Friday, October 05, 2007

ராட்சத கோமானு(ளி)க்கு எச்சரிக்கை:கார்ட்டூன்



அன்புள்ள வேத தருமக்காரர்களே அன்பு வழி நடக்கும் சான்றோரே, கீழே காணப்படும் அய்யா வைகுண்டரின் அருள் மொழி எந்த அரசியல்வாதியையும் குறிப்பிட்டு சொன்னதல்ல. ஆனால் இராவண அரக்க புத்தியுடன் அரசாளும் எந்த அதிகார வெறி பிடித்து ரவுடித்தனம் செய்தலைந்து இராமரையும் இராம பக்தர்களையும் அவமானப்படுத்துகிற எவரும் எத்தகைய நிலையை அடைவார்கள் என தெள்ளத்தெளிவாக கூறுகிறார் அய்யா வைகுண்டர். அத்தகைய கேடு கெட்ட நிலையை அடையாமல் சிலருக்கு நல்ல புத்தி கிடைக்க பிரார்த்திப்போம். ஆனால் ராம பக்தர்களை தாக்க துணியும் கீழ்த்தரங்களுக்கு நல்ல புத்தி ஏறாவிட்டால், நாடு நலம் பெற அவர்கள் கீழ் கண்டவாறு அழிய கைலயங்கிரி வாழ் ருத்ர மகாதேவனை கீழ் கண்டவாறு பிரார்த்திப்போம்.
இராம பக்தரை அவமதிக்கும் அதிகார ஆணவம் பிடித்த அரக்கனுக்கு அய்யா வைகுண்டர் அகிலத்திரட்டில் அளித்துள்ள சாபம்:
இராம பாணத்தோடே இராமர் தசரதற்கு
முன் ஆகமத்தின் படி உலகில் உதித்திடவும்
பாணமது தன்னாலும் பத்தினி தன் கற்பாலும்
நாணமது கெட்ட அரக்கா உன் நல்ல பத்து தலை இழந்து
சேனைத்தளம் இழந்து சிரசு இழந்து வாழ்விழந்து
வானரங்கள் வந்து உன்றன் வையகத்தை சுட்டழித்து
உன் சடலம் எல்லாம் உழுத்து புழுபுழுத்து
சஞ்சலப்பட்டு சண்டாளா நீ மடிய
வேண்டுவேன் தவசு விமலன் தனை நோக்கி
[அகிலத்திரட்டு: 1177-86]
தினமும் இதனை ஒரு முறை கூறி இறைவனை வேண்டவும். அத்துடன் கொடிய ஆட்சிகள் நாட்டில் ஏற்படாமல் இருக்க இதனை துண்டு பிரசுரங்களாகவும் விரும்புவோர் வெளியிடலாம்.

Labels:

9 Comments:

Blogger ஜயராமன் said...

உங்களுக்கு கார்ட்டூன்கூட தெரியுமா? அபாரமாக வந்திருக்கிறது.

ஒட்டு வேலை டாப்..

இந்து மத நல்லிணக்கம் என்ற தாய் சீதையை தமிழகம் என்ற இலங்கையில் பதுக்கி தினம் விஷம் கக்கி தன் சொந்த லாபத்துக்காக இராவணன் போல் தன் ஊரையே நெருப்புக்கு இறையாகும் இந்த கோமாளி.

ஆனால், காலம் மாறிவிட்டது. பிள்ளையாருக்கு செருப்பு போட்ட காலம் போய் விட்டது. இப்போது முட்டாள் வார்த்தைகளுக்கு பதில் உடனே கிடைக்கிறது.

விஜயகாந்த் சொன்னபடி இவரின் புறநானூற்று வீரம் (உண்ணாவிரத மேடையிலிருந்து) புறமுதுகிட்டு ஓடிய வேகத்தில் தெரிந்தது. நாற்காலிக்கு ஆபத்து என்றால் தள்ளாத வயதிலும் ஓட்டமாய் ஓடுகிறார்.

இறைவன் இந்த கொடிய முதியவருக்கு நல்ல புத்தியையும் ஆயுளையும் கொடுக்கட்டும்.

நன்றி

1:48 AM, October 05, 2007  
Anonymous Anonymous said...

athu thirunthaatha kootam

2:25 AM, October 05, 2007  
Anonymous Anonymous said...

உங்களை தாசரதீ காக்கட்டும்...ஏனய்யா இப்படியெல்லாம் எழுதுறீர்?.

இந்துமதத்தை இப்படியெல்லாம் காக்க வேண்டுமென்ற கட்டாயம் ஏதுமில்லை. ஆர்.எஸ்.எஸ் வரும் முன்பும் இந்துமதம் இருந்திருக்கிறது....நீங்க பிறக்கும் முன்பை விட இன்று தமிழகத்தில் தனிமனித பக்தி நன்றாகவே உள்ளது....

இப்படி எசலி கட்டிக்கொண்டு சண்டையிட வேண்டியதில்லை....சாக்கடையில் கல் எறியாதீர்கள்...உங்கள் மிதுதான் தெரிக்கும்.

3:01 AM, October 05, 2007  
Anonymous Anonymous said...

அரவிந்தன்,

இப்படி சொல்லுவதற்கு மன்னிக்கவும்.

"வருத்தமாக இருக்கிறது.

ராவணனை அவமதித்துவிட்டீர்கள்."

ஆனா, தலைவரே, கார்டூன் சூப்பரோ சூப்பர்.

4:25 AM, October 05, 2007  
Blogger எஸ்.கே said...

அனானியாக வந்தவரே,

தற்போது சாக்கடையின் உள்ளிறங்கி சுத்தம் செய்யவேண்டிய கட்டம் வந்துவிட்டது.

யாராவது ஒருவர் ஃபினாயில் பாட்டிலோடு கால் வைக்கத்தானே வேண்டும்!

அத்தகைய உன்னதப் பணியை மேற்கொண்டோருக்கு நம்மாலான உதவிகளைச் செய்வோம்!

எஸ்.கே

6:13 AM, October 05, 2007  
Anonymous Anonymous said...

எஸ்கே,

உங்களுடைய பின்னூட்டத்தைப் படிப்பவர்கள், சாக்கடை என்பது ஏதோ தெருவின் ஓரங்களில் தக்கணூண்டாய் ஓடிக்கொண்டிருப்பதுபோலவும், அதில் அரவிந்தன் போன்ற சுரணையுள்ளவர்கள் சுத்தம் செய்ய இறங்கியிருப்பதாகவும் அர்த்தம் செய்துகொள்ளப் போகிறார்கள்.

உண்மையில் மதவெறியர்களாலும் (வேறு யார்? நம்ம இஸ்லாமிய கிருத்துவ சகோதர, சகோதரிய, அத்தை, மாமா, சித்தப்பா மார்கள்தான்), கொள்கைவெறியர்களாலும் (கம்யூனிஸ்ட்டுகள்), அவர்களை நம்பி பிழைப்பு நடத்துகிற திராவிட பணம் மற்றும் ஓட்டுப் பொறுக்கிகளால் இந்தியா முழுவதும் சாக்கடைதான் உள்ளது.

அரவிந்தன் போன்றவர்கள் நாம் எல்லாம் இருப்பது இந்த சாக்கடையில்தான் என்று சொல்லுகிறார்கள். "ரொம்ப நல்லவன்ன்னு சொல்லுவாய்ங்க்ய" என்று எதிர்பார்த்து மூக்கையும், கண்களையும் மூடிக்கொண்டு இருப்பவர்களும், இது சாக்கடையல்ல சந்தனம் என்று சாக்கடையை அள்ளி குடிப்பவர்களும்தான் அதிகம் இருக்கிறார்கள்.

சாக்கடையின் பலத்தை பார்த்தால் இப்போது இவற்றை எதிர்த்து நடக்கும் முயற்சிகள், சாக்கடையில் நாம் இருந்தாலும் நம் துணி அழுக்காகிவிடக்கூடாது என்று தலைக்கு மேலே துணியை தூக்கிப்பிடித்துக்கொண்டு நிற்கும் முயற்சியாகவே தோன்றுகிறது.

இதனால்தான் மானமில்லாமல் அம்மணமாய் நிற்கிறாய் என்று சொல்லுகிற சாக்கடை உறுத்தல் இல்லாதவர்களின் ஏளனத்தையும் கேட்டுக்கொள்ளவேண்டியதாயிருக்கிறது.

அவர்களுக்கு அம்மணம் உறுத்துகிற அளவு சாக்கடை உறுத்தவில்லை. இந்துத்துவவாதிகளுக்கு சாக்கடை உறுத்தலில் அம்மணமாயிருப்பதைத் தவிர வேறு வழியுமில்லை.

பறந்து வரும் எதிர்கால சமுதாயம் எதேனும் உயரப்பிடித்து காப்பாற்றப்படும் இந்தத் துணிகளை எடுத்துச்செல்லும் என்கிற நம்பிக்கையில் சகல அவமானங்களூம் சகிப்புக்கு உள்ளாகிவிட்டது.

6:58 AM, October 05, 2007  
Blogger அரவிந்தன் நீலகண்டன் said...

அவமானங்களை பொறுத்துக்கொள்ளலாம் என்றால் அது விஷ பிரச்சாரமாக இனவெறியாக அல்லவா உருவெடுத்து ஆட்டம் போடுகிறது. தமிழ்பண்பாட்டு அறிவிலிகள் போடும் ஆட்டமல்லவா தமிழ் பண்பாடு என அரங்கேறுகிறது. எஸ்.கே சார், பனித்துளி சார் புரிதலுக்கு நன்றி. ஜயராமன் சார் பாராட்டுக்கு நன்றி. ஆம். ஒரிஜினல் இராவணன், ஆபாச கதை எழுதி பிழைப்பு நடத்துகிற இந்த கருணாநிதியை விட நல்லவன் என்ற முறையில் இராவணனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

7:11 AM, October 05, 2007  
Anonymous Anonymous said...

Very nice cartoon....I just wish if the great Kannadhasan was alive now and seeing this karunanithi, what could have he said?

10:53 PM, October 05, 2007  
Anonymous Anonymous said...

அன்பு அரவிந்தன்,
மிக நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
இப்படிக்கு,
ஜெனி.

2:06 PM, October 15, 2007  

Post a Comment

<< Home