ராட்சத கோமானு(ளி)க்கு எச்சரிக்கை:கார்ட்டூன்

அன்புள்ள வேத தருமக்காரர்களே அன்பு வழி நடக்கும் சான்றோரே, கீழே காணப்படும் அய்யா வைகுண்டரின் அருள் மொழி எந்த அரசியல்வாதியையும் குறிப்பிட்டு சொன்னதல்ல. ஆனால் இராவண அரக்க புத்தியுடன் அரசாளும் எந்த அதிகார வெறி பிடித்து ரவுடித்தனம் செய்தலைந்து இராமரையும் இராம பக்தர்களையும் அவமானப்படுத்துகிற எவரும் எத்தகைய நிலையை அடைவார்கள் என தெள்ளத்தெளிவாக கூறுகிறார் அய்யா வைகுண்டர். அத்தகைய கேடு கெட்ட நிலையை அடையாமல் சிலருக்கு நல்ல புத்தி கிடைக்க பிரார்த்திப்போம். ஆனால் ராம பக்தர்களை தாக்க துணியும் கீழ்த்தரங்களுக்கு நல்ல புத்தி ஏறாவிட்டால், நாடு நலம் பெற அவர்கள் கீழ் கண்டவாறு அழிய கைலயங்கிரி வாழ் ருத்ர மகாதேவனை கீழ் கண்டவாறு பிரார்த்திப்போம்.
இராம பக்தரை அவமதிக்கும் அதிகார ஆணவம் பிடித்த அரக்கனுக்கு அய்யா வைகுண்டர் அகிலத்திரட்டில் அளித்துள்ள சாபம்:
இராம பாணத்தோடே இராமர் தசரதற்கு[அகிலத்திரட்டு: 1177-86]
முன் ஆகமத்தின் படி உலகில் உதித்திடவும்
பாணமது தன்னாலும் பத்தினி தன் கற்பாலும்
நாணமது கெட்ட அரக்கா உன் நல்ல பத்து தலை இழந்து
சேனைத்தளம் இழந்து சிரசு இழந்து வாழ்விழந்து
வானரங்கள் வந்து உன்றன் வையகத்தை சுட்டழித்து
உன் சடலம் எல்லாம் உழுத்து புழுபுழுத்து
சஞ்சலப்பட்டு சண்டாளா நீ மடிய
வேண்டுவேன் தவசு விமலன் தனை நோக்கி
தினமும் இதனை ஒரு முறை கூறி இறைவனை வேண்டவும். அத்துடன் கொடிய ஆட்சிகள் நாட்டில் ஏற்படாமல் இருக்க இதனை துண்டு பிரசுரங்களாகவும் விரும்புவோர் வெளியிடலாம்.

