Friday, January 18, 2008

குழந்தைகளுக்கான இறைமறுப்பு திரைப்படம்

ஹாரி பாட்டரை கிறிஸ்தவ அடிப்படைவாத திரையுலகம் சி.எஸ்.லூயிஸின் நார்னியா கதைகள் மூலம் எதிர்கொண்டது. இப்போது இறை மறுப்பு கோட்பாடு அதீதகற்பனை கதையாக உருவெடுத்துள்ளது. பிலிப் புல்மானால் உருவாக்கப்பட்ட இந்த அதீதகற்பனை நாவல்கள் இறை மறுப்பாளரும் மானுடவாதியுமான ஒருவரால் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டவை. இந்நாவல்களின் முடிவில் பழுத்த கிழமான (ஆபிரகாமிய தேவனை) வில்லனை குழந்தைகள் கொல்கின்றன. பிலிப் புல்மான் பேட்டி ஒன்றில் சி.எஸ்.லூயிஸின் நார்னியாவில் நிரம்பியுள்ள கிறிஸ்தவ பிரச்சாரத்துக்கு எதிர்வினையாகவும், குழந்தைகள் மனதில் நிரப்பப்படும் கிறிஸ்தவ இறை நம்பிக்கை சிதைப்பதற்காகவும் குறிப்பிட்டதாக சர்ச்சை கிளம்பியது. என்ற போதிலும் சில ஓரளவு திறந்த மனம் படைத்த கிறிஸ்தவ பெருந்தலைகள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். (நிச்சயமாக எவாஞ்சலிஸ்ட்கள் மற்றும் நாசி இளைஞர் முகாமில் பயிற்சி பெற்ற இன்றைய போப்பாண்டையும் இவரை ஆதரிக்கமாட்டார்கள் என கட்டாயமாக நம்பலாம்.) இந்த திரைப்படத்தின் மூலக்கதை குறித்து பிலிப் புல்மானின் பேட்டியிலிருந்து ஒரு பகுதி:
Q:You’re not really giving us any clues to the source of the extreme antipathy to the Church in your books.


Philip Pullman : Well, all right, it comes from history. It comes from the record of the Inquisition, persecuting heretics and torturing Jews and all that sort of stuff; and it comes from the other side, too, from the Protestants burning the Catholics. It comes from the insensate pursuit of innocent and crazy old women, and from the Puritans in America burning and hanging the witches – and it comes not only from the Christian church but also from the Taliban.

Every single religion that has a monotheistic god ends up by persecuting other people and killing them because they don’t accept him.Wherever you look in history, you find that. It’s still going on.


ஒவ்வொரு இந்திய குழந்தையும் (பெரியவர்களும் கூடத்தான்) கட்டாயம் காணவேண்டிய திரைப்படம் இது. இத்திரைப்படத்தின் வலைத்தளம்: http://www.goldencompassmovie.com/
இங்கே சில அருமையான சைக்காலாஜிக்கல் சுய-பரிசோதனை கருவிகள் உள்ளன. அதில் என்னை நானே அக-முகம் பார்த்த போது நான் கண்டது கீழே... இதை நீங்க ஒத்துக்கிறீங்களா அப்படீங்கறதை கீழே 'கிளிக்'கி நீங்களும் சொல்லலாம்.

ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆர்கனைஸர் பத்திரிகையில் இத்திரைப்படம் குறித்து வெளியான விமர்சனம் இங்கே

1 Comments:

Anonymous Anonymous said...

செவ்விந்தியர்களின் நம்பிக்கை ஆயிற்றே இது?

அவர்களும், ஒவ்வொரு மனிதனின் ஆத்மாவும் ஒரு animuஆல் ஆனது என்று நம்புகிறார்கள்.

இந்த திரைப்படத்தின் விமர்சனம் அறிய ஆவல்.

8:11 AM, January 21, 2008  

Post a Comment

<< Home