவற்ற வாதத்தையும், ஏதோ இராமருக்கு தென்னிந்தியாவில் மதிப்பே இல்லை என்கிற ரீதியாக போலி அறிவாளிகள் வடக்கிலும் ஊடகங்களிலும் விடும் கதையையும் கடுமையாக மறுத்திருக்கிறேன். புறநானூறு, அகநானூறு ஆகியவற்றிலும் சரி சிலப்பதிகாரத்திலும் சரி ஸ்ரீ இராமன் அரக்கர்களை அழித்தது குறித்தும் அவர் இராமேஸ்வரம் வந்தது குறித்தும் கூறப்படுவதையும் அவற்றில் இராமரின் அவதாரத்தன்மை சுட்டிக்க்காட்டப்படுவதையும், அய்யா வைகுண்டர் தம்மை இராமர் கிருஷ்ணர் ஆகிய அவதாரங்களின் வழியிலேயே வந்த அவதார புருஷன் எனக் கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளேன். இதிலும் கூட இராமர் பாலத்தை ஏதோ 150 மில்லியன் அல்லது 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது என கூறி அதற்கு அறிவியல் சான்றாதாரம் தேடும் முயற்சியை கண்டித்துள்ளேன். உதாரணமாக இது United Press International அமைப்புக்கான ஆசிய பதிப்பில் இரண்டு வாரங்கள் முன்னர் வெளிவந்துள்ள என் கட்டுரையிலிருந்து:

Some Eric von Daniken-type Western Vaishnavite devotees who sought NASA certification for the fundamentalist understanding of Hindu epics and mythologies, and a group of Hindu nationalists who happily swallowed this bamboozlement, repeating it and fitting themselves with glee into the stereotype that their ideological opponents offered them -- they all, albeit unwittingly, paved the way for the "insult" that Sri Rama and the Hindus face today.
முழுக்கட்டுரையையும் காண இந்த உரலில் சொடுக்கவும்: Bridge that never was and ever is
இதே வலைப்பதிவில் வரலாற்றறிஞர் ரொமிலா தப்பாரின் சில கருத்துகளை எதிர்த்து இது விசயமாக எழுதியுள்ள கட்டுரையிலும் மீண்டும் இக்கருத்தை வலியுறுத்தி உள்ளேன்:
That said one cannot but agree with Prof. Thapar when she states that a search for a non-existent man-made structure takes away from the imaginative leap of a fantasy and denies the fascinating layering of folk-lore. While rejecting the literalists, one is at a loss to understand why Prof. Romila Thapar fails to see the cultural dimension of the natural formation that inspired the imaginative leap of not just fantasy but also devotional literature of a nation and the fascinating layering of the same by folk-lore and transforming it into one of the centres of national integration as acknowledged by none other than Mahatma Gandhi in his ‘Hind Swaraj’. In India, the whole national integration has been achieved through immersing the nation in such sacred geographic features associated with epic narrative, mythology, devotional literature and folklore.


ஆக, என் நிலைப்பாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளாக எவ்வித மாற்றமும் இல்லை. காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

6 Comments:

Anonymous Anonymous said...

அரவிந்தன்,

தங்களுடைய இரு கட்டுரைகளும் வேறுபட்ட காலத்தில் வெளிவந்ததால், தங்களுடைய வாசகர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்.

இக்குழப்பத்தைத் தீர்த்துவைக்கும் வகையில் இக்கட்டுரையை வெளியிட்டதற்கு மிக்க நன்றி.

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்.

11:50 PM, October 01, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

புரிதலுக்கு நன்றி பனித்துளி. உங்களுக்கும் காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்.

1:09 AM, October 02, 2007  
Blogger சிறில் அலெக்ஸ் said...

நண்பரின் விளக்கங்களுக்கு நன்றி.

முதலில் உங்களால் இந்த விஷயத்தில் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு எனப் பேச இயலவில்லை என்றே நினைக்கிறேன்.

நீங்கள் சொல்வது போன்ற இயற்கை அமைப்புகளின் கலாச்சார முக்கியத்திவம்தான் இராமர் கதைக்கும் தரப்பட வேண்டுமென்றால் கலைஞர் சொன்னதில் தவறில்லையென்றே ஆகிவிடுகிறது. இராமருக்கு வரலாற்று ஆதாரமில்லை மாறாக அவர் 'கலாச்சார' வெளிப்பாடு என்றே ஆகிவிடுகிறது.

என்னால் இதையே முடிவாக ஏற்க இயல்கிறது...
இராமர் பாலம் இராமரால் கட்டப்படவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறீர்கள்.

இராமர் பாலம் இராமரால் கட்டப்பட்டதே என மக்கள் நம்புவதில் தவறில்லை என்கிறீர்கள்.

என் நிலையும் இதுவாகத்தானிருக்கும் என நினைக்கிறேன்.

6:44 AM, October 02, 2007  
Anonymous Anonymous said...

அரவிந்தன்

உங்கள் நிலைப்பாடு இறுதியானதாக இருக்கக் கூடாது. நாளைக்கு ஒரு உண்மையான அறிவியல் அமைப்பு இது ராமர் கட்டிய பாலம் என்றோ, மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றோ, இது மனிதர்களால் கட்டப் பட்டதென்றோ நிறுவக் கூடுமானால், அப்பொழுது உங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள நேரிடும் என்று நினைக்கிறேன். சோ ராமசாமி அப்படி ஒரு ஆராய்ச்சி பூர்வமான ஆதாரம் கிட்டியதால் தன்னுடைய முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளதாகக் கூறுகிறார், அதை நாமும் படித்துப் பார்க்க வேண்டும்

அன்புடன்
ச.திருமலை

10:01 AM, October 02, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

//நீங்கள் சொல்வது போன்ற இயற்கை அமைப்புகளின் கலாச்சார முக்கியத்திவம்தான் இராமர் கதைக்கும் தரப்பட வேண்டுமென்றால் கலைஞர் சொன்னதில் தவறில்லையென்றே ஆகிவிடுகிறது. இராமருக்கு வரலாற்று ஆதாரமில்லை மாறாக அவர் 'கலாச்சார' வெளிப்பாடு என்றே ஆகிவிடுகிறது.//

இராமாயணத்தை பொறுத்தவரையில் இராமாயண அகழ்வாராய்ச்சி ப்ராஜெக்ட் ரிப்போர்ட் தெளிவாக இருக்கிறது. அது ராமாயணத்துக்கு வரலாற்று அடிப்படை இருப்பதை தெள்ளத்தெளிவாக கூறுகிறது. இராமர் பாலம் என்பது வரலாற்றிலிருந்து புராணதளத்திற்கு சென்று கலாச்சார வெளிப்பாடாக மாறிநிற்கும் தேசிய சின்னமாக பரிணமித்திருக்கிறது. கருணாநிதியின் உளறலை - மன்னிக்கவும் - கருத்தை பொறுத்தவரை ஒரு பக்கம் இராமர் கற்பனை என்று சொல்லிவிட்டு மறுபுறம் இராவணன் திராவிடன் என்கிற மடத்தனமும் பகுத்தறிவற்றத்தன்மையும் தான் வெளிப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை என் நிலைப்பாடு தெளிவானது:
அ) இராமாயணத்துக்கு வரலாற்று அடிப்படை உண்டா?
ஆம்
ஆ) இராமர் பாலம் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இராமரின் நினைவுடன் தொடர்புபடுத்தப்பட்ட ஒரு புனித தேசிய கலாச்சார சின்னமா?
ஆம்.
இ) அதனை இராமர் கட்டியதற்கான ஆதாரங்கள் உண்டா?
இல்லை. ஆனால் தேசிய நினைவிலும் பண்பாட்டிலும் அது ஒரு கலாச்சார சின்னமாக பரிணமித்துள்ளது. எனவே அது பாதுகாக்கப்பட வேண்டியது.

2:59 AM, October 03, 2007  
Blogger Swami Vedanishthananda Saraswati said...

'THE HDDEN HORRISONS' OF DAVID FRAWLEY PUBLISHED BY SWAMI NARAYAN SAMPRADAYA, GUARAT HAVE SOMETHING TO TELL ABOUT THESE GEO&ARCHEOLOGICAL REPORTS. GIVES A GOOD INSIGHT.

10:11 AM, November 16, 2007  

Post a Comment

<< Home